இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, November 20, 2014

இசை, ஓவியம், தையல்கலை சிறப்பாசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்ய உத்தரவு


    இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகியவற்றுக்கான சிறப்பு ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இப்போது சிறப்பாசிரியர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 2012-ஆம் ஆண்டில், 1,028 சிறப்பாசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியது. இவர்களுக்கான தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் இடம்பெறாத ஒருவர் தொடர்ந்த வழக்கில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களிலிருந்து தகுதியின் அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். போட்டித் தேர்வு, நேர்காணல் மூலம் சிறப்பாசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, சிறப்பாசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான வழிமுறைகளை அறிவிக்குமாறு அரசுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வேண்டுகோள் விடுத்தது.

இதையடுத்து, சிறப்பாசிரியர்கள் நியமனம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: சிறப்பாசிரியர் நியமனத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்குப் பதிலாக, போட்டித் தேர்வு முறை பின்பற்றப்பட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களிலிருந்து தகுதியான நபர்கள் இந்தப் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்க வேண்டும்.

போட்டித் தேர்வு 95 மதிப்பெண்ணுக்கும், நேர்காணல் 5 மதிப்பெண்ணுக்கும் நடைபெறும். போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு ஆசிரியர்கள் அழைக்கப்பட வேண்டும். இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் தயாரிக்கும். இந்தத் தேர்வில் 190 "அப்ஜெக்டிவ் டைப்' வினாக்கள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு விடைக்கும் அரை மதிப்பெண் வழங்கப்படும். இத் தேர்வுக்கான கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினப் பிரிவினருக்கு ரூ.250.

நேர்காணல் மதிப்பெண் விவரம்:

1. கூடுதல் தகுதி - அரை மதிப்பெண்
2. அரசுத் துறை தவிர துறைகளில் பெற்றுள்ள அனுபவம் - அரை மதிப்பெண்
3. அரசுத் துறைகளில் அனுபவம் - 1 மதிப்பெண்
4. என்.சி.சி., என்.எஸ்.எஸ்., விளையாட்டுகள் - ஒன்றரை மதிப்பெண்
5. ஆளுமை, தோற்றம் - ஒன்றரை மதிப்பெண் மொத்தம்-5 மதிப்பெண்கள்

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு


    தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகளுக்கு ஓவியம், உடற்கல்வி, தையல் பயிற்சிகளை வழங்க பகுதி நேர சிறப்பாசிரியர்களை நியமிக்க அரசு 2011ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, வேலைவாய்ப்பு அலுவலக பணிமூப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் வாரத்தில் குறிப்பிட்ட பாடவேளைகள் (வாரத்துக்கு 3 நாள்கள்) மட்டும் பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு கற்பித்து வந்தனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பகுதி நேர சிறப்பாசிரியர்களின் ஊதியத்தை ரூ.7000ஆக உயர்த்தி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட ஆணையில் (ஆணை எண் 186) கூறியிருப்பதாவது:

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 15,169 பகுதி நேர சிறப்பாசிரியர்களின் ஊதியம் ரூ.7000 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 2014 தேதியிட்டு வழங்கப்படும். இனி வரும் காலங்களில் சிறப்பாசிரியர்களுக்கு மின்னணு முறையில் (ECS) ஊதியம் வழங்கப்படும். பகுதி நேர சிறப்பாசிரியர்கள் (Part Time Teacher) இனி பகுதி நேர பயிற்றுநர்கள் (Part Time Instructor) என அழைக்கப்படுவர் என அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday, November 19, 2014

மானியம் விலை சிலிண்டர் பெற வங்கிக்கணக்கு கட்டாயம்: ஜன. 1 முதல் அமல்!

மானியவிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் பெற வங்கிக் கணக்கு கட்டாயம்  என்பதை வரும் ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படவுள்ளது.

