இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, May 02, 2015

தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு இந்த மாதம் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியானது பண பரிவர்த்தனையை சென்னையில் இருந்து மும்பைக்கு மாற்றியதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியமானது, ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளில் வழங்கப்பட்டு விடும். ஊதியமானது, ஒவ்வொரு ஊழியரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவது வழக்கம்.

இந்த மாதம் ஏப்ரல் 30ஆம் தேதியன்று மாத ஊதியமானது வரவு வைக்கப்பட வேண்டும். ஆனால், மே 2 ஆம் தேதி (சனிக்கிழமை) வரையில் மாத ஊதியம் வரவு வைக்கப்படவில்லை. இதுகுறித்து, அரசுத் துறை உயரதிகாரிகள் கூறியது: ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் மாத ஊதியம் வரவு வைக்கப்படுகிறது. இந்தப் பணியை மாவட்டங்களில் உள்ள கருவூலத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மாவட்டங்களில் உள்ள வங்கி மேலாளர்களுடன் தொடர்பு கொண்டு சம்பளப் பட்டியலை அளிக்கும் நடைமுறை முன்பு பின்பற்றப்பட்டு வந்தது. இதனால், ஊதியமானது வங்கிக் கணக்குகளில் விரைந்து வரவு வைக்கப்பட்டு விடும்.

ஆனால், ஏப்ரல் மாத இறுதி நாளான 30 ஆம் தேதியன்று மாலை வரை அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் அளிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வந்த மின்னணு பண பரிவர்த்தனை முறையானது சென்னையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது தான். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த, இந்த பண பரிவர்த்தனை முறையானது மும்பைக்கு மாற்றப்பட்டு விட்டது. இதனால், தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் ஊதியப் பட்டியல் உள்ளிட்டவை மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி மையத்தில் தாமதமாகக் கையாளப்படுகின்றன. இந்த தாமதத்தின் எதிரொலியாகவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையில் பெரும்பாலானோருக்கும், கிருஷ்ணகிரி, கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மாத ஊதியம் வரவு வைக்கப்படவில்லை. மே 4-ஆம் தேதி அல்லது அதிலிருந்து ஒருசில நாள்களுக்குள் சம்பளம் வரவு வைக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்க அரசாணை வெளியீடு

தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக, ஏழு ஒன்றியங்களில், புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை துவக்க, கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.அரசாணையில் கூறியிருப்பதாவது:

கடலுார், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலுார், நீலகிரி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர் அதிகமாக உள்ளனர். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியருக்கென, அதிக முன்னுரிமை அளிக்க வாய்ப்பில்லை.எனவே, 2016 - 17ம் கல்வியாண்டு முதல், குறிப்பிட்ட ஏழு மாவட்டங்களில், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைத்து செயல்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிறுவனங்களுக்கும், மத்திய, மாநில அரசின், 75 மற்றும் 25 சதவீத நிதி ஒதுக்கீடு வழங்கப்படும். இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 50 மாணவர்கள் வீதம் சேர்க்கப்படுவர் என்றும், ஒரு நிறுவனத்திற்கு, ஏழு பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது. ஒன்றியங்களிலுள்ள, வட்டார வள மையத்திற்கு அருகிலேயே, இந்நிறுவனங்கள் அமைப்பதற்கு, இடம் தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள், இடத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆதார் எண் அவசியமாகிறது

பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணை ட்டாயமாக தெரிவிக்க வேண்டும்,'என, அரசு உத்தரவிட்டுள்ளது.எஸ்.சி.,எஸ்.டி., மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், சுகாதாரப்பணி மேற்கொள்வோரின் பிள்ளைகள், ஆதிதிராவிட மாணவிகள், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் திறனறி தேர்வுகளில் வெற்றிபெறுவோர், இடை நிற்றலை தவிர்க்க உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் அரசின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்துறை வங்கிகளில் கணக்கு துவங்கி வழங்கப்படுகின்றன.

இதில் நடைபெறும் சில குளறுபடிகளை தவிர்க்க மாணவர்கள் ஆதார் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.விருதுநகர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் ஆதார் எண் சேகரிக்கப்பட்டு அரசிற்கு அனுப்பப்பட்டு, வங்கி கணக்குடன் இணைக்கப்படுகிறது. ஒருவேளை ஆதார் அட்டை இல்லையெனில் மாணவர்கள் அதற்கான புகைப்படம் எடுக்க பெற்றோர்களிடம் அறிவுறுத்தப்பட்டு அதற்கு கால அவகாசம் தரப்படுகிறது. காலதாமதம், குழப்பத்தை தவிர்க்கவே ஆதார் எண் கட்டாயம் என்ற முடிவை அரசு அமல்படுத்துகிறது,”என்றார்.

