இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, December 13, 2014

INCOME TAX department guidelines

Click below

http://www.incometaxindia.gov.in/Pages/communications/circulars.aspx

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சிக்கல்

பங்களிப்பு ஊதிய திட்டத்தின் (சி.பி.எஸ்.,) கீழ், கடந்த, 10 ஆண்டுகளில் அரசுப் பணியில் சேர்ந்தவர்களில், ஓய்வு பெற்ற, 2,000 பேர் மற்றும் இறந்த, 1,000 பேர் வாரிசுகளுக்கு இதுவரை ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த பயனும் கிடைக்கவில்லை. பணியில் இருப்பவர்களுக்கு சமீபத்தில் வந்த, 'சி.பி.எஸ்.,' பட்டியலில், பிடிக்கப்பட்ட பணம் முழுமையாக சென்று சேராததால், அரசு ஊழியர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

மேற்கு வங்கம், திரிபுராவை தவிர்த்து, நாட்டில் உள்ள பிற மாநிலங்களில், அரசு பணியாளர்களுக்கான புதிய பென்ஷன் திட்டம், 2004ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, அரசு ஊழியர்கள் பங்களிப்பு அடிப்படையில், அவர்கள் சம்பளத் தொகையில் இருந்து, குறிப்பிட்ட சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, பணி ஓய்விற்குப் பின், பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படும். இத்திட்டத்தை, தமிழக அரசும் ஏற்றுக் கொண்டு, 2003 ஏப்ரல் முதல், முன் தேதியிட்டு அமல்படுத்தியது. இத்திட்டத்தை அமல்படுத்தியது முதலே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குழப்பம்:

இருப்பினும், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை மாற்ற, தமிழக அரசு முன்வரவில்லை. அதே நேரம், இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமும் இதுவரை தீரவில்லை. அரசு ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை, மத்திய அரசிடம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், இத்திட்டத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கான முகப்பு எண் தரப்பட்டு, பிடித்தம் செய்யப்பட்ட, 2,000 கோடி ரூபாய் எங்கு எங்கு முதலீடு ஆகிறது என்பது தெரியவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், மத்திய அரசு பணியில் சேர்ந்தவர்களில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் கடந்த, 10 ஆண்டுகளில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்களில், 2,000 பேர் ஓய்வு பெற்று விட்டனர்; 1,000 பேர் இறந்து விட்டனர். இவர்கள், குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம், பணிக் கொடை எதுவும் தமிழக அரசு வழங்க வில்லை. இதனால், அவர்கள் அவர்கள் அதிருப்தியில் உள்ளதுடன், பணியில் உள்ளவர்களுக்கும் கலக்கம் ஏற்பட்டு உள்ளது.

அரசு ஊழியர் சங்க மாநில செயலர் கண்ணன் கூறுகையில், ''புதிய ஓய்வூதிய திட்டம் இந்தியா முழுவதும் பொதுவானது என, தமிழக அரசு கூறுகிறது; தமிழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு போல் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும்,'' என்றார்.

பணம் மாயம்:

இதற்கிடையில், பணியில் உள்ளோருக்கு, பிடித்தம் செய்யப்படும் பணமும் முறையாக பதிவாகவில்லை என்ற குற்றச்சாட்டும் கிளம்பி உள்ளது. தமிழகத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு, சமீபத்தில், இந்தாண்டு பிப்ரவரி மாதம் வரையிலான, ஓய்வூதிய திட்ட பிடித்தம் தொடர்பான பட்டியல் வந்தது. இதை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், பெரும்பாலானவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு மேல், 'மிஸ்சிங் கிரெடிட்' என, பதிவு செய்யப்பட்டிருந்தது. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணம், கணக்கில் வரவில்லையே என விரக்தி அடைந்தனர்.

ஏற்கனவே இத்திட்டத்தில் சேர்ந்து, ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக் கொடை கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது பிடித்தம் செய்யப்படும் பணமும் கணக்கில் வரவில்லை; எனவே, அதற்கான பட்டியலை எடுத்து, கருவூலத்தில் கேட்க முடிவெடுத்துள்ளோம். - அரசு ஊழியர்

வேலைவாய்ப்பு இணைய தளம்

Click below

http://tnvelaivaaippu.gov.in/Empower/

Friday, December 12, 2014

CPS online statement

Click below

http://218.248.44.123/auto_cps/public/

பொது வினியோக திட்டத்திலிருந்து வருமான வரி செலுத்துவோரை நீக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான திட்டங்களை வகுக்கும் வகையில் மாநில உணவு மற்றும் வழங்கல் துறை மந்திரிகளின் மாநாடு கடந்த ஜூலை மாதம் நடந்தது. அந்த மாநாட்டில், அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோரை தவிர்த்து பொது வினியோக திட்டத்துக்கு பயனாளிகளை கண்டறியுமாறு பரிந்துரைக்கப்பட்டது.

