இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, April 22, 2017

தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை: அரசு இ-சேவை மையம் மூலம் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்


கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்க விரும்புவோர், அரசு இ-சேவை (இணைய சேவை) மையங்களை நாடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான கட்டணத்தைச் செலுத்தி உரிய முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது, ஆன்-லைன் முறை பின்பற்றப்படுகிறது. என்னென்ன இணைப்பு: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது மாணவரின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் ஆவணம் 400 கே.பி.,க்கு மிகாமல் இருப்பது அவசியம்.

இதனை கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டில் இருந்தபடியே செய்வது சிரமம். இந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அரசு இ-சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கும் நடைமுறையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. என்ன செய்ய வேண்டும்: அரசு இ-சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பிப்பதற்கு முன்பாக, நாம் தேர்ந்தெடுத்துள்ள பள்ளிகளின் பட்டியலை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஐந்து பள்ளிகள் வரை விருப்பம் தெரிவிக்கலாம். எனவே, இணைய சேவை மையத்துக்குச் சென்று பள்ளிகளைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக, வீட்டிலேயே பள்ளிகளைத் தேர்வு செய்து பட்டியலிடுவது சிரமத்தைத் தவிர்க்கும்.

இ-சேவை மையங்களுக்கு தேவையான சான்றிதழ்களை எடுத்துச் சென்றால் அங்கேயே ஸ்கேன் செய்து, நிர்ணயிக்கப்பட்ட அளவில் அதனை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும், அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கும்போது நாம் சரியான முறையில் தகவல்களைத் தெரிவித்து அவை உரிய வகையில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்த பிறகே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தொடக்க கல்வி அலுவலரின் இரண்டாவது சுற்றரிக்கை


மாறுதல் படிவம் PDF

Click below

https://app.box.com/s/yx8ngny8kwgpg388jb9aapdq8gahn6rv

தொடக்கக் கல்வி இயக்ககம் -2017-2018 ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /மாநகராட்சி /அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் /பட்டதாரி /இடைநிலை /உடற்கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் புதிய விண்ணப்பம்



Friday, April 21, 2017

புதிய குடும்ப அட்டைக்கு இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு


தமிழக அரசு இணைய சேவை மையங்கள் மூலம் புதிய குடும்ப அட்டை பெற வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராம வறுமை ஒழிப்புக் குழுக்கள் மூலம் இப்போது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இணைய சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இச்சேவை மையங்கள் மூலம் வருமானம், ஜாதி, இருப்பிடம், இறப்புச் சான்றுகள் என பல்வேறு வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன.

இச்சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணம், பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, சென்னை பெருநகர குடிநீர் வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய குடிநீர் வரி ஆகியவற்றைச் செலுத்தவும் வழி செய்யப்பட்டுள்ளது. வரும் 24 முதல் சேவை: அரசு இணைய சேவை மையங்கள் மூலம் மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு சேவைகளைப் பொது மக்கள் தங்களது இல்லங்களின் அருகிலேயே பெற்று வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, வரும் 24-ஆம் தேதி முதல் அரசு இணைய சேவை மையங்கள் வாயிலாக புதிதாக குடும்ப அட்டை பெறவும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம், செல்லிடப்பேசி எண் மாற்றம் போன்ற சேவைகள் வழங்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

டெட்' தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள்!


'டெட் தேர்வில், வினாத்தாள் வெளியாகாமல், மாணவர்கள், 'காப்பி' அடிக்காமல், கண்காணிக்க வேண்டும்' என, இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், ஏப்., 29, 30ம் தேதிகளில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஏப்., 29ல், 2.37 லட்சம் பேர்; 30ல், ஐந்து லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்காக, தமிழகம் முழுவதும், 1,861 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களுக்கு, வினாத்தாள் கட்டுகள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன; துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட உள்ளனர். பள்ளிக்கல்வி செயலர் உதயச்சந்திரன் உத்தரவுப்படி, பள்ளிக்கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன், டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் காகர்லா உஷா, நேற்று கூட்டம் நடத்தினார்.