சிலிண்டர்  பதுக்கல், கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பது,  உள்ளிட்ட முறைகேடுகளைத்  தடுக்கும் பொருட்டு வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகச்  செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின்படி  சிலிண்டர் வாங்குபவர்கள் மானியம் இல்லாமல் முழு விலை கொடுத்து (ரூ.950) பெற வேண்டும். அதன்பின்னர் சிலிண்டருக்கான மானியத்தொகையான ரூ. 560 அவர்களது வங்கி கணக்கில் போடப்படும்.

இதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று முந்தைய அரசு அறிவித்தது. இந்நிலையில் மத்தியில் பா.ஜனதா அரசு பதவியேற்ற பின் ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது என்று அறிவித்தது. அதேநேரம் ஆதார் அடையாள அட்டை அல்லது வங்கி கணக்கு இருந்தால் தான் மானியம் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் 540 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஜனவரி1 ஆம்  தேதி முதல் நேரடி மானிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி வங்கி கணக்கை தொடங்கி அதனை சமையல் கியாஸ் விநியோகஸ்தர்களிடம் பதிவு செய்ய வேண்டும். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 3 மாதங்கள் கருணை காலமாகக்  கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு எண்களை அல்லது ஆதார் எண்களை விநி யோகஸ்தரிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அந்த 3 மாத காலத்தில் கியாஸ் வாங்குபவர்கள் மானியம் கழித்து வழக்கமான முறையில் ரூ.400 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அதன்பிறகு மேலும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள்  கால அவகாசம் வழங்கப்படும். அப்போது  சமையல் கியாஸ் மானியம் தொகை கழிக்காமல் முழு தொகையான  ரூ.950 செலுத்திதான் பெற முடியும். ஆனால் அதற்கான மானியம் பின்னர் வழங்கப்படும். ஜூன் மாதத்திற்கு பிறகு பதிவு செய்பவர்களுக்கு அரசின் மானியம் கிடைக்காது. முழு தொகை கொடுத்துதான் வாங்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Tuesday, November 18, 2014

மேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / பிற தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர் , தலைப்பெழுத்து மற்றும் பிறந்த தேதி திருத்தங்கள் சான்றிதழ் பெற்ற 6 மாதத்திற்குள் திருத்தும் செய்து கொள்ளலாம்-இயக்குநர் உத்தரவு

Click below

https://drive.google.com/file/d/0ByAQcFNqemV0cTFZVDh2MV9ISzA/view?usp=sharing

பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், நேர விரயம் மற்றும் கண்காணிப்பாளரின் கவனத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு முதல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடைத்தாளை இணைத்து வழங்கப்பட்டது. எழுதாத பக்கங்களில், கிராஸ் கோடு போட அறிவுறுத்தப்பட்டது. விடைத்தாள்களில் எழுதாத பக்கங்கள் அதிகரித்ததை அடுத்து, தேர்வுத் துறைக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், தற்போது ஒவ்வொரு பாடத்துக்கும் உரிய விடைத்தாள்கள், குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

வரும் 2015ல், நடைபெறவுள்ள உள்ள பிளஸ் 2 மொழிப்பாடங்களுக்கு, 40 பக்கங்களுக்கு பதில், 32 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில், 30 பக்கங்கள் எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. விலங்கியல், தாவரவியல் பாடங்களில், 52க்கு பதில், 44; கம்ப்யூட்டர் சயின்ஸ், 40க்கு, 32; அக்கவுன்டன்சி, 54க்கு, 46; இதர பாடங்களுக்கு, 40 பக்கங்களும் வழங்கப்பட உள்ளன. இதேபோல், 10ம் வகுப்பு தேர்வில், மொழிப்பாடங்களுக்கு, 32க்கு, 24; தமிழ் இரண்டாம் தாளில் ரயில்வே முன்பதிவு, ரத்து படிவம், வங்கியில் பணம் செலுத்தும் படிவம், வங்கியில் பணம் பெறும் படிவம் ஆகிய படிவங்கள் தனித்தனியாக வழங்காமல், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளது.