இதனால் வருமானவரி செலுத்துவோரை பொது வினியோக திட்டத்தில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் டெல்லி மேல்-சபையில் நேற்று இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை ராஜாங்க மந்திரி ரோசகேப் தன்வே, பொது வினியோக திட்டத்தில் இருந்து அரசு ஊழியர்கள் மற்றும் வருமானவரி செலுத்துவோரை நீக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்த சட்டப்படி பொது வினியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு பொருட்களை பெறுவதற்கு தகுதியான பயனாளிகளை கண்டறியும் அடிப்படையை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்’ என்று கூறினார்.

ஆசிரியர் கூட்டம், மாணவர்களுக்கான போட்டி குறித்த தகவல்கள், துவக்கப்பள்ளிகளுக்கு தாமதமாக வந்தடைகிறது

பள்ளிகளுக்கு தகவல் தெரிவிப்பதில் கல்வித்துறை அலட்சியம் காட்டுவதாக, ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கான தகவல், மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டி குறித்த அறிவிப்பு, இ-மெயில் மற்றும் தபால் வழியாக கல்வித்துறை அறிவிக்கிறது. மாநில கல்வித்துறையில் இருந்து மாவட்டம் மற்றும் உதவித்தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு, கல்வித்துறை தரப்பில் தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

அங்கிருந்து பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. நடுநிலை முதல் மேல்நிலை வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதியிருப்பதால், இ-மெயில் வழியாகவும், அவ்வசதி இல்லாத பள்ளிகளில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் மூலமாகவும் தகவல் அறிவிக்கப்படுகிறது.ஆனால், துவக்கப்பள்ளிகளில் இ-மெயில் தகவல் பரிமாற்றத்துக்கான வசதி இல்லை. தபால் மூலமாகவோ அல்லது உதவித்தொடக்கக் கல்வி அலுவலகம் சென்றோ, தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

இதனால், ஆசிரியர் கூட்டம், மாணவர்களுக்கான போட்டி குறித்த தகவல்கள், துவக்கப்பள்ளிகளுக்கு தாமதமாக வந்தடைகிறது. குறுகிய அவகாசத்தில் மாணவர்களை போட்டிக்கு தயார்படுத்த, ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்; மாணவர்களும் திணறுகின்றனர். இதனால், வகுப்பில் ஓரிருவர் மட்டுமே, போட்டிகளில்பங்கேற்கும் நிலை உருவாகிறது. மற்ற மாணவர்கள், திறமையிருந்தும் அவகாசமின்றி, தயாராவதில் சிக்கில் ஏற்படுகிறது. கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "

கல்வித்துறையில் இருந்து தகவல் வந்ததும், அவற்றை பள்ளிகளுக்கு இ-மெயில் மற்றும் தபால் மூலமாக உடனடியாக அனுப்புகிறோம். முக்கியமான தகவல் எனில், மொபைல்போனில் தெரிவிக்கிறோம்,' என்றனர்.

தரம் உயர்ந்த உயர்நிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவு

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட சுற்றறிக்கை: கடந்த ஜூலையில் 110விதியின் கீழ் 50 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலா ஒரு தலைமை ஆசிரியர், ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, பணி நிரவல் மூலம் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்: மதுரை கள்ளிக்குடி வடக்கம்பட்டி பள்ளி, திண்டுக்கல் தொட்டம்பட்டி மேல்கரைபட்டி பள்ளி, நத்தம் புரளிபுத்தூர் பள்ளி, தேனி போடி நாயக்கனூர் ராசிங்கபுரம் பள்ளி, ராமநாதபுரம் திருவாடானை ரெகுநாதபுரம் பள்ளி, சிவகங்கை முடிகண்டம் பள்ளி, விருதுநகர் சாத்தூர் என்.ஜி.ஓ.,காலனி பள்ளி, சிவகாசி கோப்பை நாயக்கன்பட்டி பள்ளி, வெம்பக்கோட்டை முத்தாண்டியாபுரம் பள்ளி ஆகியவை தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில், 9ம் வகுப்பு பிரிவை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் ஊதிய உயர்வு: தமிழக அரசு கைவிரிப்பு

செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியாது என தமிழக அரசு கைவிரித்து விட்டது. இதனால் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. தமிழக தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஆசிரியர்களின் ஊதியத்தை போல் தமிழகத்திலும் வழங்க வேண்டுமென அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 'இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து முடிவெடுக்குமாறு' ஐகோர்ட் உத்தரவிட்டது. 'நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1,017 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 129பேர் பணிபுரிகின்றனர். மத்திய அரசு ஆசிரியர்களை போல் அவர்களுக்கும் ஊதிய உயர்வு அளித்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.668 கோடி கூடுதல் செலவாகும். இதனால் ஊதிய உயர்வு அளிக்க முடியாது,' என நிதித்துறை செயலர் சண்முகம் அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

