இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, November 18, 2014


    ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்விக்கு நிகழாண்டு முக்கியத்துவம் வழங்க அனைவருக்கும் கல்வித் திட்ட மாநில இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்களுக்கு மிகக் குறைந்த வயதிலேயே மொழியறிவு, கணித அறிவு போன்றவற்றில் புரிதலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியது: கணிதம், ஆங்கிலம், தமிழ், அறிவியல் பாடங்களில் மேல் வகுப்புகளுக்கு உதவும் வகையில், பல்வேறு புதிய பிரிவுகளைக் கொண்ட செயல் வழிக் கற்றல் அட்டைகள் நிகழாண்டில் வழங்கப்பட உள்ளன.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய முறையில் வகுப்புகளை எடுப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. இப்போது தமிழ் பாடத்தில் பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் விரைவில் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தப் பயிற்சிகளின் மூலம் 5, 6-ஆம் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்படும்.

கணக்கெடுப்பு: அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில், பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு இப்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின்படி, தமிழகம் முழுவதும் 44 ஆயிரம் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லவில்லை. இப்போதைய கணக்கெடுப்பில், புதிதாக மாணவர்கள் பள்ளிகளிலிருந்து இடையிலேயே நின்றிருந்தால், அவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்படுவர். வெளி மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்து வரும் ஏப்ரல் மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தக் குழந்தைகளுக்காக, அவரவர் தாய்மொழியில் சிறப்பு மையங்கள் நடைபெற்று வருகின்றன.

ரூ.2 ஆயிரம் கோடி: அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்காக நிகழாண்டு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட அதிகம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Kisan Vikas Patra (KVP) re-launched today (18/11/2014)

Salient Features of re-launched Kisan Vikas Patra :

1.Amount Invested doubles in 100 months ( 8years 4 months)
2.Available in denominations of Rs 1,000, 5000, 10,000 and Rs 50,000.
3.Minimum deposit Rs 1000/- and no maximum limit.
4.Certificate can be purchased by an adult for himself or on behalf of a minor or by two adults.
5.KVP can be purchased from any Departmental Post office. This facility will also be extended shortly to the designated branches of commercial Banks.
6.Facility of nomination is available.
7.Certificate can be transferred from one person to another and from one post office to another.
8.Certificate can be en cashed after 2 1/2 years from the date of issue.

Table Showing Premature closure of KVP ( for Den. Rs. 1000 )

Period -------------- Amount Payable

2 and half years but less than 3 years 1201
3 years but less than 3 and half years 1246
3 and half years but less than 4 years 1293
4 years but less than 4 and half years 1341
4 and half years but less than 5 years 1391
5 years but less than 5 and half years 1443
5 and half years but less than 6 years 1497
6 years but less than 6 and half years 1553
6 and half years but less than 7 years 1611
7 years but less than 7 and half years 1671
7 and half years but less than 8 years 1733
8 years but before maturity of the Certificate 1798

On maturity of Certificate -------- 2000
(8 Years 4 month = 100 months)

IGNOU - Hall Ticket December-2014, Term End Examination

Click below

https://avserver.ignou.ac.in/HallTicket/Hall_1214/Hall1214.asp

சான்றிதழ் தொலைந்துவிட்டால் திரும்ப பெறுவது எப்படி? - தெரிந்துகொள்வோம்

ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

* அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

* இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

* பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.

* இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

* சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

* பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

* மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

* அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

* சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

* இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்

மீண்டும் கிஸான் விகாஸ் பத்திரம்

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்ட கிசான் விகாஸ் பத்திர திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இத்திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்தப் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு சரியாக 100 மாதங்களில் அதாவது 8 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடியான முதலீட்டு திட்டங்கள் பக்கம் மக்கள் செல்வதைத் தடுக்க இத்திட்டம் உதவும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

முக்கிய அம்சங்கள்

கிசான் விகாஸ் பத்திரம் ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் ஆகிய முக மதிப்புகளில் விற்கப்படும். ஒருவர், இந்தப்பத்திரங்களை எந்த எண்ணிக்கையிலும் வாங்கலாம். உச்ச வரம்பு எதுவும் கிடையாது என்று அரசு தெரிவித்துள்ளது.


