இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, February 01, 2016

பொதுத் தேர்வு மாணவர்களுக்கு 'யுனிக் ஐ.டி.,' : தேர்வுத்துறை ஏற்பாடு


''பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 'யுனிக் ஐ.டி.,' எண்கள் (தனித்துவ அடையாள எண்) வழங்கப்படவுள்ளது,'' என தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு பொது தேர்வை இந்தாண்டு 10 லட்சத்து 23 ஆயிரத்து 538 பேர் ரெகுலரிலும், 45 ஆயிரம் பேர் தனித் தேர்வர்களாகவும், பிளஸ்2 தேர்வை எட்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் எழுதவுள்ளனர். பொது தேர்வு விடைத்தாள் முதல் பக்கத்தில் (டாப் சீட்) மாணவர்களின் புகைப்படம், 'பார்கோடிங்' முறை என அடுத்தடுத்து தேர்வு துறை சார்பில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு 14 இலக்கம் கொண்ட 'யுனிக் ஐ.டி.,' எண் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதில், எந்த வகுப்பு, தேர்வு எழுதும் மாதம், ஆண்டு, மாவட்டம் 'கோடு' எண், ரெகுலர் என்றால் 'ஆர்', பிரைவேட் என்றால் 'பி' ஆகிய எழு குறியீடுகளுடன், ஏழு இலக்க எண்களும் வழங்கப்படும். இதன் மூலம் மார்ச் தேர்வுக்கு பின் அக்டோபரில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனியாக பதிவுஎண் வழங்காமல், 'யுனிக் ஐ.டி.,' எண்களையே பயன்படுத்தலாம். இதன்மூலம் மாணவர்களுக்கு 'ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்' கிடைக்கும். பத்தாம் வகுப்பில் வழங்கும் இந்த எண்ணை, பிளஸ் 2 தேர்விலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு முதல் மாணவர்களின் 'பதிவு எண்' போன்று விடைத்தாளின் முதல் பக்கத்திலும், மதிப்பெண் சான்றிதழிலும் 'யுனிக் ஐ.டி.,' எண்ணும் இடம்பெறும். பிளஸ் 2 மாணவர்களுக்கு 90 சதவீதம் இப்பணி முடிந்தது. பிப்ரவரிக்குள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த எண் வழங்கப்படும், என்றார். முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உடனிருந்தார்.

Sunday, January 31, 2016

TNPSC new members


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) நிர்வாகக் குழுவுக்கு 11 பேர் புதிய உறுப்பினர்களை ஆளுநர் ரோசய்யா நியமனம் செய்துள்ளார்.

புதிய உறுப்பினர்களின் பட்டியல் விவரம்:

1. பிரதாப் குமார்

2. சுப்பையா

3. முத்துராஜ்

4. சேதுராமன்

5. பாலுசாமி

6. மாடசாமி

7. ராமமூர்த்தி

8. கிருஷ்ணகுமார்

9. சுப்பிரமணியன்

10. புண்ணியமூர்த்தி

11. ராஜாராம்

இவர்கள் அனைவரும் அடுத்த 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை இப்பொறுப்பில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, January 30, 2016

ஓய்வு பெற்ற ஊழியரை நியமிக்க உத்தரவு

அரசு ஊழியர் போராட்டத்தை ஒடுக்க, ஓய்வு பெற்ற பணியாளர்களை நியமிக்குமாறு, அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புகள் சார்பில், பிப்., 10ம் தேதி, காலவரையற்ற வேலைநிறுத்தம் நடக்க உள்ளது. இதற்கு, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில், பிப்., 10ம் தேதி முதல் பணியாற்ற, ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை நியமிக்குமாறு, மாவட்ட சத்துணவுத் துறைகளுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

கே.வி.பள்ளிகளில் 'எம்.பி. கோட்டா' சேர்க்கை 10 ஆக உயர்வு


கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான எம்.பி.,க்கள் ஒதுக்கீடு, ஆறு இடங்களில் இருந்து, 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு எம்.பி.,யும்., ஆறு மாணவர்களை சிபாரிசின் படி, கே.வி., பள்ளிகளில் சேர்க்க முடியும்.

