இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, May 24, 2016

பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஈரோடு மாவட்டம் 98.48 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 86.49 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் கடைசி இடத்தை பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம்:

கன்யாகுமரி - 98.17

திருநெல்வேலி - 95.3

தூத்துக்குடி - 96.93

ராமநாதபுரம் - 97.1

சிவகங்கை - 96.66

விருதுநகர் - 97.81

தேனி - 96.57

மதுரை - 95.68

திண்டுக்கல் - 92.57

ஊட்டி - 93.25

திருப்பூர் - 95.62

கோவை - 96.22

ஈரோடு - 98.48

சேலம் - 94.21

நாமக்கல் - 96

கிருஷ்ணகிரி - 95.05

தர்மபுரி - 94.77

புதுக்கோட்டை - 94.46

கரூர் - 96.67

அரியலூர் - 92.52

பெரம்பலூர் - 96.52

திருச்சி - 95.92

நாகப்பட்டினம் - 89.43

திருவாரூர் - 89.33

தஞ்சாவூர் - 95.39

புதுச்சேரி - 92.42

விழுப்புரம் - 88.07

கடலூர் - 89.13

திருவண்ணாமலை - 89.03

வேலூர் - 86.49

காஞ்சிபுரம் - 92.77

திருவள்ளூர் - 90.84

சென்னை - 94.25

துபாய் - 100

பத்தாம் வகுப்பு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 28) வரை விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, தேர்வர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய சனிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம். தனிதேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய பள்ளி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத்துக்கு ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு ரூ. 205-ம் மறுகூட்டலுக்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மறுகூட்டலுக்குக் கட்டணம் செலுத்தும் முறை:

மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே மறுகூட்டல் முடிவுகளை தேர்வர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் முடிவுகள் புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இந்தப் பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது.

தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகளை தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறியலாம். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய, கிளை நூலகங்கள் ஆகியவற்றில் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: தேர்வர்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன், மாணவர்கள் பள்ளிகளிலும்,தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றலாம்.

சிறப்பு துணைத் தேர்வு: தேர்வெழுத பதிவுசெய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது என்று அரசுத் தேர்வுகள் இயக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விலையில்லா,சீருடை மற்றும் புத்தகங்கள்-1முதல் 8 வகுப்பு வரை 25/5/16 முதல் 31/5/16 வரை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு 1/6/16 அன்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த இயக்குனர் உத்திரவு

Monday, May 23, 2016

வங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ஒரு முறை வட்டி


வங்கி சேமிப்பு கணக்குக்கு தினமும் வட்டி கணக்கிட்டு, 90 நாட்களுக்கு, ஒரு முறை அளிக்கும் நடைமுறை வாடிக்கையாளருக்கு கூடுதல் பயன் அளிக்கும்; வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்' என, வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில், வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்குக்கு, 3.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. சேமிப்புக் கணக்கில், மாதத்தின், 10ம் தேதி முதல், 30ம் தேதி வரை உள்ள குறைந்த பட்ச சேமிப்பு தொகைக்கு வட்டி கணக்கிடப்பட்டது. இந்த வட்டித்தொகையை, ஆறு மாதங்களுக்கு, ஒரு முறை வங்கிகள் அளித்தன. தற்போது சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கான வட்டி, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரத்துக்கு, ஒரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது.

இந்த வட்டித் தொகை, மூன்று மாதத்துக்கு, ஒரு முறை அளிக்கப்படும். இதுகுறித்து, இந்தியன் வங்கி மூத்த அதிகாரி சீனிவாசன் கூறியதாவது:வாடிக்கையாளர்கள், 'டெர்ம் டிபாசிட்' எனப்படும், பருவ கால வைப்புத் தொகையை செலுத்தி வட்டி பெற, பருவ காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். பருவ காலம் முடிவதற்கு முன், வைப்புத் தொகையை திரும்ப எடுக்கும் போது முழு வட்டி கிடைக்காது. சில வங்கிகள், வைப்புத் தொகை காலம் முடிவதற்கு முன் எடுக்கப்படும் பணத்துக்கு அபராதமும் விதிக்கின்றன.