அதில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்:

● டெட் தேர்வில் எந்த குளறு படியும்
இல்லாமல், தேர்வை நடத்த வேண்டும்

● யாரும் காப்பி அடிக்காமல், கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்

● வினாத்தாள், 'லீக்' ஆகாமல், தேர்வு துவங்கும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும்

● தேர்வு அறைகளில், போதிய அளவுக்கு, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

● அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு என்றால், தனியார் பள்ளி ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்

● தேர்வு மையங்களில் கடிகாரம், குடிநீர், மின் வசதி, மின் விசிறி வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
● தாமதமாக வரும் தேர்வர்களை, அறைக்குள் அனுமதிக்கக் கூடாது
● பறக்கும் படை அமைத்து, தேர்வு நாளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். பொதுத் தேர்வு போல், இந்த தேர்வை நடத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

Thursday, April 20, 2017

இன்ஜினியரிங் கவுன்சலிங் விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை


இன்ஜினியரிங் கவுன்சலிங் விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண் கட்டாயமல்ல என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.இன்ஜினியரிங் கவுன்சலிங் 2017க்கான அறிவிக்கை ஏப்ரல் 30ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மே 1ம் தேதி முதல் இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 27ம் தேதி கவுன்சலிங்கை தொடங்க அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த கவுன்சலிங்கில் பங்கேற்க ஆதார் எண் கட்டாயமா என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:கவுன்சலிங்கில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களின் சாதிச்சான்றிதழ், குடும்பத்தில் முதல்பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றிதழ், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மாணவர்கள் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பிற மாநிலங்களில் படித்திருந்தால் அதற்கான இருப்பிடச் சான்றிதழ், ஏஐசிடிஇ உள்பட பிற உதவித்தொகை கோரும் மாணவர்கள் வருமான சான்றிதழை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

மே 1ம் தேதி முதல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பித்து தனித்துவ எண் (யுசர் ஐடி), கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) பெறலாம். அதன்பின், பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளிவந்ததும் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழின் நகல்களை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கவுன்சலிங் விண்ணப்பிக்கவோ, பங்கேற்கவோ ஆதார் எண் கட்டாயமல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.

விடுபட்ட வாக்காளர்களுக்காக ஜூலை 1ல் சிறப்பு திருத்தப் பணி


கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் சேராமல் விடுபட்டோருக்காக, சிறப்பு சுருக்க திருத்தப் பணி ஜூலை 1ல் துவங்குகிறது. கடந்த ஆண்டு செப்.1 முதல் செப்.30 வரை வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி நடந்தது. வாக்காளர்களின் இறுதி பட்டியல் ௨௦௧௭ ஜன.5 ல் வெளியிடப்பட்டது.

இதில், 18 மற்றும் 19 வயது பூர்த்தி அடைந்தோரில் பலர் சேர்க்கப்படாமல் விடு பட்டது தெரியவந்தது.இதனால் விடுபட்டோர்களுக்காக மீண்டும் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணியை ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும், வாக்குச்சாவடிகளில் 2 நாட்கள், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன. 2017 ஜன.1ல் 18 மற்றும் 19 வயது பூர்த்தியடைந்தோர் வாக்காளர்களாக சேரலாம். மற்றவர்கள் செப்டம்பர் (அ) அக்டோபரில் நடக்கும் திருத்தப் பணியின்போது சேர்ந்து கொள்ளலாம்

உதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வேண்டும்


'ஐந்து துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, உதவி தொடக்க கல்வி அலுவலர் பணிமாறுதல் பெற முடியும்' என, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் 'சீனியாரிட்டி' படி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் வழங்கப்படுகிறது.

தற்போது 2017 க்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாநில சீனியாரிட்டி பட்டியலை கல்வித்துறை தயாரித்து வருகிறது. இதில், 2010 டிச.31 வரை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோர் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான பரிந்துரைகளை அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் இயக்குனரகத்திற்கு அனுப்ப உள்ளனர். பட்டியலில் இடம் பெறுவோர் 2016 டிச.31க்குள் பள்ளி துணை ஆய்வாளர், சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு, மாவட்ட அலுவலக நடைமுறை உள்ளிட்ட 5 துறை மற்றும் சிறப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அன்றைய தேதியில் 57 வயது பூர்த்தி அடைந்தோராக இருக்க கூடாது. குற்றவழக்குகள், ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்க கூடாது என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த 5 தேர்வுகளில் தேர்ச்சி பெறாதோரை பரிந்துரை செய்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