TNPSC : GROUP IIA RESULT PUBLISHED - EXAM DATE : 29/06/2014

Click below

http://www.tnpsc.gov.in/ResultGet-G2A2014.html

TNPSC : GROUP IV HALL-TICKET PUBLISHED

Click below

http://tnpscexams.net/callletter/tnpsc_182014/index.php

ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி பெற நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் பரிசீலித்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாதென தமிழக அரசு மனுவை நிராகரித்துள்ளது.

Click below

http://cms.tn.gov.in/sites/default/files/gos/fin_e_60473_2014.pdf

Thursday, December 11, 2014

Teachers particular form 1.6.88-31.12.1995 ele hm

Click below

https://app.box.com/s/94zctx21cjn6w5fmircr

1.6.88 முதல் 31.12.1995 வரை துவக்க பள்ளி தலைமையாசிரியர் விபரம்

Click below

https://app.box.com/s/tmluq1sh4fdka8i1rj61

அரையாண்டு, பொதுத் தேர்வுகளால் பள்ளி ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் கிடையாது - அரசு உத்தரவு

அரை யாண்டு தேர்வு மற்றும் பொதுத் தேர்வு நடப்பதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் உத்தரவு வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு பிறகு மே அல்லது ஜூன் மாதங்களில் தொடக்கப்பள்ளி, பள்ளி கல்வித்துறைகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் மூலம் பணியிட மாற்றம், பதவி உயர்வு அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.

அதில், மாவட்டம் விட்டு மாவட்டம், ஒன்றி யம் விட்டு ஒன்றியம் உள்ளிட்ட பணியிட மாற்றங்களுக்கான கவுன்சலிங் சென்னையில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பதவி உயர்வு, பணியிட மாற்றம் கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் பல குளறுபடிகள் நடந்ததை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை செயலாளரு க்கு பல புகார்கள் வந்தன. இதன் பேரில் தற்போதைக்கு பணியிட மாற்ற உத்தரவுகள் ஏதும் வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 அரையாண்டு தேர்வு நேற்று முன்தினம் தொடங்கின.

பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகின்றன. இந்த நேரத்தில் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டால் தேர்வுகளை சரியாக நடத்த முடியாது. அதேபோல, பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளன. அதனால் ஆசிரியர்கள் மாறுதல் செய்யப்பட்டால் தேர்வுக்கான பாடங்களை நடத்த முடியாத நிலை ஏற்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கருதுகிறது. எனவே, பணியிட மாறுதல்களை மே மாதம் வரை செய்யக்கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

TNPSC DEPARTMNETAL EXAM 2015 TIME TABLE

Click below

https://app.box.com/s/5udgfkf42fhuaqtlsdkm

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

    வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்க, மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தங்களது பதிவைப் புதுப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பைப் பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்புப் புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்தச் சலுகையைப் பெறவிரும்பும் மனுதாரர்கள் மூன்று மாதங்களுக்குள் அதாவது அடுத்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் பதிவஞ்சல் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் http:tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாக பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கல்வித்துறையில் கோர்ட் அவமதிப்பு வழக்குகள்:விரைந்து முடிக்க அரசு செயலர் உத்தரவு

    ''கல்வித் துறையிலுள்ள கோர்ட் அவமதிப்பு வழக்குகளையும், நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்,'' என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா உத்தரவிட்டார்.கல்வித் துறையில் உள்ள கோர்ட் வழக்குகளின் தன்மை உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமும் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் ஆலோசனை நடத்தினார்.

இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர்கள் கருப்பசாமி, கார்மேகம், பழனிச்சாமி பங்கேற்றனர். சபீதா பேசியது குறித்து கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கல்வித் துறையில் ஆசிரியர்கள், ஊழியர்களின் பணப்பலன், பணி மூப்பு உட்பட பல காரணங்களுக்காக நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரை உட்பட 10 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட அவமதிப்பு வழக்குகள் உள்ளன. இவற்றை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் எடுக்க வேண்டும். முடிந்தளவு மனுதாரர்களை அழைத்து பேச வேண்டும்.