கிசான் விகாஸ் பத்திரங்கள் ஆரம்பத்தில் தபால் அலுவலகங்கள் மூலம் விற்கப்படும் என்றும் பிறகு பொதுத் துறை வங்கிகள் மூலமும் விற்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒருவரது பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு இந்தப்பத்திரங்களை உரிமை மாற்றம் செய்து கொள்ள முடியும் என்றும் இதனை பிணையாக வைத்து கடன் பெற முடியும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. பத்திரத்தின் முதலீட்டுக் காலம் 100 மாதங்களாக இருந்தாலும் முதலீடு செய்த இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு, அதாவது 30 மாதங்களுக்குப் பிறகு இதிலிருந்து வெளியேறலாம்.


ஆனால் நிர்ணயித்த காலத்துக்கு முன்பே வெளியேறினால் முழுமையான பணப்பலன் கிடைக்காது ஆண்டுக்கு 8 புள்ளி 7 சதவிகித வட்டி தரும் இத்திட்டத்திற்கு தற்போதைக்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, November 17, 2014

TIRUPUR north CRC venue

Primary  &upper  primary  crc  wil  be held  on  22.11.2014
Crc  venues 
1. Crc: Nrk  puram venue  : nrk  puram
2. Crc thoravalur , Perumanalur 
venue  Perumanalur 
3.crc pooluvapatti 
venue  pooluvapatti 
4. Crc anuparpalayam  & ayyankalaipalayam
Venue  pups  anuparpalayam
5. Crc devangapuram  & Kumar Nagar 
venue  devanga  puram 
6. Crc  P.p.pudur
venue P.p.pudur 
7. Crc nesavalar  colony  &tnk  puram 
venue   nesavalar  colony 
8. Crc  15 velampalayam 
Venue  15  velampalayam .

#UPPER pri crc jaivabhai schoo

50 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தக் கோரிக்கை


   சட்டப்பேரவையில் அறிவித்தவாறு 50 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக விரைவில் தரம் உயர்த்த வேண்டும் என தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:

தமிழகம் முழுவதும் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிகழாண்டில் தரம் உயர்த்தப்படும் என்று 19.07.2014-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பள்ளிகள் தரம் உயர்த்தப்படவில்லை. தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் தொடர்பான அரசாணையை அக்.31-ஆம் தேதிக்குள் வெளியிடுவதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில் இந்த அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்றார்.

பதிவு செய்தும் இன்னும் ஆதார் அட்டை கிடைக்கலையா? "ஆன்-லைனில்' பதிவிறக்கம் செய்ய வசதி dinamalar


உடற்கூறுகள் பதிவு செய்தவர்களில் இன்னும் பலருக்கு அடையாள அட்டை கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதனால், "ஆன்-லைன்' மூலமாக, ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து
கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டு ஜூலை மாதம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு முகாம் நடைபெற்றது. ஏழு தாலுகாக்களிலும் முதல்கட்ட முகாம் நிறைவடைந்தது. மக்கள் குடிபெயர்வது அதிகமாக இருந்ததால், ஆதார் பதிவில் விடுபட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. விடுபட்டவர்களுக்காக இரண்டாம் கட்ட முகாம், பிப்., மாதம் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வரி வசூல் மையங்களில் படிவம் பெற்று, விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
விடுபட்டவர்களும், அதன்படி விண்ணப்பித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 23 லட்சம் பேரில், 15 லட்சத்து 700 பேரிடம் முதல்கட்ட பதிவு முடிந்துள்ளது. உடற்கூறு பதிவு செய்தவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்குள் தபால் மூலம் ஆதார் அட்டை அனுப்பி வைக்கப்படுகிறது. மொபைல் எண் கொடுத்திருந்தால், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முறையாக பதிவு செய்தவர்கள், தபாலுக்காக காத்திருக்காமல், "ஆன்-லைன்' மூலமாக அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார் அட்டை பதிவு திட்ட அதிகாரிகள் கூறியதாவது:

ஆதார் அட்டை பெற வேண்டியவர்கள், http://resident.uidai.net.in/web/resident/ chekaadhaarstatus என்ற இணைதளமுகவரியில் சென்று, தங்களது கார்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். பதிவை உறுதி செய்தபின், http://eaadhaar.uidai.gov.in என்ற முகவரியில், தங்களின் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ஆதார் அட்டையில் தவறான விவரங்கள் பதிவாகியிருந்தால், http://resident.net.in /updatedata என்ற இணையதள முகவரிக்கு சென்று, விவரங்களை சரிசெய்து, பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும், பிரத்யேக ஆதார் எண் வழங்கப்படுவதால், "ஆன்-லைனில்' பதிவிறக்கம் செய்வதில் பிரச்னை வராது. ஆதார் விவரங்களை தெரிந்துகொள்ள, 1800 300 1947 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