Friday, May 01, 2015

ப்ளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?

பிளஸ் 2 தேர்வு முடிவு வரும், 7ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை எப்படி பெறுவது என்பது குறித்து, பள்ளிகளுக்கு கல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வை, 8.43 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். தேர்வு முடிவு, வரும், 7ம் தேதி தமிழக தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியானதும், மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகமாகிறது. கல்லூரிகளில் உள்ள, 'புரவிஷனல்' சான்றிதழ் போல், இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், உயர் கல்வியில் சேர்வதற்கான அத்தாட்சியாக இருக்கும்.

இந்த சான்றிதழை எப்படிப் பெறுவது என்பது குறித்த அரசாணையை, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சபிதா பிறப்பித்து உள்ளார். அதில், 'தேர்வு முடிவு கள் வெளியானதும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தேர்வுத் துறையின், http://www.dge.tn.nic.in/ என்ற இணைய தளத்தில் பள்ளிகள் மூலம், முதல் இரண்டு வாரங்களுக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின், மாணவ, மாணவியர் தங்கள் தேவைக்கேற்ப பதிவு செய்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்' எனக் கூறப்பட்டு உள்ளது. இந்த தற்காலிக சான்றிதழ்களை, கல்லூரி படிப்பில் சேர பயன்படுத்திக் கொள்ள அரசாணையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசாணையின் நகல்கள் அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன

Thursday, April 30, 2015

பள்ளிக்கல்வி துறையில் 3பேருக்கு பதவிஉயர்வு

பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 3 பேருக்கு இணை இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்த விவரம்:- பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் இருந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குநராக (தொழிற்கல்வி) பதவி உயர்வு பெற்றுள்ளார். சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வக்குமார், மதுரையில் பிற்படுத்தப்பட்டோர், கள்ளர், சீர்மரபினர் துறை இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னையா, இணை இயக்குநராக (நாட்டு நலப்பணித் திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த உஷாராணி அனைவருக்கும் கல்வித் திட்ட இணை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநராக இருந்த குப்புசாமி, அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநராக (பணியாளர் நலன்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநராக உள்ள சுகன்யாவிடம், நூலகத் துறை இணை இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் நிர்வாக இணை இயக்குநராக இருந்த அமுதவல்லி, அதே நிறுவனத்தில் பாடத்திட்ட இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

பள்ளி மேம்பாட்டுக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக, நடப்பாண்டு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் உள்ள, ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், புதிய கட்டடம், சமையல் கூடம் கட்டுதல், குடிநீர் வழங்குதல், கழிப்பறைகள் ஏற்படுத்துதல், போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக, 2011-12ல், ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த, ஒவ்வொரு ஆண்டும், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. நடப்பாண்டும், 100 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியப் பங்கில் இருந்து, 67 கோடி ரூபாய், மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து, 33 கோடி ரூபாய், எட்டு தவணைகளில், மாவட்டங்களுக்கு விடுவிப்பு செய்ய வேண்டும் என, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, அரசு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய, ஒப்புதல் அளித்து, அரசாணை ெவளியிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் ெவளியிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2 தேர்வு அறிவிப்பு

தமிழக அரசுத் துறைகளில், 18 வகையான குரூப்-2 பதவிக்கான, 1,241 காலியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 (நேர்முக தேர்வு) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 18 வகை பதவிக்கான, 1,241 காலியிடங்கள் நிரப்பப்படும்.மே 29ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வங்கி மற்றும் தபால் அலுவலகம் மூலம், ஜூன் 1ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.ஜூலை 26ம் தேதி, முதல் நிலைத் தேர்வு நடக்கிறது. இதில், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திலிருந்து கேட்கப்படும்

.தேர்வில் பங்கேற்க, ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழகம் முழுவதும், 114 மையங்களில் தேர்வு நடக்கிறது. விண்ணப்பதாரர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpscexams.net என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். முதல் நிலைத் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம், www.tnpsc gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.சந்தேகங்கள் இருப்பின், contacttnpsc@gmail.com என்ற முகவரி அல்லது, 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