இந்த ஒதுக்கீடு, வரும் கல்வி ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 10 மாணவர்களை எம்.பி.,க்கள் சிபாரிசு செய்யலாம். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை, சி.பி.எஸ்.இ., இயக்குனர் சந்தோஷ் குமார் மல் பிறப்பித்துள்ளார். மேலும், ஒதுக்கீட்டில் சில திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

* லோக்சபா எம்.பி.,க்கள், தங்கள் தொகுதியில் உள்ள, கே.வி., பள்ளிகளுக்கும்; தன் தொகுதியில் பள்ளி இல்லையென்றால், அருகிலுள்ள அடுத்த தொகுதி பள்ளிக்கும் சிபாரிசு செய்யலாம்

* ராஜ்யசபா எம்.பி.,க்கள், தாங்கள் வசிக்கும் தொகுதி அல்லது அதற்கு அருகிலுள்ள தொகுதிக்கு மட்டுமே சிபாரிசு செய்யலாம். நியமன எம்.பி.,க்கள், இந்தியாவிலுள்ள எந்த கே.வி.,க்கும் சிபாரிசு தரலாம்

* இந்த ஒதுக்கீடு, வகுப்பின் மாணவர் எண்ணிக்கைக்கு அதிகமாக இருக்கலாம்.

* சிபாரிசுப்படி மாணவர் சேர்க்கை, கல்வி ஆண்டு துவக் கம் முதல், ஜூலை 31 வரை மட்டுமே நடக்கும். அதன்பின், சிபாரிசை ஏற்க முடியாது

** முதல் வகுப்புக்கு முந்தைய கே.ஜி., படிப்பு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, எம்.பி.,க்களின் சிபாரிசு பொருந்தாது

* எம்.பி.,க்கள் தங்களுக்கென கே.வி.,தலைமை அலுவலகத்தால் வழங்கப்பட்ட கூப்பன் அல்லது அதற்கான விண்ணப்பம் வழியாக மட்டுமே சிபாரிசு செய்ய வேண்டும்; வேறு வகையிலான எந்த சிபாரிசும் ஏற்கப்படாது

* சிபாரிசில் இருந்தாலும், மாணவர்கள் கே.வி., விதிகளுக்கு உட்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கல்விக்குழு கூடி ஒப்புதல் அளித்துள்ளது. 8,000 இடங்கள் ஒதுக்கீடு சிபாரிசின்படி, இந்தியா முழுவதும் கே.வி.,பள்ளிகளில், 8,000 இடங்கள் ஒதுக்கப்படும். எம்.பி., க்களின் சிபாரிசை நீக்கி, கே.வி., பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டுமென, காங்கிரஸ் ஆட்சியின் போது, மனிதவள மேம்பாடு அமைச்சர் கபில்சிபல் கூறினார்.

அதற்கு எதிர்ப்பு எழுந்ததால் திட்டம் கைவிடப்பட்டது. பின், காங்கிரஸ் ஆட்சியிலேயே, 2012ல், எம்.பி., ஒதுக்கீடு மூன்றிலிருந்து, 6 ஆக உயர்த்தப்பட்டது. தற்போதைய பா.ஜ., ஆட்சியில், எம்.பி.,க்கள் ஒதுக்கீடு, 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

Friday, January 29, 2016

2016ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் 5013 பணியிடங்கள் நிரப்பப்படும்: அருள்மொழி


இந்த ஆண்டிற்கான திட்ட அறிக்கையை தேர்வாணையத்தின் தலைவர் கே.அருள்மொழி இன்று (ஜன.29) வெளியிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5,513 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல்முறையாக சுற்றுலா வளர்ச்சித்துறையில் 5 அதிகாரி பணியிடத்தில் 5 காலியிடங்களும், எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

குருப் 3 பிரிவில் நேர்காணல் இல்லாத பணியில் 36 பணியிடமும், குருப் 4 பிரிவில் 4,931 காலியிடங்கள் என 5,513 பணியிடங்கள் நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய 9 தேர்வுகள் கனமழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டன. அவற்றிக்கான தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பதவி ஏற்றது முதல் 3 மாதங்களில் 12 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, 6 ஆயிரத்து 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று கூறினார். மேலும், இந்த ஆண்டு குருப் 1 பிரிவில் 29 துணை ஆட்சியர் பணியிடங்களும், 8 வணிகவரித்துறை உதவி ஆணையர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், 1 மாவட்டப் பதிவாளர் உட்பட 45 பணியிடங்களும், 65 உதவி சிறை அலுவலர் பணியிடமும், வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியில் 172 பணியிடமும் நிரப்பப்பட உள்ளன.

