இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, July 25, 2015

அரசு பள்ளி பராமரிப்பு நிதியில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தர உத்தரவு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கும் பராமரிப்பு நிதியில், முழு சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் பள்ளி மானிய, பராமரிப்பு நிதி வழங்குகிறது. பள்ளிகளின் எண்ணிக்கையை பொறுத்து 2 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மானிய நிதியில் பள்ளிகளுக்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டும். பராமரிப்பு நிதியில் கழிப்பறை வசதி, கூடுதல் கட்டடம், கட்டடம் பழுது பார்த்தல் போன்ற பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்வது நடைமுறையில் இருந்தது. இவ்வாண்டுக்கான பள்ளி பராமரிப்பு நிதியில் சுகாதார மேம்பாடுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் போதிய கழிப்பறை வசதி, இரு பாலர் பள்ளிகளில் தனித்தனி கழிப்பறை, பழுதான கழிப்பறைகளை பழுது பார்த்தல், கழிப்பறைகளை சுத்தமாக பராமரித்தல், தரை மட்டம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 'செப்டிக் டேங்க்' ஏற்படுத்துதல், தண்ணீர் பற்றாக்குறைக்கு போர்வெல் அமைத்தல் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட எஸ்.எஸ்.ஏ., கல்வித்திட்ட அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

கடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கையில் ஆசிரியர் பணிநிரவல் செய்ய TNPTF எதிர்ப்பு

முந்தைய ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆக., 1 மாணவர் வருகை அடிப்படையில் அடுத்த ஆண்டிற்கான பணியிடங்கள் கணக்கிடப்படுகின்றன.

இந்த பணியிடங்கள் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் மற்ற பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யப்படு கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை மாறுபடும்போது முந்தைய ஆண்டு அடிப்படையில் பணியிடங்களை நிர்ணயம் செய்வது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் குறைவான ஆசிரியர்களும், குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களும் பணிபுரியும் நிலை உள்ளது. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நடப்பாண்டு மாணவர்கள் வருகை அடிப்படையில் பணிநிரவல் செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலர் அமல்ராஜ் கூறியதாவது: சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் சென்ற ஆண்டு அடிப்படையில் பணிநிரவல் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, July 24, 2015

பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாளில் மாற்றம்

இந்தாண்டு பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட உள்ளது" என பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.மதுரையில் மண்டல அளவிலான கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு குறித்தும், இவ்வாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தேவையான நடவடிக்கை குறித்தும் வேலூர், கடலூர், திருச்சி, மதுரை மண்டலங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடந்தன. இதன்பின் நெல்லை, கோவை, காஞ்சிபுரத்தில் நடக்கிறது.மாநிலத்தில் அரசு பள்ளிகளில் 90 சதவீதத்திற்கு மேல் கழிப்பறை வசதி உள்ளது. இதுதவிர எஸ்.எஸ்.ஏ., திட்டம் மற்றும் என்.எல்.சி., சார்பில் 1500 கழிப்பறைகள் வசதி செய்யப்பட்டு நூறு சதவீத வசதியை எட்டியுள்ளது.முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பட்டியல் தயாராக உள்ளது. விரைவில் வெளியிடப்படும்.

இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏராளமான மாணவர்கள் 'சென்டம்' பெற்றனர். புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத் திட்டத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்குமுன் இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் வினாத்தாளில் மாணவர்கள் சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் சில மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் நலன் கருதி கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆசிரியர்கள் எண்ணிக்கை போதுமானதாக உள்ளது. இவ்வாறு கூறினார் . ஆக.,1ல் கலந்தாய்வு ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.,1 அல்லது 2ம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளது.

இந்தாண்டு கலந்தாய்வு நிபந்தனை தொடர்பாக ஆசிரியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'ஒரு பள்ளியில் மூன்று கல்வியாண்டு பணியாற்றியிருக்க வேண்டும்' என்ற அந்த நிபந்தனையை ரத்து செய்ய ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து துறை செயலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவு குறித்து அவர் பரிசீலனை செய்வார் என கண்ணப்பன் தெரிவித்தார்.