TRAI புதிய உத்தரவு

இணைய தள சேவைக்கான எவ்வளவு டேட்டா பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவலை வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி நிறுவனங்கள் உடனுக்குடன் தெரிவிப்பதை ட்ராய் கட்டாயமாக்கியுள்ளது.
டேட்டா தொடர்பை செயல்படுத்தும் முன் வாடிக்கையாளரின் அனுமதி பெற வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அளவுக்கு டேட்டா பேக் பெறாத வாடிக்கையாளர்கள், நேரடியாக இணைய தள சேவையை பயன்படுத்தும்போது ஒவ்வொரு 5 ஆயிரம் கிலோபைட் முடியும்போதும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அளவு டேட்டா பேக் பெற்று பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவிகித டேடா பயன்படுத்தப்பட்டதும் தகவல் தெரிவிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிறகு, 90 சதவிகிதம், 100 சதவிகிதத்தை எட்டும்போதும் தெரிவிக்க வேண்டும் என ட்ராய் உத்தரவிட்டுள்ளது. முறையான தகவல் வராத காரணத்தால் டேட்டா பயன்பாடு தெரியாமல்,தங்கள் தொலைபேசி கட்டணம் முழுவதையும் இழக்க நேரிடுவதாக ட்ராய்க்கு வாடிக்கையாளர்கள் புகார் அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் தொலைபேசி நிறுவனங்களுக்கு ட்ராய் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

P.F interest 8.7%

Tamil Nadu Government Industrial Employees Contributory Provident Fund – Rate of interest
FINANCE (ALLOWANCES) DEPARTMENT
G.O.No.130, DATED 28th April, 2015
(Manmatha, Chithirai 15, Thiruvalluvar Aandu 2046)

PROVIDENT FUND – Tamil Nadu Government Industrial Employees Contributory Provident Fund – Rate of interest for the years 2013-2014 and 2014-2015 – Orders Issued.

Read the following:-
1) EPF Organisation letter No.Invest.1/ 3(2)/133/ROI/ 2013-14/ 25363, dated 06.04.2014.
2) EPF Organisation letter No.Invest.1/ 3(2)/133/ROI/ 2014-15/ 36393, dated 04.02.2015.
                              * * * * * *
ORDER:
       The Government direct that the rate of interest on the deposits and balances in the Tamil Nadu Government Industrial Employees Contributory Provident Fund for the financial years 2013-2014 and 2014-2015 shall be 8.75% (Eight point seven five percent) per annum.

(BY ORDER OF THE GOVERNOR)
K. SHANMUGAM
PRINCIPAL SECRETARY TO GOVERNMENT

*****************************************

FINANCE (ALLOWANCES) DEPARTMENT
G.O.No.129, DATED 27th April, 2015
(Manmatha, Chithirai 14, Thiruvalluvar Aandu 2046)

PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the financial year 2015-2016 – Orders – Issued.

Read the following:-
1. G.O.Ms.No.106, Finance (Allowances) Department, dated 28.4.2014.
2. From the Government of India, Ministry of Finance, Department of Economic Affairs, New Delhi letter F.No.5(1)-B(PD)/2015, dated 20.04.2015..
                               * * * * * *
ORDER:
The Government direct that the rate of interest on the accumulation at the credit of the subscribers to the General Provident Fund (Tamil Nadu) for the financial year 2015-2016 commencing from 01.04.2015 shall be 8.7% (Eight point Seven per cent) per annum.

2. The rate of interest on belated final payment of General Provident Fund accumulations remaining unpaid for more than three months of its becoming payable shall be at the same rates as indicated in para 1 above.

(BY ORDER OF THE GOVERNOR)
K. SHANMUGAM
PRINCIPAL SECRETARY TO GOVERNMENT

Wednesday, April 29, 2015

TNPSC அறிவிப்பு

டி.என்.பி.சி. குரூப்- 2 தேர்வு அறிவிப்பு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் உள்ள 1241 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி.
இன்று ஏப்ரல் 30-ந்தேதி முதல் விண்ணபிக்கலாம்.
கடைசி நாள் 29-5-2015. ஆகும்.
விண்ணப்பக்கட்டணம் ரூ.125- மட்டும்.
வயது தகுதி பணியிடங்களுக்கு ஏற்றால்போல் மாறுபடும்.
மேலும் விபரங்களுக்கு டி.என்.பி.சி. இணையதளத்தை காணவும்.

வேளாண் கல்லூரிகளில் சேர மே 15முதல் விண்ணப்பம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளங்கலை படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 15ம் தேதி முதல் இணையதளம் மூலம் வினியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் 13 வகையான பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. உறுப்பு கல்லூரியில் 1,220 இடங்கள், இணைப்பு கல்லூரியில் 1,080 இடங்கள் என மொத்தம் 2,300 இடங்கள் நிரப்பப்படவுள்ளது.