வியாபாரம் செய்தால் பள்ளி அங்கீகாரம் ரத்து


பாடம் கற்றுத் தருவதை விட்டு, புத்தகம், சீருடை, புத்தக பை விற்பனையில் ஈடுபட்டால், பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், பாட புத்தகம், லேப் - டாப் மற்றும் சீருடை உள்ளிட்டவை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஆனால், தனியார் பள்ளிகளில், இந்த பொருட்களை, பெற்றோர் விலை கொடுத்து வாங்க வேண்டும். இதில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மாணவர்களுக்கான புத்தகங்கள், நோட்டுகள், சீருடை, 'ஷூ' போன்றவற்றை விலைக்கு விற்கின்றன. இதில், ஒவ்வொரு பள்ளியும், பல லட்சம் லாபம் பார்ப்பதாக, பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், அங்கீகார பிரிவு துணை செயலர், ஸ்ரீனிவாசன் வெளியிட்ட சுற்றறிக்கை: புத்தகம், எழுதுப் பொருட்கள், சீருடை, ஷூ, புத்தகப்பை போன்றவற்றை விற்கும், வணிக ரீதியிலான நடவடிக்கைகளில், பள்ளிகள் ஈடுபடக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், பல பள்ளிகள், வியாபாரத்தில் ஈடுபடுவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பள்ளிகள், தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுடன் மறைமுக ஒப்பந்தம் செய்து, வணிக பணிகளில் ஈடுபடுகின்றன. எனவே, மீண்டும் எச்சரிக்கிறோம்.

வணிக செயல்பாடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தால், அந்த பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அங்கீகார விதிகளின் படி, அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு


ஆசிரியர் நியமனத்தின் போது, அவர்களின் ஆங்கில மொழி மற்றும் பாட திறனை சோதிக்கும் வகையில், கணினி வழி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி உள்ளது.

அரசு பள்ளிகளில், ஒரு சிலரை தவிர, மற்ற ஆசிரியர்கள், ஆங்கில மொழி திறனின்றி உள்ளனர். இதற்காக, ஆங்கில மொழி அறிவு உடைய ஆசிரியர்களை, புதிதாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, ஆங்கில திறன் கொண்டவர்களை, ஆசிரியர்களாக தேர்வு செய்ய, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு முறை மாற்றப்பட உள்ளது.

முதலில் போட்டி தேர்வுகளுக்கான, விண்ணப்ப பதிவு, 'ஆன்லைனில்' மேற்கொள்ளும் திட்டம் அறிமுகமாகிறது. அதேபோல், வரும் காலங்களில் ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வையும், கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக, மற்ற துறைகளுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளை, கணினி வழி தேர்வாக மாற்ற, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடக்க கல்வி பணிமாறுதல் கலந்தாய்வு அட்டவணை....

பொது மாறுதல் கலந்தாய்வு விதி முறைகள்

https://app.box.com/s/pl4jc3kymt1j4uwxt3q2ot2o3pavkokb

மாறுதல் விண்ணப்பம்-Transfer application form

Click below

https://app.box.com/s/ykj46ar76l0525zu5du2mp0dgnp6s2ui

ஆசிரியர் தகுதித்தேர்வு__பல்வேறு வழக்குகளின் மீது24_01_17ல் பிறப்பிக்கப்பட்ட இறுதி ஆணை தெளிவுரைகள்




மாறுதல் கலந்தாய்வு தேதி விபரம்

ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2017 - 18 தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.&G.o




மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு

ஆசியர்கள் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மே 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மாவட்ட வாரியாக கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பணி மாறுதலுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தொழிலாளர் சேம நலநிதிக்கான வட்டிவிகிதம் குறைப்பு: மத்திய அரசு அதிரடி!