TNPSC தேர்வு விபரம் இணையதளத்தில் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், பணி நியமனம் மற்றும் துறைகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தமிழக அரசு துறைகளிலுள்ள பல்வேறு பதவிகளுக்கு, பணி நியமனத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

குரூப் - 1, 1ஏ, 2, குரூப் - 4 என, குரூப் - 8 வரையிலான, படிநிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இந்தப் பதவிகள் என்ன; தேர்வுகள் நடக்கும் முறை என்ன; தங்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பது குறித்து, விண்ணப்பதாரர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யை அணுகிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் மற்றும் பட்டதாரிகளின், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், பதவிகள், துறைகள் மற்றும் தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த விவரங்களை, http://www.tnpsc.gov.in/recruitment-faq.pdf என்ற இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டப்பணத்தில் குளறு படி

பங்களிப்பு ஓய்வூதியமான -- சி.பி.எஸ்., திட்டத்தில், கணக்கு எண் குளறுபடியால், 50 ஆயிரம் அரசு ஆசிரியர்களின் ஓய்வூதியம் கேள்விக்குறியாகி உள்ளது. பலருக்கு, ஓய்வூதியமே கைக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. 50 ஆயிரம் ஆசிரியர்கள் கடந்த, 2004 ஏப்ரல் முதல், மத்திய அரசும்; 2003 முதல், தமிழக அரசும், சி.பி.எஸ்., திட்டத்தை அறிமுகம் செய்தன. இதன்படி, 2003க்குப் பின், பணியில் சேர்ந்த ஒரு லட்சம் அரசு ஊழியர்களுக்கு, சி.பி.எஸ்., திட்டப்படி, மாத அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.

இதன்படி, 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியம் செலுத்துகின்றனர். இவர்களில், பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டிலுள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பொதுக் கணக்கு அலுவலகம்; தொடக்கப் பள்ளி, உள்ளாட்சி நிர்வாகப் பள்ளி ஆசிரியர்களுக்கு, சென்னை அரசு தகவல் தொகுப்பு மையத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட எண் பராமரிக்கப்படுகிறது. இதில் தான், சில ஆண்டுகளாக பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொடக்க மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் பதவி உயர்வு பெற்று, பள்ளிக் கல்வித்துறையின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்வோருக்கு, பழைய பங்களிப்பு கணக்கு எண் கைவிடப்பட்டு, பொதுக் கணக்கு அலுவலகத்தில் புதிய எண் துவங்கப்படுகிறது.இதனால், ஏற்கனவே பல ஆண்டுகள் பணம் கட்டிய, அந்த ஓய்வூதியக் கணக்கு அம்போவென விடப்படுகிறது;

அந்த நிதி எங்கே என, தெரியவில்லை. அச்சம் இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்புத் தலைவர் பேட்ரிக் ரெய்மண்ட் கூறியதாவது:இந்த கணக்கு எண்களை ஒன்றாக இணைக்கும்படி, அரசுக்கு பல முறை மனு கொடுத்த பிறகும், எந்த நடவடிக்கையும் இல்லை. ஓய்வுபெற்றவர்கள், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. பலருக்கு பணம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, பங்களிப்பு ஓய்வூதியம் செலுத்தவே ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார். ரூ.5,000 கோடிசெலுத்தப்படவில்லை 'தமிழகத்தில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட, 5,000 கோடி ரூபாயை, தமிழக அரசு இன்னமும், மத்திய அரசிடம் செலுத்தவில்லை' என்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியம் குறித்த தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற, திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: நாட்டில் உள்ள பிற மாநிலங்கள் எல்லாம், புதிய திட்டத்தில் பிடித்த, பணத்தை சம்பந்தப்பட்ட ஆணையத்திடம் செலுத்தி விட்டன. தமிழக அரசு, ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை. இதுவரை பணியில் இறந்துபோன யாருக்கும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், எதுவும் கொடுக்கப்படவில்லை. திட்டம் துவங்கி, 12 ஆண்டுகளாகியும், பணம் செலுத்தாதது, தற்போது வெளிப்பட்டுள்ளது. இனிமேலாவது, அரசு பணத்தைச் செலுத்தி, திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்

பிளஸ் 2 மாணவர்களின் ரேசன்,ஆதார் எண் சேகரிப்பு

நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் விவரங்களை சேகரிக்க, அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, 'அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கள், தங்கள் பள்ளி பிளஸ் 2 மாணவர்களின் விவரங்கள் அடங்கிய உறுதிமொழி படிவத்தை, உடனடியாக தயாரிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார். அவரின் உத்தரவு விவரம்:

* மாணவ, மாணவியர் தங்கள் பெயர், இன்ஷியல், தந்தை அல்லது காப்பாளர் பெயர், பிறந்த தேதியை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

* உறுதிமொழி படிவத்தில் உள்ள விவரங்கள் தான், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலில் இடம் பெறும் என்பதால், பிறப்புச் சான்றிதழ் படி, சரியான தகவல்களை குறிப்பிட வேண்டும்.