இதில், 50% இடங்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தாலும், 50 சதவீத இடங்கள் அந்தந்த கல்லூரிகளாலும் நிரப்பப்படுகிறது. இப்பாடத்தில் மேல்நிலைப்பள்ளி கல்வி அல்லது அதற்கு இணையான கல்வி பிரிவில் பொது கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை www.tnau.ac.in/admission.html என்ற இணையதளத்தில் சென்று பூர்த்தி செய்ய வேண்டும்.

13 பட்டப்படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது. பொது பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.600ம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300ம் ஆகும். இணையதளம், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி செலுத்தலாம் அல்லது பதிவிறக்கம் செய்யப்பட்ட சலானை எந்தவொரு ஸ்டேட் வங்கி கிளைகளிலும் செலுத்தலாம். வேளாண் பல்கலைக்கழகத்தின் மையங்களிலும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணையதளத்தின் மூலமாக மே 15 முதல் ஜூன் 13 வரை விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க ஜூன் 13ம் தேதி கடைசி என்றும், தரவரிசை பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும் எனவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

மாவட்ட நூலகங்களில் ப்ளஸ் 2 மதிப்பெண் பட்டியலை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்

வருகிற மே 7ம் தேதி வெளியாக உள்ள +2 தேர்வு முடிவுகள் மற்றும் அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. மாணவ மாணவிகள் தேர்வு முடிவுளை இலவசமாக பார்க்கவும், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யவும் மாவட்ட நூலகங்கள் மற்றும் கன்னிமாரா நூலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகி மூன்று நாட்களுக்கு மட்டுமே இலவ்சமாக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நூலக இயக்குனரகத்திலிருந்து விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி இரண்டாமாண்டு பாலிடெக்னிக் விண்ணப்பிக்க மே22 கடைசி தேதி

பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 22 கடைசித் தேதியாகும். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: நேரடி இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் சேர்க்கை அடிப்படையில், பிளஸ்-2 தேர்ச்சியுடன், ஐடிஐ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தமிழகத்தில் உள்ள 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டரை ஆண்டு செயற்கை அவயங்கள், முடநீக்கியல் பட்டயப் படிப்பு முதலாமாண்டு சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபோல் சென்னை தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்படும் ஒரு ஆண்டு ஒப்பனைக் கலை பட்டயப் படிப்பில் முதலாமாண்டு சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கும் பிளஸ்-2 முடித்த மாணவிகள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் அவரவர் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் மே 4-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.tndte.com என்ற இணையதளத்திலிருந்து மே 4-ஆம் தேதி முதல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. சாதிச் சான்றை சமர்ப்பித்து விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். பிறர் ரூ. 150 கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரியில் சமர்ப்பிக்க மே 22 கடைசித் தேதியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் சேர என்னென்ன ஆவணம் தேவை

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள், இருப்பிடச் சான்று உள்ளிட்டசான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அண்ணா பல்கலை கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம், மே, 6ம் தேதி முதல், 29ம் தேதி வரை அண்ணா பல்கலை மையத்திலும், மே, 27ம் தேதி வரை, மற்ற, 59 மையங்களிலும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு முடிவு வரும் முன், தேவையான சான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்ட மாணவர்கள், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஏதாவது ஒரு வகுப்பில் தமிழகத்தில் படிக்காமல் இருந்தால், அவர்கள் தமிழக வசிப்பிடச் சான்றிதழ் ஆன் - லைன் நகல் வைத்திருக்க வேண்டும்.இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறைப் பட்டதாரியாக இருந்தால், அதற்கான சான்றிதழும் தயாராக வைத்திருக்க வேண்டும்.முன்னாள் ராணுவத்தின ரின் வாரிசு, சுதந்திரப் போராட்ட வீரரின் வாரிசு, உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், செவித்திறன் குறைவு போன்ற முன்னுரிமை கேட்கும் மாணவர்கள், அதற்கான சான்றிதழ்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை தலைசிறந்த ஆவணமாக மாறுமா?