இந்த ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் அடங்கிய குருப் 2 தேர்வில் நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகள் என பல்வேறு காலியிட விவரங்கள் வர வேண்டி உள்ளது என்று கூறினார். மேலும், புதிய திட்ட அறிக்கையை விவரங்களை அறிய தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மக்கள் தொகை பதிவேட்டுப் பணி : ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வழக்கு

ஆதார் எண்களை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி  ஆசிரியர்கள் கூட்டணி பொதுச் செயலர் பாலசந்தர் தாக்கல் செய்த பொதுநல மனு:

ஆதார் அட்டை எண்களை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்.,) இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இப்பணியில் ஈடுபடுத்த துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். பள்ளி வேலைநாட்களில் அப்பணியை செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, ஆசிரியர்களை கல்விசாராத பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

வெள்ள பாதிப்பால் பலநாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், பள்ளி வேலைநாட்கள் குறைந்துவிட்டது. என்.பி.ஆர்.,பணியால் பள்ளி வேலைநாட்கள் மேலும் குறையும். ஆதார் எண்ணை, என்.பி.ஆருடன் இணைக்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, பாலசந்தர் மனு செய்திருந்தார். நீதிபதிகள் வி.ராமசுப்பிர மணியன், என்.கிருபாகரன் கொண்ட அமர்வு பிப்.,1 க்கு ஒத்திவைத்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு


'தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 10 ஆயிரம் இடங்களுக்கு, இந்த ஆண்டில் தேர்வுகள் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வு அட்ட வணையை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி நேற்று வெளியிட்டார். இந்த அட்டவணைப்படி இந்த ஆண்டில், மொத்தம், 10 ஆயிரம் இடங்களை நிரப்ப, 35 தேர்வுகள் நடக்க உள்ளன. இதில், 23 தேர்வுகள் மூலம், 5,513 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒன்பது தேர்வுகள், 2015 தேர்வு திட்ட அட்டவணையில் அறிவிக்கப்பட்டு, மழை, வெள்ளம் உள்ளிட்ட பல பிரச்னைகளால் நடக்கவில்லை.

இந்த தேர்வுகள் மூலம் இந்த ஆண்டு, 4,531 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். மீதமுள்ள, குரூப் - 2 நேர்முகத் தேர்வு அடங்கிய பதவிகள், குரூப் - 2 நேர்முகத் தேர்வு அல்லாத பதவி மற்றும் கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவிக்களுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் அரசிடம் இருந்து வந்ததும் அறிவிக்கப்படும். அதிக காலிப் பணியிடங்கள் கடந்த, 2015 தேர்வு திட்ட அட்டவணையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகள் மூலம், 6,652 இடங்கள்; புதிய ஆண்டில், 2,401 இடங்கள் என, 9,000 இடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு, அதை விட கூடுதலாக, மொத்தம், 10 ஆயிரம் இடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வில் மாற்றம் வருமா?

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி அளித்த பேட்டி: * உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி அரசு விதிகளின்படி, தேர்வுகள் மற்றும் அதற்கான முடிவு தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது * குரூப் 4 தேர்வில், 4,931; குரூப் 1ல், 45; உதவி ஜெயிலர், 65; வட்டார சுகாதார புள்ளியியலாளர், 177 இடங்கள் நிரப்பப்படும்

* இந்த ஆண்டு முதல், சுற்றுலா துறை அதிகாரி பணியிடத்துக்கு, ஐந்து; 'எல்காட்' துணை மேலாளர் பதவிக்கு, 12 இடங்களுக்கு, முதன் முதலாக டி.என்.பி.எஸ்.சி.,யால் தேர்வு நடத்தப்பட உள்ளது * மூன்று மாதங்களில், 12 வகை பதவிகளுக்கு தேர்வு நடத்தி, 6,054 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன * தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வர, புதிய திட்டம் தயாரிக்கப்படுகிறது. தேர்வர்கள், கவுன்சிலிங்குக்கு சென்னை வரும்போது ஏற்படும் சிரமத்தை போக்க புதிய வசதிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் பயிற்சி: பிப்., 1ல் சான்றிதழ்


டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, பிப்., 1ல், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தொடக்க கல்வி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று, முதலாம் ஆண்டு மற்றும், இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கு, அவர்களின் பயிற்சி நிறுவனங்களில், பிப்., 1 முதல், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் படி, தேர்வு முடிவுகளை அறியலாம்' என, கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை பள்ளிகள் தோறும் பிப்.10ல் வழங்கல்


சுகாதாரத்துறை சார்பில் பிப்.,10ல் பள்ளிகள் தோறும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.மத்தியரசு சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளாக பிப்.,10 கடை பிடிக்கப்படுகிறது. அன்று சுகாதாரத்துறை சார்பில் அங்கன்வாடிமையம், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான 'அல்பென்டசோல்' மாத்திரை வழங்கப்பட உள்ளது.

400 மி.கிராம் ஒன்று முதல் இரண்டு வயதுடைய குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மி.லி,, திரவ மருந்து , 2 முதல் 19 வயது வரையுடையவர்களுக்கு 400 மி.கி., மாத்திரை வழங்கப்பட உள்ளது. சுகாதாரத்துறை செவிலியர்கள் அரசு, தனியார் பள்ளிகளில் சென்று இவைகளை வழங்க உள்ளனர். இதை பள்ளி ஆசிரியர்கள் கண்காணிப்பர். பிப்.,10ல் மாத்திரை சாப்பிடாதவர்களுக்காக பிப்.,15ல் மீண்டும் வழங்கப்பட உள்ளது. ரத்த சோகை சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ ரத்த சோகை நோயால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதை அனைத்து மாணவர்களும் தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும்,” என்றார்.

ஆசிரியர்கள் போராட்டம் இன்று துவக்கம் வகுப்புகள் முடங்கும் அபாயம்


ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், மூன்று நாட்களுக்கு, தமிழகம் முழுவதும் ஆசிரியர் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' சார்பில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதனால், பிப்., 1ல் அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று துவங்கி, வரும் திங்கள் வரை நீடிக்கும், ஜாக்டோ அமைப்பினர் நடத்தும் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள், சனி, ஞாயிற்றுக் கிழமை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, தேர்தல் பணியிலும் ஈடுபட மாட்டார்கள். போராட்டத்தின், மூன்றாவது நாளான பிப்., 1 பள்ளி வேலை நாள். தமிழகம் முழுவதும், 70 சதவீத ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் நடத்த உள்ளதால், அன்று வகுப்புகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அரசு கிடுக்கிப்பிடி வகுப்புக்கு வராமல் போராடும் ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்' போட்டு, ஒரு நாள் சம்பளப் பிடித்தம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

'தற்செயல் விடுப்பு கடிதம் கொடுத்தால் அதை ஏற்கக் கூடாது; போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்களின் பட்டியலை அரசுக்கு தொகுத்து அனுப்ப வேண்டும்' என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மாற்று ஏற்பாடு என்ன? பிப்., 1ல், பள்ளிகளுக்கு முழுக்கு போட்டு விட்டு, ஆசிரியர்கள் மறியல் செய்யச் சென்றால், வகுப்புகள் முடங்கி விடும். எனவே, அந்த நாளில் அனைவருக்கும் கல்வி இயக்ககமான எஸ்.எஸ்.ஏ.,வில் பணியாற்றுபவர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மதிய உணவு திட்டத்தில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மூலம் வகுப்புகளை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர் போராட்டம் நடத்தும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை, அரசு அழைத்து பேசுவதுடன், வாக்குறுதி அளித்த கோரிக்கைகளை உடனடியாக, தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடையும்.

புதிய வாக்காளர்களுக்கு 'கார்ட்டூன்' புத்தகம்


தமிழகத்தில், புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைந்தவர்களுக்கு, ஓட்டு போடுவது எப்படி என்பது தொடர்பான, கார்ட்டூன் புத்தகத்தை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளில், தமிழக தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. கடந்த, 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாநிலம் முழுவதும், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிய வாக்காளர்களாக இணைந்துள்ளனர்.