இந்த நிலையில் சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது; 24 மணி நேரத்துக்கு ஒரு முறை, வட்டி கணக்கிட்டு, மூன்று மாதங்களுக்கு, ஒரு முறை வழங்குவது வாடிக்கையாளர்களுக்கு பலன் தரும். வங்கியும், சேமிப்பு கணக்கில் உள்ள தொகையை தேவையான வகையில் பயன்படுத்த முடியும்.வாடிக்கையாளர்களை ஈர்க்க, சில தனியார் வங்கிகள், சேமிப்பு கணக்குக்கு, 6 சதவீதம் வரை வட்டி அளிக்கின்றன. சேமிப்புக் கணக்கில் இருக்கும் முதல், 10 ஆயிரம் ரூபாய்க்கும், அதற்கான வட்டிக்கும் வருமான வரி விலக்கும் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்

பத்தாம் வகுப்பு தற்காலிகச் சான்றிதழ்

தமிழகத்தில் கடந்த 15.03.2016 முதல் 13.04.2016 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 25.05.2016 அன்று காலை 09.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.

01.06.2016 முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து என்ற http://www.dge.tn.nic.in/ இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், அன்றே பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

Sunday, May 22, 2016

கல்வித் தகவல் மேலாண்மை முறையில் 9,40,000 மாணவர்களின் விவரங்கள் பதிவு


கல்வித் தகவல் மேலாண்மை முறையில் இதுவரை 9,40,000 மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பதிவு செய்வதற்கான கால அவகாசம் மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்கள் ஆண்டுதோறும் கல்வி தகவல் மேலாண்மை முறையில்(இ.எம்.ஐ.எஸ்.) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, 2015-16-ஆம் கல்வியாண்டிற்காக விவரங்களை மேம்படுத்தும் பணியை மே 10-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்தப் பணியை நிறைவு செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கோரியிருந்தனர். அதன்படி, மே 28-ஆம் தேதிக்குள் இந்தப் பணியை நிறைவு செய்ய கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளதாவது:- 15 நாள்களில் அனைத்து மாவட்டங்களிலும் 9,40,000 மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. இந்தப் பணியில் சர்வரின் பயன்பாட்டை விரைவுபடுத்தவும், சர்வரின் செயல்பாட்டில் தொய்வு ஏற்படாத வகையிலும் கூடுதல் சர்வர்கள் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தேர்வுத்துறை எச்சரிக்கை


தமிழகத்தில் மே 25ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் சீலிடப்பட்ட கவர்களில் உள்ள மதிப்பெண்ணை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.மே 17ல் காலை 10:31 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஆனால், காலை 9:00 மணிக்கே பல மாவட்டங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விவரம் புகைப்படங்களுடன் 'வாட்ஸ் ஆப்'ல் வெளியாகின. இதனால் தேர்வுத்துறை அதிர்ச்சி அடைந்தது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது. இந்நிலையில், 'மே 25ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9:31 மணிக்கு வெளியாகவுள்ளன. ஆனால், அதற்கு முன் மதிப்பெண் பட்டியல் விவரங்களை அறியும் முயற்சியில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. அதிகாரி ஒருவர் கூறியதாவது

:பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான முதல்நாள் மாவட்ட வாரியான மாணவர் தேர்ச்சி விவரத்தை 'சிடி'யாக ஒவ்வொரு முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டன. மேலும் 'நோடல்' அலுவலகங்கள் மூலம் பள்ளிகள் வாரியான மாணவர் மதிப்பெண் பட்டியலும் 'சீல்' வைக்கப்பட்ட கவர்களில் அனுப்பப்பட்டன. இந்த கவர்கள் காலை 10.31 மணிக்கு பிரித்து அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். ஆனால், கிருஷ்ணகிரி உட்பட சில மாவட்டங்களில் காலை 9.00 மணிக்கு சில பள்ளிகளில் சீலிடப்பட்ட கவர்கள் பிரிக்கப்பட்டன.

இதுகுறித்து விசாரணை நடக்கிறது. மே 25ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் நிலையில் 9.31 மணிக்கு தான் சீலிடப்பட்ட கவர்களை பள்ளிகளில் பிரிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் கவர்கள் பிரித்து விதிமீறலில் பள்ளிகள் ஈடுபட்டால் அப்பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்

ஜூன் 21ல் யோகா தினம் :பள்ளிகளுக்கு உத்தரவு


'அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், ஜூன், 21ல், யோகா தினம் கொண்டாட வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாரம்பரிய உடற்பயிற்சி கலையான யோகாவை, உலகம் முழுவதும் பிரபலப்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது.