இந்த நிதியாண்டிலிருந்து பி.எப் எனப்படும் தொழிலாளர் சேம நலநிதிக்கான வட்டிவிகிதம் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:

இந்த 2016-17-ஆம் நிதியாண்டிலிருந்து பி.எப் எனப்படும் தொழிலாளர் சேம நலநிதிக்கான வட்டிவிகிதம் தற்பொழுதுள்ள 8.80% என்னும் அளவில் இருந்து 8.65% ஆக குறைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, April 19, 2017

மாணவர் சேர்க்கை குறித்த அறிவுரை


பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் அட்டை: அமைச்சர் செங்கோட்டையன்


அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தன் விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் அட்டை வழங்கப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழக அரசின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனைக் கருத்தரங்கம் சென்னையில் உள்ள 10 மையங்களில் கடந்த இரு நாள்களாக நடைபெற்றது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் மாணவர்களுக்கு ஆலோசனைக் கையேட்டை வழங்கி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியது:

வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம்: அரசுக் கல்லூரிகள், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் சுமார் 1.21 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களின் மேற்படிப்பு, வேலைவாய்ப்புகள், எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தக் கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 278 பாடங்கள் குறித்த விவரம், கல்வி நிறுவனங்களின் முகவரி, மேற்படிப்புகளுக்கான சலுகைகள், விண்ணப்பிக்கும் முறை உள்பட பல்வேறு தகவல்கள் உள்ளன. இதன் மூலம் குறிப்பிட்ட 14 பாடங்களை மட்டுமே கற்றுவரும் மாணவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும்.

ஸ்மார்ட் அட்டை வழங்கப் பரிசீலனை: வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்தை அளிப்பதே இந்தக் கையேட்டின் நோக்கம். தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாகவே உள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களில் 5 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக உள்ளன. குறிப்பாக ஒரு வகுப்புக்கு 2 ஆசிரியர்கள் என்ற நிலை உள்ளது. அது சரி செய்யப்படும். அதற்காகத்தான் ஸ்மார்ட் அட்டை திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளோம். இதன் மூலம் ஒரு வகுப்பில் எவ்வளவு மாணவர்கள் படிக்கின்றனர், எவ்வளவு ஆசிரியர்கள் தேவை எனத் தெரியும்.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் அட்டை விரைவில் வழங்கப்படும். இதில் மாணவரின் பெயர், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி நடத்தை, ரத்த வகை, பெற்றோர் வருமானம், ஆதார் எண் உள்பட தன் விவரங்கள் இடம் பெறும். மருத்துவ சிகிச்சைத் திட்டம்: மாணவர்கள் பெற்றோரை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்தும், தேசப்பற்று குறித்தும் அவர்களுக்கு சொல்லித்தரும் திட்டம் உள்ளது.

மாணவர்களுக்கோ அவர்களது பெற்றோருக்கோ விபத்து ஏற்பட்டால் மருத்துவச் சிகிச்சை அளிக்கும் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

வருங்கால வைப்பு நிதி: உயிர்ச் சான்று சமர்ப்பிப்பது அவசியம்


வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் உயிர்ச் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பி.எஃப். நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பி.எஃப். மண்டல ஆணையர் வி.எஸ்.எஸ்.கேசவராவ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓய்வூதியதாரர்கள் இணையதளம் மூலமாகவும் உயிர்ச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். சான்றிதழை சமர்ப்பிக்காவிடில், அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காதவர்களுக்கு மே மாதத்திலிருந்து ஓய்வூதிய பலன்கள் நிறுத்தப்படும். ஓய்வூதியதாரர்கள் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்

தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்தல் - மாவட்ட வாரியாக முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தல் - DEE செயல்முறைகள்



பொறியியல் படிப்பில் சேர மே 1 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு


பொறியியல் படிப்பில் சேர மே 1 முதல் 31 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சமர்பிக்க ஜூன் 3 கடைசி நாள் ஆகும். ஜூன் 20ல் ரேண்டம் எண் வெளியிடப்படும் அதனை தொடர்ந்து ஜூன் 22ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

ஜூன் 27-ல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடத்தப்படும். தமிழகத்தில் நீட் தேர்வு நடக்காது என எதிர்பார்க்கிறேன்.

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவி விரைவில் நிரப்பபடும். கவர்னர் வித்யாசாகர் ராவ் விரைவில் துணைவேந்தர்களை நியமிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

மாறுதல் பெற்று ஈராசிரியர் பள்ளியில் இருந்து விடுவிக்கப்படாமல் இருக்கும் ஆசிரியர்கள் உடன் விடுவிப்பு செய்யப்பட வேண்டும் இயக்குநர் செயல்முறைகள்