சமூக அறிவியலில், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில், இரண்டு இந்திய வரைபடங்கள், ஒரு ஐரோப்பா வரைபடம், ஒரு ஆசிய வரைபடம் அச்சிடப்பட்டு சேர்த்து வழங்கப்பட்டு உள்ளது. கணிதம், அறிவியல் பாடங்கள் பழையபடியே, 30 பக்கங்கள் வழங்கப்பட்டாலும், முதல் பக்கத்தில் கேம்ப் எண், பண்டல் எண், பாக்கெட் எண் போன்ற விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நவ., 25, 26ல் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு

மதுரையில் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு நவ., 25, 26ல் நடக்கிறது. இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்துள்ளதாவது: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் இத்துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், நியமன கலந்தாய்வும் இளங்கோ மாநகராட்சி பள்ளியில் நவ., 25, 26ல் நடக்கின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டு இவ்வலுவலகத்தால் அழைப்பு கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் அசல் கல்வி சான்றுகளுடன் காலை 9 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

"நெட்' தேர்வு முடிவு வெளியீடு

  பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வான "நெட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கு முதுநிலை பட்டப் படிப்பை முடித்து, ஆராய்ச்சிப் படிப்பை (பி.எச்.டி.) முடித்திருக்க வேண்டும். அல்லது முதுநிலை பட்டப் படிப்பை முடித்து தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' தகுதித் தேர்வு அல்லது மாநில அளவில் நடத்தப்படும் "செட்' தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இதில் "நெட்' தேர்வு ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இதுவரை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடத்தி வந்த இந்தத் தேர்வை, இப்போது 2014 டிசம்பர் மாதம் முதல் சி.பி.எஸ்.சி. (மத்திய இடநிலை கல்வி வாரியம்) நடத்துகிறது. இந்த நிலையில், 2014 ஜூன் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தேர்வுக்கான முடிவுகளை யுஜிசி இப்போது வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகள் www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.


    ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்விக்கு நிகழாண்டு முக்கியத்துவம் வழங்க அனைவருக்கும் கல்வித் திட்ட மாநில இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்களுக்கு மிகக் குறைந்த வயதிலேயே மொழியறிவு, கணித அறிவு போன்றவற்றில் புரிதலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியது: கணிதம், ஆங்கிலம், தமிழ், அறிவியல் பாடங்களில் மேல் வகுப்புகளுக்கு உதவும் வகையில், பல்வேறு புதிய பிரிவுகளைக் கொண்ட செயல் வழிக் கற்றல் அட்டைகள் நிகழாண்டில் வழங்கப்பட உள்ளன.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய முறையில் வகுப்புகளை எடுப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. இப்போது தமிழ் பாடத்தில் பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் விரைவில் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தப் பயிற்சிகளின் மூலம் 5, 6-ஆம் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்படும்.

கணக்கெடுப்பு: அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில், பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு இப்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின்படி, தமிழகம் முழுவதும் 44 ஆயிரம் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லவில்லை. இப்போதைய கணக்கெடுப்பில், புதிதாக மாணவர்கள் பள்ளிகளிலிருந்து இடையிலேயே நின்றிருந்தால், அவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்படுவர். வெளி மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்து வரும் ஏப்ரல் மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தக் குழந்தைகளுக்காக, அவரவர் தாய்மொழியில் சிறப்பு மையங்கள் நடைபெற்று வருகின்றன.

ரூ.2 ஆயிரம் கோடி: அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்காக நிகழாண்டு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட அதிகம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Kisan Vikas Patra (KVP) re-launched today (18/11/2014)

Salient Features of re-launched Kisan Vikas Patra :

1.Amount Invested doubles in 100 months ( 8years 4 months)
2.Available in denominations of Rs 1,000, 5000, 10,000 and Rs 50,000.
3.Minimum deposit Rs 1000/- and no maximum limit.
4.Certificate can be purchased by an adult for himself or on behalf of a minor or by two adults.
5.KVP can be purchased from any Departmental Post office. This facility will also be extended shortly to the designated branches of commercial Banks.
6.Facility of nomination is available.
7.Certificate can be transferred from one person to another and from one post office to another.
8.Certificate can be en cashed after 2 1/2 years from the date of issue.