* உறுதிமொழி படிவத்தில் தவறான தகவல்கள் குறிப்பிட்டால், சட்டரீதியான பிரச்னை ஏற்படும் என்பதை, தலைமை ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அறிவுறுத்த வேண்டும்.

* மாணவரின் பாலினம், முகவரி, ஜாதி சான்றிதழ் அடிப்படையிலான ஜாதி விவரம், மதம், மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான குறைபாடு, தந்தை அல்லது பாதுகாவலரின் பெயர், தாய் பெயர், ஆதார் அடையாள அட்டை எண் விவரம், ரேஷன் அட்டை எண் விவரம், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மொபைல்போன் எண் (விரும்பினால் மட்டும்), பாடங்களின் விவரம், தட்டச்சு முடித்திருந்தால் அதன் விவரம், போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். * வரும் 27ம் தேதி முதல், இந்த பணிகளை துவங்கி, ஆக., 7ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

Thursday, July 23, 2015

தமிழகத்தில் 75கல்வி அலுவலர் பணியிடம் காலி

தமிழகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அளவில் 10 பணியிடங்களும், மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.) அளவில் 65 பணியிடங்களும் பல மாதங்களாக காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள், தருமபுரி, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளிட்ட 10 இடங்கள் காலியாக உள்ளன. அதேபோல, மாவட்டக் கல்வி அலுவலர் அளவிலான 125 பணியிடங்களில் 65-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. திருநெல்வேலி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள், திருச்சி, லால்குடி, அறந்தாங்கி, தூத்துக்குடி, பொன்னேரி, செங்கல்பட்டு, பரமக்குடி ஆகிய இடங்களில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், கோவை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்கள் உள்பட 65 பணியிடங்கள் தமிழகம் முழுவதும் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

வரும் ஜூலை 31-ஆம் தேதி மாவட்ட அளவில் மேலும் சில கல்வி அலுவலர்கள் ஓய்வு பெறுகின்றனர். எனவே, கற்றல், கற்பித்தல் மேற்பார்வைப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், 600-க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத் தொகையை தமிழக அரசு மத்திய அரசுக்கு செலுத்தவில்லை:ஆர்.டி.ஐ

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5,000 கோடி ரூபாயை தமிழகஅரசு மத்திய அரசிடம் செலுத்தவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. 1.1.2004 முதல் மத்திய அரசு வேலையில் சேரும் அனைவருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கட்டாயமானது. கடந்த 1.4.2003 க்கு பிறகு முதல் மாநிலமாக தமிழக அரசும் அறிமுகப்படுத்தியது. 2006 ஜூன் 1 முதல் அரசு ஊழியர் சம்பளத்தில் 10 சதவீதம் தொகை பிடித்தம் செய்யப்பட்டது.

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் தமிழகத்தைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும்,ரூ.33 ஆயிரத்து 121 கோடி மாநில அரசு ஊழியர்களுக்கான நிதியாக ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்டு உள்ளது. அதே போல் மற்ற மாநிலங்களில் ஓய்வூதிய நிதி மற்றும் பணபலனும் கொடுத்துள்ளனர். பிற மாநிலங்களில் மொத்தம் 13 ஆயிரத்து 488 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 ஆயிரம் பேருக்கு ஓய்வு ஊதிய நிதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 533 பேர் இறந்தவர்கள். ( ஜூன் 29, 2015 நிலவரப்படி). ஆனால் தமிழகத்தில் ரூ.5,000 கோடி பிடித்தம் செய்தும், இதுவரை ஆணையத்திடம் செலுத்தாமல் உள்ளது.

பிடித்தம் செய்ப்பட்ட பணம் என்ன ஆனது என்ற தகவலும் தெரியவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்இதுபற்றியவிபரங்களை திரட்டிய, திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது;

பிறமாநிலங்களெல்லாம் புதிய திட்டத்தில் பிடித்த பணத்தை ஆணையத்திடம் செலுத்திவிட்டன. ஆனால் தமிழக அரசு ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை. இதுவரை பணியில் இறந்துபோன யாருக்கும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் எதுவும் கொடுக்கவில்லை. திட்டம் துவங்கி 12 ஆண்டுகாகியும் பணம் செலுத்தாதது தற்போது வெளிப்பட்டுள்ளது. இதன்பிறகாவது இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும், என்றார்.