இதன் பலனாக, ஜூன், 21ம் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என, ஐ.நா., சபை அறிவித்தது. இதன்படி, இரண்டு ஆண்டு களாக, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் அனைத்து பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், ஜூன், 21ம் தேதி, யோகா பயிற்சி வகுப்புகள் மற்றும் யோகா கண்காட்சி போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்த, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., ஆகியவை சுற்றறிக்கை அனுப்பியுள்ளன

Friday, May 20, 2016

மெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்பு


தனியார் மெட்ரிக் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கு, மே, 30 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் (பொறுப்பு) ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார். இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் - 2009ன் படி, அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு, எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது;

இந்த பிரிவில், மாணவர் சேர்க்கைக்கு நன்கொடையோ, கல்விக் கட்டணமோ கிடையாது; கல்விக் கட்டணத்தை, தமிழக அரசே அந்த பள்ளிகளுக்கு வழங்கும். இந்நிலையில், 2016 - 17ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, மே, 18 வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. ஆனால், இது குறித்து, பெரும்பாலான பெற்றோருக்கு தெரியவில்லை. இதையடுத்து, விண்ணப்பங்கள் வழங்கும் தேதியை நீட்டித்து, தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் (பொறுப்பு) ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மே, 30 வரை பள்ளிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும்; மே, 31 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் இன்று பெறலாம்


பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பள்ளிகளில் பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 17ம் தேதி வெளியிடப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மே 19ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாணவர்கள் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், இன்று முதல் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளிலும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

Wednesday, May 18, 2016

பிளஸ் 1 சேர்க்கையில்இட ஒதுக்கீடு கட்டாயம்


'பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை, அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீட்டின்படி நடத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ள உத்தரவு:

பிளஸ் 1 வகுப்பில், பிற்படுத்தப்பட்டோருக்கு, 30 சதவீதம்; மிக பிற்படுத்தப்பட்டோருக்கு, 20; எஸ்.சி., பிரிவினருக்கு, 18; எஸ்.டி., பிரிவினருக்கு, 1; இதர பிரிவினருக்கு, 31 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த விதிகளை மீறும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மாணவர்களிடம் விண்ணப்பம் பெறும்போதே, தனியாக பதிவேடு வைத்து, இன வாரியாக விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

மாணவர் சேர்க்கைக்கு முன், தலைமை ஆசிரியர் தலைமையிலான குழு, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, இடஒதுக்கீட்டின் படி பட்டியல் தயாரிக்க வேண்டும். ஆக., 31க்குள் இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கை குறித்த விவரத்தை, அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் ஓட்டுப்பதிவு பல மடங்கு உயர்வு


கடந்த இரண்டு தேர்தலை விட, இம்முறை அதிகளவில், தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், ஒரு லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகின. அடுத்து, 2014 லோக்சபா தேர்தலில், 85 ஆயிரம் தபால் ஓட்டுகள் பதிவாகின. இம்முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், வேன் டிரைவர்கள் என, மொத்தம், 6.26 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.இவர்களில், 14ம் தேதி வரை, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர், தபால் ஓட்டை பதிவு செய்தனர். அதன் பின்னும் ஏராளமானோர், தபால் ஓட்டு போட்டுள்ளனர். எனவே, இம்முறை, 4 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகியிருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ விண்ணப்பம் வினியோகம்


ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்புக்கு, வரும் 20ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படும்' என, கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தொடக்க கல்வி டிப்ளமோ படிப்பில், ஒற்றை சாளர முறையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், மே 20ம் தேதி முதல், ஜூன் 10ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில், விண்ணப்பங்களை பெறலாம். பட்டியலினத்தவர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர், 250 ரூபாய் செலுத்தியும், இதர பிரிவினர், 500 ரூபாய் செலுத்தியும் விண்ணப்பங்களை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

200 ஆசிரியர்களுக்கு இரண்டு தபால் ஓட்டுஎண்ணிக்கையில் குளறுபடி ஏற்படுமா?


சட்டசபை தேர்தலில், 200 ஆசிரியர்களுக்கு, இரண்டு தபால் ஓட்டுகள் கிடைத்துள்ளன. இவை, ஓட்டு எண்ணிக்கையில் சேருமா, சேராதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, தபால் ஓட்டுகள் போட அனுமதி அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள், தேர்தல் பணிக்கான பயிற்சியில் இருந்தபோது, விண்ணப்பம் வழங்கப்பட்டு, விவரங்கள் பெறப்பட்டன. அவற்றை சரிபார்த்த பின், தபால் ஓட்டு சீட்டுகள் வழங்கப்பட்டன. இந்த ஓட்டு சீட்டு வழங்குவதில், பல இடங்களில் குளறுபடி ஏற்பட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, தபால் ஓட்டு சீட்டுகள் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, கலெக்டர் அலுவலகங்களை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்திய பின், அவர்களுக்கு, தபால் ஓட்டு சீட்டுகள் வழங்கப்பட்டன.