Table Showing Premature closure of KVP ( for Den. Rs. 1000 )

Period -------------- Amount Payable

2 and half years but less than 3 years 1201
3 years but less than 3 and half years 1246
3 and half years but less than 4 years 1293
4 years but less than 4 and half years 1341
4 and half years but less than 5 years 1391
5 years but less than 5 and half years 1443
5 and half years but less than 6 years 1497
6 years but less than 6 and half years 1553
6 and half years but less than 7 years 1611
7 years but less than 7 and half years 1671
7 and half years but less than 8 years 1733
8 years but before maturity of the Certificate 1798

On maturity of Certificate -------- 2000
(8 Years 4 month = 100 months)

IGNOU - Hall Ticket December-2014, Term End Examination

Click below

https://avserver.ignou.ac.in/HallTicket/Hall_1214/Hall1214.asp

சான்றிதழ் தொலைந்துவிட்டால் திரும்ப பெறுவது எப்படி? - தெரிந்துகொள்வோம்

ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

* அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

* இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

* பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.

* இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

* சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

* பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

* மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

* அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

* சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

* இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்

மீண்டும் கிஸான் விகாஸ் பத்திரம்

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்ட கிசான் விகாஸ் பத்திர திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இத்திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்தப் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு சரியாக 100 மாதங்களில் அதாவது 8 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடியான முதலீட்டு திட்டங்கள் பக்கம் மக்கள் செல்வதைத் தடுக்க இத்திட்டம் உதவும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

முக்கிய அம்சங்கள்

கிசான் விகாஸ் பத்திரம் ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் ஆகிய முக மதிப்புகளில் விற்கப்படும். ஒருவர், இந்தப்பத்திரங்களை எந்த எண்ணிக்கையிலும் வாங்கலாம். உச்ச வரம்பு எதுவும் கிடையாது என்று அரசு தெரிவித்துள்ளது.


கிசான் விகாஸ் பத்திரங்கள் ஆரம்பத்தில் தபால் அலுவலகங்கள் மூலம் விற்கப்படும் என்றும் பிறகு பொதுத் துறை வங்கிகள் மூலமும் விற்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒருவரது பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு இந்தப்பத்திரங்களை உரிமை மாற்றம் செய்து கொள்ள முடியும் என்றும் இதனை பிணையாக வைத்து கடன் பெற முடியும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. பத்திரத்தின் முதலீட்டுக் காலம் 100 மாதங்களாக இருந்தாலும் முதலீடு செய்த இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு, அதாவது 30 மாதங்களுக்குப் பிறகு இதிலிருந்து வெளியேறலாம்.


ஆனால் நிர்ணயித்த காலத்துக்கு முன்பே வெளியேறினால் முழுமையான பணப்பலன் கிடைக்காது ஆண்டுக்கு 8 புள்ளி 7 சதவிகித வட்டி தரும் இத்திட்டத்திற்கு தற்போதைக்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, November 17, 2014

TIRUPUR north CRC venue

Primary  &upper  primary  crc  wil  be held  on  22.11.2014
Crc  venues 
1. Crc: Nrk  puram venue  : nrk  puram
2. Crc thoravalur , Perumanalur 
venue  Perumanalur 
3.crc pooluvapatti 
venue  pooluvapatti 
4. Crc anuparpalayam  & ayyankalaipalayam
Venue  pups  anuparpalayam
5. Crc devangapuram  & Kumar Nagar 
venue  devanga  puram 
6. Crc  P.p.pudur
venue P.p.pudur 
7. Crc nesavalar  colony  &tnk  puram 
venue   nesavalar  colony 
8. Crc  15 velampalayam 
Venue  15  velampalayam .