ஆதார் முகாம் பள்ளிகளில் மாணவர்களுக்கு நடத்த ஏற்பாடு

தமிழகம் முழுவதும், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஆதார் அட்டை எடுப்பதற்கான முகாம் நடத்த, பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும், அனைத்து வகை அரசுத் திட்டங்களுக்கும், ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. பள்ளிகளில் மாணவ, மாணவியரின் கல்வி உதவித் தொகை மற்றும் இலவசத் திட்ட முறைகேடுகளைத் தடுக்க, ஆதார் எண்களை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்புத் திட்ட தொடர்பு அதிகாரியாக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது உத்தரவின்படி, மாணவ, மாணவியரின் ஆதார் எண் விவரங்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சேகரித்துள்ளனர். இவற்றில், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் எண் இல்லை என, தெரியவந்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மட்டும், 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஆதார் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களுக்கு, ஆகஸ்ட் மாதத்துக்குள் ஆதார் எண் உருவாக்கும் வகையில், சிறப்பு முகாம் நடத்த, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக பெங்களூரிலுள்ள ஆதார் எண் திட்ட உதவி இயக்குனரகத்துடன், தமிழக பள்ளிக்கல்வித்துறை இணைந்து, முதற்கட்டப் பணிகளை துவங்கியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகள் ஆய்வு

மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி களை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் நிலை குறித்த தகவல் சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கத்திற்கு முன்னதாகவே தேர்தல் வந்தாலும் தேர்தலை நடத்தி முடிக்க தேவையான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

முதல் கட்டமாக தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழைய பதிவுகளை அகற்றி விட்டு, புதியதாக வாக்குப்பதிவுக்கு ஏற்ற வகையில் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.தற்போது ஒவ்வொரு தாலுகாவிலும், தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ., ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து, அதன் நிலைமை பற்றிய தகவல்களை சேகரித்து வருகின்றனர். இந்த ஆய்வின் அடிப்படையில், ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குச்சாவடி விபரங்கள், அதன் கட்டமைப்பு வசதிகள், மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை சேகரிக்கின்றனர்.

எந்தெந்த இடங்களில் என்னென்ன வசதிகள் தேவை, அதற்கான திட்ட மதிப்பீடு என்ன என்பதை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்வி உதவித்தொகை பெற காலக்கெடு நீட்டிப்பு

வருமான சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், சிறுபான்மைப் பிரிவு பள்ளி மாணவர்கள், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட், 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த உதவித்தொகையை, மத்திய அரசு உதவியுடன், தமிழக அரசு வழங்கி வருகிறது.

இதற்காக, விண்ணப்பிக்கும் மாணவர், தன் குடும்ப வருமான சான்றிதழை, கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.ஆனால், இந்தச் சான்றிதழ் பெறுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அனைத்து சான்றிதழ்களும், தாசில்தார் அலுவலகம் மற்றும் பொது இ - சேவை மையங்களில், 'ஆன் - லைனில்' வழங்கப்படுவதால், தினமும் குறைந்த அளவு மாணவர்களுக்கே கிடைக்கிறது.இதனால், மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.எனவே, உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 1 - 8 வகுப்பு வரையிலான மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற புதிதாக விண்ணப்பிக்கவும், புதுப்பிக்கவும், ஜூலை, 15ம் தேதி வரை வழங்கப்பட்ட அவகாசம், ஆகஸ்ட், 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்களின் சார்பில், மாணவர்கள் விவரம் சமர்ப்பிக்க ஆகஸ்ட், 31ம் தேதி வரை, கால அவகாசம் தரப்பட்டு உள்ளது. ஒன்பது மற்றும், 10ம் வகுப்பினர், கல்வி நிலையங்கள் வழியே, 'ஆன் - லைன்' மூலம் அனுப்ப, ஆகஸ்ட், 31ம் தேதி வரையிலும் அவகாசம் உள்ளது.

மூளை குறித்த தகவல்

மனித மூளையும் அதன் செயல்திறனும்.
.
1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.
.
2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.
.
3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.
.
4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.
.
5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.
.
6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.
.
7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்.
.
8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.
.
9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.
.
10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.
.
11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.
.
12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபகபடுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்.
.
13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்க முடியும்.
.
14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot)வாய்ப்புகள் அதிகம்.