தமிழகத்தில், அரசியல் கட்சிகள், கூட்டணிக் காக பல்வேறு உத்திகளை மேற்கொள்ளும் கால கட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலுக்காக, வாக்காளர் பட்டியல் சீரமைக்கும் பணி, நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையில், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், அத்துடன் ஆதார் எண் விவரத்தை இணைக்கும் பணி, மும்முரமாகி உள்ளது. இதற்கான தீவிர முயற்சிகளில், தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால், அவரது தந்தை பெயர் தமிழில் சரியாக இருப்பதாகவும், ஆங்கிலத்தில் இருக்கும் தவறை திருத்தவும், மனைவி பெயருக்கான ஆங்கில எழுத்து தவறாக இருப்பதையும், சென்னை ஆலந்தூர் சட்டசபை சிறப்பு முகாமில், அவர் திருத்தம் செய்திருக்கிறார். அதே போல தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ஆதார் எண் இணைப்பு மனுவை அளித்தபின், ஆதார் எண் இணைப்பு விஷய நடைமுறைகள், ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பதாக, புகார் கூறியுள்ளார். இத்தகவல்களை சேகரிப்பதில், ஆன் - லைன் முறை சிறப்பாக இருப்பதாகவும், இதுவரை ஆதார் எண் இணைப்பு விவரத் தகவல் சேகரிப்பில், 3.50 கோடி பேர் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில், 2.17 கோடி பேரின் தகவல்கள், உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. அப்படிப் பார்த்தால், தமிழகத்தில் உள்ள, 5.6 கோடி வாக்காளர்களில், 45 சதவீதம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை பிழையின்றி இருக்கப் போகிறது என்று அர்த்தம். அடுத்து வரும் முகாம்களுக்கு பின், இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். குறிப்பாக, அரியலூர், தருமபுரி, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில், 70 சதவீத வாக்காளர்களிடம் தகவல்கள் பெறப்பட்டதால், இவை முன்னணியில் உள்ளன. பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான கோவை, இதில் உள்ளது.

ஆனால், சென்னை, மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகள் முன்னணியில் இல்லை. வாக்காளர் அட்டை குளறுபடிகளை நீக்க, தேர்தல் ஆணையத்திடம் தகவல் தரும் படிவங்களை பூர்த்தி செய்வதில், படித்தவர்கள் கூட சிரமப்படுகின்றனர். இந்த படிவங்களை எளிதாக்க போவதாக, சக்சேனா அறிவித்தது, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் பிரதிபலிப்பாகும். அது மட்டும் அல்ல; பெயர்களை பதிவு செய்வதில் குளறுபடி, சேகரித்த தகவல்களை கம்ப்யூட்டரில் தவறின்றி பதிவு செய்தல், வாக்காளர் படங்களை இணைத்தல் ஆகியவற்றில், நிச்சயம் 20 சதவீதத்திற்கு மேல் குளறுபடி இருக்கும். இதில், ஆதார் அடையாள அட்டை எண் சேரும்போது குழப்பங்கள் அதிகமாகும். தேர்தல் பணியாற்றும் இடைநிலை ஊழியர் பலரும், இதற்கான முழுப்பயிற்சியை பெற்ற வர்கள் என்று கூற முடியாது. வட்டாட்சியர் மற்றும் அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரி கள் இதை புரிந்து கொண்டிருந்தாலும், கீழ் உள்ள பணியாளர்கள் தகவல் தொழில்நுட்ப நுணுக்கத்துடன் பணியாற்ற முடியாத நிலை உள்ளது. பிரச்னைகளை அறிந்து, தவறுகளின்றி விரைந்து செயல்படும் பணியாளர்களை, இத்துறையில் தேர்தல் கமிஷன் களமிறக்க வேண்டும். அவர்களும், அந்தப் பணி நேரத்தில், மொபைல் பேச்சு உட்பட பல்வேறு தடைகளை தாண்டி, கோரிக்கையுடன் வருபவர்களை முதலில் விசாரித்து, அவர்களின் தேவைகளை கண்டறிந்து, அதற்கேற்ப தீர்வைத் தரும் நடைமுறை தேவை. இல்லாவிட்டால், இதற்கான அலுவலகங்களின் முன் விண்ணப்பங்கள் விற்று, அதைப் பூர்த்தி செய்யும் கூட்டத்தினர் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழகத்தில் போலி வாக்காளர், 15 சதவீதத்திற்கும் அதிகம் என்ற தகவல் ஏற்கனவே உள்ளது. இத்தடவை மேற்கொள்ளும் முயற்சி கள், பிழைகளை பெருமளவு குறைக்கவும், தேர்தலுக்கு முன் வாக்காளர் அடையாள அட்டை, தலைசிறந்த ஆவணமாக மாற வழிகாண வேண்டும்.

ஒவ்வொரு தேர்தலின் போதும், அதற்குரிய சிறப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்த போதும், முழு சீரமைப்புக்கான வழிமுறைகள் இன்னும் வரவில்லை. அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடு என்பதால், இக்குறைகள் பெரிதல்ல என்பதைவிட, ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தல் நடைமுறைக்கான ஆவணங்கள் தமிழகத்தில் சீரானால், அரசியல் கட்சிகளின் ஓட்டு சேகரிப்பு முறையிலும், நியாயங்கள் ஏற்படலாம்.