இதன்படி, கோவை மாவட்டத்தில், கலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், 200 பேர், தங்களுக்கு தபால் ஓட்டு இல்லை என, கலெக்டர் அலுவலகத்தில், 14ம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது, அந்த இடத்திலேயே தபால் ஓட்டு சீட்டுகள் வழங்கப்பட்டு, அவர்கள் அங்கேயே ஓட்டு போட்டனர்.இந்நிலையில், இந்த, 200 ஆசிரியர்களுக்கும், மேலும், ஒரு தபால் ஓட்டு சீட்டு, அவர்களின் வீட்டு முகவரிக்கு, நேற்று முன்தினம் வந்துள்ளது. இதனால், ஆச்சரியம் அடைந்த ஆசிரியர்கள் பலர், இரண்டாவது ஓட்டையும் பதிவு செய்துள்ளனர்.

இன்று காலை, 8:00 மணி வரை தபால் ஓட்டுப்பதிவுக்கு அவகாசம் உள்ளது. சில ஆசிரியர்கள் மட்டும், தங்களுக்கு இரண்டாவது ஓட்டு சீட்டு வந்துள்ளதாக, அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனால், 180க்கும் மேற்பட்டோர், இரண்டாவது தபால் ஓட்டையும் பதிவு செய்துள்ளனர். இதனால், 'தபால் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்படும்' என, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tuesday, May 17, 2016

கோவில்பட்டியில் பரபரப்பு : வாக்குப்பதிவு அலுவலர்கள் சம்பளம் வாங்க மறுப்பு


தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கு குறைவாக ஊதியம் வழங்குவதா என எதிர்ப்பு தெரிவித்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் சம்பளம் வாங்க மறுத்தனர். இதனால் மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்வதில் 1 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் நேற்று 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலருக்கு சம்பளமாக ரூ.1700ம் மற்ற 4 பேரில் 3 பேருக்கு ரூ.1300-ம், பி2பி பிரிவின்கீழ் 4வது ஊழியருக்கு ரூ.600 என்ற அடிப்படையில் தேர்தல் கமிஷனால் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி புதுக்கிராமத்தில் எண் 175 மற்றும் எண் 176 ஆகிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

175வது வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலராக எட்டயபுரம் அருகே தலைக்காட்டுபுரம் அரசு பள்ளி தலைமையாசிரியரும், தமிழ்நாடு அரசு ஆரம்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளருமான விளாத்திகுளத்தை சேர்ந்த சுப்புராஜ் என்பவர் பணியில் ஈடுபட்டார். இதுபோல் அவருக்கு உதவியாக மேலும் 4 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்கள் இரவு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு இருந்தன. இன்று அதிகாலை 5.45 மணி அளவில் கோவில்பட்டி தொகுதி மண்டல தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்றுக்கொள்ள அங்கு சென்றனர்.

அப்போது வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலர் சுப்புராஜ், வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்ட சக ஆசிரியர்கள் 4 பேருக்கு சம அளவில் ரூ.1300 வழங்க வேண்டும் என்றும், பாரபட்சமாக ஒரு ஊழியருக்கு மட்டும் ரூ.600 வழங்குவதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார். இதேபோல தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி பணி ஆசிரியர்களுக்கு முரண்பாடு இல்லாமல் சம அளவில் ஊதியம் வழங்க வேண்டும் என்று மண்டல தேர்தல் அலுவலர் சுப்பிரமணியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி கவனத்துக்கு கொண்டு செல்வதாக மண்டல தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன் உறுதியளித்தார். ஆனாலும் அர்கள் சம்பளம் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். இதுதொடர்பாக அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் எழுதி வாங்கினர். இதைத்தொடர்ந்து மண்டல தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கிருந்து பெற்று தூத்துக்குடிக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

நாளை முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்


பிளஸ் 2 பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை வியாழக்கிழமை (மே 19) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 19-ஆம் தேதி முதல் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் அளித்து தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் மே 21-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.