கோர்ட் உத்தரவுப்படி அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துவதை ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். கழிப்பறைகள் இல்லாத அரசு பள்ளிகள் என்ற சூழ்நிலை ஏற்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டதாக தெரிவித்தனர்.இன்று (டிச.,12) சென்னையில் அனைத்து மாவட்ட ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அலுவலர்களின் கூட்டம் நடக்கிறது.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு: தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

10-ஆம் வகுப்பு தனி தேர்வர்களாக செய்முறைத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நாளை (டிசம்பர் 12) விண்ணப்பிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்ச், ஏப்ரல் 2015ம் இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொது தேர்வு எழுத விரும்பும் நேரடி தனி தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில் தங்களின் பெயர்களை பதிவு செய்து பயிற்சி பெற 11.6.2014 முதல் 30.6.14 வரையிலும் 29.10.14 முதல் 7.11.14 வரையிலும் அனுமதி வழங்கப்பட்டது.

மேற்கூறிய தேதிகளில் பெயர்களை பதிவு செய்யாமல் விடுபட்ட தனி தேர்வர்கள், இ.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற தனி தேர்வர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் 12ம்தேதிக்குள் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், அரசு தேர்வுகள் சேவை மையங்களிலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்யாத தனி தேர்வர்கள் இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, December 10, 2014

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைய மேலும் 3 மாத கால அவகாசம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை, அவர்கள் சம்பளம் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏதும் இருக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நிதித் துறை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவு:

கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசுத் துறைகளிலும், ஆசிரியர் பணியிலும் இணைந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேரும் போது அதற்கான முகப்பு எண் வழங்கப்படுவது வழக்கம். இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு தரவு மையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பங்களிப்பு ஓய்வூயத் திட்டத்தில் இணைந்து அதற்கான முகப்பு எண்ணை ஒவ்வொரு ஊழியர்களும் பெற்றுள்ளார்களா? என்பதை அவர்களுக்கு சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதுகுறித்து, கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரியிடம் தெரிவிப்பது அவசியம். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை ஒவ்வொரு துறையிடம் இருந்து பெற்று விண்ணப்பதாரர்களுக்கு உரிய முகப்பு எண்ணை (இன்டெக்ஸ் நம்பர்) அளிக்கும் பணியை மாநில தரவு மையம் மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பணியில் எந்தத் தாமதமும் ஏற்படாமல் உரிய நேரத்தில் முகப்பு எண்ணை வழங்க வேண்டும். முகப்பு எண் வழங்கப்படாமல் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்குவதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. ஆனாலும், உரிய முறையில் விண்ணப்பித்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான முகப்பு எண்ணைப் பெறுவதற்கு வரும் பிப்ரவரி மாதம் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை முகப்பு எண்ணை பெற்றுக் கொள்ளாத, அதற்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பட்டியல்கள் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால், அந்த காலத்துக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, மூன்று மாத காலத்துக்குள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்பித்து அதற்கான முகப்பு எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தனது உத்தரவில் நிதித் துறை செயலாளர் க.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த உத்தரவு அனைத்துத் துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், சட்டப் பேரவைச் செயலகம், துறை ஆணையாளர்கள், முதன்மை கணக்காயர், கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் அனைத்து மண்டல அலுவலகங்கள், உயர் நீதிமன்ற பதிவாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள், அரசு சார்பிலான வாரியங்கள், கழகங்கள், மாநகராட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பருவத்துக்கு டிசம்பர் 22 முதல் புத்தகங்கள் விநியோகம்

  முப்பருவ முறையின் கீழ், மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 22-ஆம் தேதி விநியோகிக்கப்பட உள்ளதாக தமிழ்நாட்டுப் பாடநூல்-கல்வியியல் பணிகள் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. முப்பருவ முறையின் கீழ் ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவமாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாவது பருவமாகவும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாவது பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை, தொடர் மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுகிறது.

இந்த வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் தொடர்பாக தமிழ்நாட்டுப் பாடநூல்-கல்வியியல் பணிகள் நிறுவன வட்டாரங்கள் கூறியது: ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்துப் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒன்பதாம் வகுப்பு புத்தகங்கள் மட்டும் இப்போது அச்சடிக்கப்பட்டு வருகின்றன. மூன்றாம் பருவத்துக்கு சுமார் 2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள் அந்தந்த வட்டார விற்பனைக் கிடங்குகளிலிருந்து டிசம்பர் 22-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

அரசுப் பள்ளிகளுக்கான புத்தகங்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகிக்கப்படும். மாணவர்களுக்கு பள்ளி தொடங்கும் முதல் நாளில் புத்தகங்கள் கிடைக்கும் வகையில் வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு மாநிலம் முழுவதும் புதன்கிழமை தொடங்கியது. இந்தத் தேர்வு டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தத் தேர்வும் டிசம்பர் 23-ஆம் தேதி நிறைவடைகிறது. பிற வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகளும் டிசம்பர் 12-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.