#UPPER pri crc jaivabhai schoo

50 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தக் கோரிக்கை


   சட்டப்பேரவையில் அறிவித்தவாறு 50 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக விரைவில் தரம் உயர்த்த வேண்டும் என தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:

தமிழகம் முழுவதும் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிகழாண்டில் தரம் உயர்த்தப்படும் என்று 19.07.2014-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பள்ளிகள் தரம் உயர்த்தப்படவில்லை. தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் தொடர்பான அரசாணையை அக்.31-ஆம் தேதிக்குள் வெளியிடுவதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில் இந்த அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்றார்.

பதிவு செய்தும் இன்னும் ஆதார் அட்டை கிடைக்கலையா? "ஆன்-லைனில்' பதிவிறக்கம் செய்ய வசதி dinamalar


உடற்கூறுகள் பதிவு செய்தவர்களில் இன்னும் பலருக்கு அடையாள அட்டை கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதனால், "ஆன்-லைன்' மூலமாக, ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து
கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டு ஜூலை மாதம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு முகாம் நடைபெற்றது. ஏழு தாலுகாக்களிலும் முதல்கட்ட முகாம் நிறைவடைந்தது. மக்கள் குடிபெயர்வது அதிகமாக இருந்ததால், ஆதார் பதிவில் விடுபட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. விடுபட்டவர்களுக்காக இரண்டாம் கட்ட முகாம், பிப்., மாதம் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வரி வசூல் மையங்களில் படிவம் பெற்று, விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
விடுபட்டவர்களும், அதன்படி விண்ணப்பித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 23 லட்சம் பேரில், 15 லட்சத்து 700 பேரிடம் முதல்கட்ட பதிவு முடிந்துள்ளது. உடற்கூறு பதிவு செய்தவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்குள் தபால் மூலம் ஆதார் அட்டை அனுப்பி வைக்கப்படுகிறது. மொபைல் எண் கொடுத்திருந்தால், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முறையாக பதிவு செய்தவர்கள், தபாலுக்காக காத்திருக்காமல், "ஆன்-லைன்' மூலமாக அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார் அட்டை பதிவு திட்ட அதிகாரிகள் கூறியதாவது:

ஆதார் அட்டை பெற வேண்டியவர்கள், http://resident.uidai.net.in/web/resident/ chekaadhaarstatus என்ற இணைதளமுகவரியில் சென்று, தங்களது கார்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். பதிவை உறுதி செய்தபின், http://eaadhaar.uidai.gov.in என்ற முகவரியில், தங்களின் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ஆதார் அட்டையில் தவறான விவரங்கள் பதிவாகியிருந்தால், http://resident.net.in /updatedata என்ற இணையதள முகவரிக்கு சென்று, விவரங்களை சரிசெய்து, பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும், பிரத்யேக ஆதார் எண் வழங்கப்படுவதால், "ஆன்-லைனில்' பதிவிறக்கம் செய்வதில் பிரச்னை வராது. ஆதார் விவரங்களை தெரிந்துகொள்ள, 1800 300 1947 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

எஸ்.எம்.எஸ்., வசதி : பதிவு செய்தும், ஆதார் அட்டை கிடைக்காதவர்கள், மொபைலில் uid என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு, status என டைப் செய்து, முகாமில் வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டில் உள்ள 14 இலக்க எண்ணை டைப் செய்து, 51969 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். அரை மணி நேரத்துக்குள், ஆதார் அட்டை குறித்த தகவல் எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பி வைக்கப்படும். இதுவரை பதிவு செய்யாதவர்கள், வரும் ஜன., மாதம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்து, பதிவு செய்து, அட்டை பெற்றுக்கொள்ளலாம், என, அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.