சட்டசபை தேர்தலில், முதல் ஓட்டை அவர்கள் பதிவு செய்ய இருப்பதால், தயக்கம், தடுமாற்றமின்றி ஓட்டு போடும் வகையில், கார்ட்டூன் வடிவிலான புத்தகம் ஒன்றை, தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. அதில், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் குழந்தைகள் ஓட்டை பதிவு செய்வது போலான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இந்த புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை நகல் எடுத்து, புதிய வாக்காளர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

TNPSC annual planner 2016

Click below

http://www.tnpsc.gov.in/annual-planner.html

VAO exam application status

VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்ப விவரங்கள் வெளியீடு!

29.02.2016 அன்று நடைபெறவுள்ள கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களின் "Application Status" விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையளத்தில் (டிஎன்பிஎஸ்சி) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப எண்ணைக்கொண்டு தங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.

Thursday, January 28, 2016

ஒரே நேரத்தில் இரட்டை டிகிரிக்கு யு.ஜி.சி., தடை


'இனி, ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என, கல்லுாரிகளுக்கு பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர்கள் தினசரி வகுப்பில் படித்து கொண்டே, திறந்தவெளி பல்கலை அல்லது வேறு பல்கலைகளில், தொலைதுார கல்வியில் மற்றொரு பட்டம் படிப்பது வழக்கம். அதே போல், ஒரு தொலை துார கல்வி பட்டம் படித்து கொண்டே, வேறு பல்கலையில் இன்னொரு தொலைதுார பட்டமும் படிப்பர்.இதனால், மூன்று ஆண்டுகளில் அவர்களுக்கு, இரண்டு பட்டப்படிப்பு சான்றிதழ்கள் கிடைக்கும். எந்த வேலைக்கு என்ன தகுதி தேவையோ, அந்த சான்றிதழை பயன்படுத்தி பணிக்கு சேர்ந்து விடுவர்.

தற்போது, 'இதுபோன்ற இரட்டை பட்டப் படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என்று, யு.ஜி.சி.,எச்சரித்துள்ளது. இதுகுறித்து யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பல சட்ட மற்றும் அரசு அமைப்புகளிடம் யு.ஜி.சி., கருத்து திரட்டியதில், இரண்டு டிகிரி முறைக்கு எதிரான கருத்துகள் வந்துள்ளன. எனவே, ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றால், அதற்கான அங்கீகாரத்தில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது. எனவே, கல்லுாரிகள், இரண்டு பட்ட முறையில் மாணவர்களை சேர்க்கவோ அல்லது ஊக்கப்படுத்தவோ வேண்டாம்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால், ஏற்கனவே படித்தவர்களின் நிலை என்ன என, பட்டதாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த குழப்பம் குறித்து, தரமான கல்விக்கான கூட்டமைப்பு ஆலோசகர் பேராசிரியர் சுவாமிநாதன் கூறியதாவது:உயர் கல்வியில் மேலாண்மை செய்யும், என்.சி.டி.இ., - ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் யு.ஜி.சி., போன்றவை, பட்டப்படிப்பு தொடர்பாக, பொதுமக்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்க வேண்டும். தங்கள் Advertisement விருப்பத்துக்கு மாணவர்களை பட்டப்படிப்பில் சேர்த்துக்கொண்டு, அவர்கள் பணத்தையும், நேரத்தையும் செலவிட்டு பட்டம் பெற்ற பின், அவ்வப்போது உத்தரவை மாற்றி விடுவதால், பட்டதாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, குறைந்தது, 20 ஆண்டுகளுக்கு இதுதான் விதிமுறை என, தொலைதுார பார்வையுடன் முன்னோடியான விதிமுறைகளை வகுத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

100 சதவீதம் தபால் ஓட்டு: தேர்தல் அதிகாரி அறிவுரை


தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அனைவரும், தபால் ஓட்டு போடுவதை உறுதி செய்ய வேண்டும்' என, கலெக்டர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவுரை வழங்கினார்.