எஸ்.எம்.எஸ்., வசதி : பதிவு செய்தும், ஆதார் அட்டை கிடைக்காதவர்கள், மொபைலில் uid என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு, status என டைப் செய்து, முகாமில் வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டில் உள்ள 14 இலக்க எண்ணை டைப் செய்து, 51969 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். அரை மணி நேரத்துக்குள், ஆதார் அட்டை குறித்த தகவல் எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பி வைக்கப்படும். இதுவரை பதிவு செய்யாதவர்கள், வரும் ஜன., மாதம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்து, பதிவு செய்து, அட்டை பெற்றுக்கொள்ளலாம், என, அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை; மாணவர்களுக்கு சிறப்பு ‘கவுன்சிலிங்’


பள்ளி மாணவர்கள் மத்தியில், அதிகரிக்கும் வன்முறைகளை தவிர்க்க, பிரச்னைகளுக்குரிய மாணவர்களை கண்டறிந்து தனித்தனியாக சிறப்பு கவுன்சிலிங் வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் மத்தியில், சினிமா, ’டிவி’, மொபைல் போன், இன்டர்நெட் உள்ளிட்ட, பல்வேறு காரணங்களால், வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், மாணவர்கள் ஈடுபடும் குற்றச்சம்பவங்கள், பெருமளவில் அதிகரித்துவிட்டது.

மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள திடீர் வன்முறை எண்ணங்களால், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாதாரண பிரச்னைகளுக்கு கூட, மாணவர்கள் வன்முறையிலும், கொலைவெறித் தாக்குதலிலும் ஈடுபடும் காரணத்தை அறிந்து, உடனடி தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், 1300க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஆறு லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி ஆசிரியரை தாக்குதல், மிரட்டுதல் போன்ற சம்பவங்கள் கோவை மாவட்டத்திலும், ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் வன்முறை சம்பவங்கள் தலை தூக்குவதை காணமுடிவதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாணவர்களை பென்சில், பேனாவால் குத்துதல், விளையாட்டு பாடவேளை நேரங்களில், திட்டமிட்டு பந்தால் எறிந்து தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்படுகிறது. இதில், மாணவியரும் விதிவிலக்கல்ல.

கல்விக் கூடங்களில் வன்முறை கலாசாரத்தை தடுக்கும் முயற்சியில், நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்தின் மண்டல உளவியல் நிபுணர் உதவியோடு மாணவர்களுக்கு, ’சிறப்பு கவுன்சிலிங்’ வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர், தலைமையாசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் சரியான உறவுமுறை அமையாததன் காரணமாக, மாணவர்களின் மனப்போக்கு மாறுவதுடன், கல்வித்தரமும் பாதிக்கப்படுகின்றது.

மண்டல உளவியல் நிபுணர் அருள்ஜோதி கூறுகையில்,”மாணவர்கள் மத்தியில், கவனிக்கும் தன்மை குறைந்து வருகிறது. பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்பே, மாணவர்களின் கவனத்தை ஒருங்கிணைக்க முடிகிறது. குறிப்பாக, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளிடம் சிறிய அளவிலான வன்முறை சம்பவங்களை தொடர்ந்து காண முடிகிறது. இதை கண்டுகொள்ளாமல் விடும் பட்சத்தில், பெரும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது, சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கி வருகிறோம். மாணவர்கள் மத்தியில், சிறிதளவில் உருபெற்றிருக்கும் வன்முறைகளை களைய, அனைத்து பள்ளிகளிலும், பிரச்னைகளுக்குரிய மாணவர்களை கண்டறிந்து தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும், பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் வருத்தமளிக்கும் வகையில் உள்ளது. தங்களது பிள்ளைகளின் நிலையை அறிந்துகொள்ள பள்ளிக்கு அழைத்தாலும், வருவதில்லை. இதுபோன்ற குடும்பச் சூழலே பெரும்பாலான பிள்ளைகளுக்கு அதிகப்படியான வன்முறை உணர்வுகளை தூண்டுகின்றது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Sunday, November 16, 2014