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ளதால், சென்னை மண்டலத்திற்குட்பட்ட, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கான பயிற்சி, சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில், நேற்று நடந்தது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அனைவரும், தபால் ஓட்டு போடுவதை, அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளர் ஓட்டளிப்பதற்கு வசதியாக, ஓட்டுச்சாவடிகளில் தேவையான வசதி செய்து தர வேண்டும் என, அறிவுறுத்தினர். மேலும், தேர்தலின்போது பயன்படுத்தப்பட உள்ள மென்பொருள் மற்றும் தேர்தல் நிர்வாகம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஜாக்டோ தொடர்பு மறியல் காரணமாக 1.2.2016 அன்று பள்ளியை பார்த்துக் கொள்ள மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள்

TNPSC group II tentative answer key by tnpsc

Click below

http://www.tnpsc.gov.in/answerkeys.html

Monday, January 25, 2016

பிப்ரவரி 1 முதல் அதிரடி நடவடிக்கைரயிலில் மூத்த குடிமகன் சலுகைக்காக தவறான வயது குறிப்பிட்டால் அபராதம்: ரயில்வே அறிவிப்பு


ரயிலில் மூத்த குடிமகன்கள் சலுகையின் கீழ் பயணிப்பவர்கள் தவறான வயதை குறிப்பிட்டு பயணித்தால், பயணச்சீட்டு இன்றி பயணிப்பதாக அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய கெடுபிடி பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலாகிறது என ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயிலில் பயணம் செய்ய தேசிய விருது பெற்ற விளையாட்டு வீரர்கள், நோயாளிகள், தேர்வு எழுதச் செல்லும் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. அதேபோல் மூத்த குடிமகன்களுக்கு முன்பதிவு கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன் என்ற சலுகையை பெற பெண்களுக்கு 58ம் , ஆண்களுக்கு 60ம் குறைந்தபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயணக்கட்டணத்தில் பெண்களுக்கு 50 சதவீதமும், ஆண்களுக்கு 40 சதவீதமும் சலுகை அளிக்கப்படுகிறது.

நோயாளிகள் என்றால் மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே கட்டணச்சலுகை. ஆனால் மூத்த குடிமகன்கள் எந்த காரணத்திற்காக பயணம் மேற்கொண்டாலும் இந்த கட்டண சலுகை உண்டு. அப்படி பயணம் செய்யபவர்கள் பயணச்சீட்டு வாங்கும் போதோ, முன்பதிவு செய்யும் போதோ வயது சான்று ஆவணங்கள் எதையும் காட்டத்தேவையில்லை. ஆனால் பயணத்தில்போது வயதை நிரூபிப்பதற்கான புகைப்படத்துடன் கூடிய உண்மை சான்றை காட்ட வேண்டியது அவசியமாகும். வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மத்திய, மாநில அரசுகள் வழங்கிய ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் அட்டை என 10 வகையான ஆவணங்களை வயது சான்றாக பயணத்தின் போது, கேட்கும் போது காட்ட வேண்டும்.

வயதுக்கான சான்று காட்டாவிட்டால், அவர்களுக்கு பயணச்சீட்டு பரிசோதகர் அபராதம் விதிப்பார். அதாவது மூத்த குடிமகன்கள் சலுகையாக பெற்ற கட்டணத்துடன், அபராதத் தொகையும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இனி மூத்த குடிமகன்கள் சலுகையின் கீழ் பயணம் செய்பவர்கள் வயதுச் சலுகைக்கான சான்ைற காட்டாவிட்டால், அதவாவது தவறான வயதை காட்டி சலுகை பெற்று பயணிப்பவர்கள் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களாக கருதப்படுபவர். அதுமட்டுமின்றி முன்பதிவு செய்து இருக்கை அல்லது படுக்கை உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் தவறான வயதைக்காட்டி சலுகை பெற்றவர்களாக கருதப்படுவர். இப்படி தவறான வயதைக் குறிப்பிட்டு சலுகை பயணம் மேற்கொள்பவர்கள் பிப்ரவரி 1ம் தேதி பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களாக கருத்தப்பட்டு அதற்கான அபராதம் விதிக்கப்படும். இதற்கான உத்தரவை ரயில்வே வாரியம் பிறப்பித்துள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.