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசு வேலை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு


தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவர் என்ற, தமிழக அரசின் உத்தரவு சரியானதே என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களை விட, அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு, பணி நியமனத்தின்போது, முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

சம அளவில்

கடந்த 2012ல், தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்த மாணவியரும், தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்த மாணவியரும், சம அளவில், அரசுப் பணி நியமனம் பெற வழிவகை செய்யப்பட்டது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு நர்சிங் கல்லூரி மாணவியர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, செவிலியர்களை நியமனம் செய்யும்போது, அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்த மாணவியருக்கு மட்டுமே, முன்னுரிமை வழங்கினால், அது, மற்ற துறைகளின் நியமனங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

குழப்பம் ஏற்படும்

நர்சிங் மாணவியர் கேட்பதுபோல, அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள், தங்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் வேலை தர வேண்டும் என்றும், அரசு சட்டக் கல்லூரியில் படித்தவர்கள், தாங்கள் மட்டுமே நீதிபதியாக வேண்டும் என்றும் கேட்க ஆரம்பித்தால், குழப்பம்தான் ஏற்படும். அரசு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தர ஆரம்பித்தால், தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் எல்லாம், வேலைவாய்ப்புக்கு எங்கே போவது என்ற நிலையும் உருவாகும்.

எனவே, அரசு மருத்துவமனைகளுக்கான செவிலியர் பணி நியமனங்களின்போது, அரசு நர்சிங் கல்லூரிகளின் மாணவியருக்கே, முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரிகள் என, இரண்டையும் சமமாகவே கருத முடியும். அரசு பணி நியமனங்களின்போது, இரு தரப்பினருக்கும், சமமான வாய்ப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிரமப்பட்டு பயிற்சி பெறுகின்றனர்

வழக்கு விசாரணையின்போது, அரசு நர்சிங் கல்லூரி மாணவியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதம்: தனியார் கல்லூரிகளில், எளிதாக இடம் கிடைத்து விடுகிறது. ஆனால், அரசு நர்சிங் கல்லூரிகளில், விதிமுறைகளுக்கு உட்பட்டு இடம்பெற்று, மிகுந்த சிரமப்பட்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், அரசு நர்சிங் கல்லூரிகளில் படிப்பவர்களே, அரசு மருத்துவமனைகளுக்கு அதிகம் சென்று பணிபுரிகின்றனர்.

அதனால், அதிக அளவில் பயிற்சி பெற்று, கூடுதல் தகுதிகளுடன் இருக்கின்றனர். நர்சிங் பயிற்சியின்போதே, அரசுக்காக வேலை செய்து, அரசோடு சேர்ந்து செயல்படுகின்றனர். எனவே, அரசு பணி நியமனங்களின்போது, அரசு நர்சிங் கல்லூரி மாணவியருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

Saturday, November 15, 2014

பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு

புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டம் 2003 ஏப்., 1ல் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இரண்டு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஊதியத்திற்கு தகுந்தாற்போல் கருவூலத்திலிருந்து மாதந்தோறும் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து 2009 க்கு பின் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை. தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் தொடக்கல்வித்துறையில் ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த, 79 ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையில் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 247 ஆசிரியர்களுக்கும் பணப்பலன் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களும், உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்ற திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் ஜெபஜேம்ஸ் கூறியதாவது: பொதுநல நோக்கத்துடன் தகவல்களை கேட்டு பெற்றேன். புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணப்பலன் கொடுப்பது தொடர்பாக எந்த அரசு உத்தரவும் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த பணத்தை கூட வழங்காதது அதிர்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளியில் 10 மதிப்பெண் வாங்கினால் பிளஸ் 1 'பாஸ்': உதவிபெறும் பள்ளியில் 60 வாங்க வேண்டுமாம்

பிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயத்தில், பள்ளிகளுக்கிடையே, அதிக முரண்பாடு இருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலமாகி உள்ளது. அரசு பள்ளிகளில், பாடத்திற்கு, 10 மதிப்பெண் வீதம் வாங்கினால், பிளஸ் 1 பாஸ் எனும் நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 40 முதல் 60 மதிப்பெண் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 வகுப்பில், பொதுவாக மாணவர்களை, அதிகளவில் தோல்வி அடைய செய்வதில்லை. வருகைப் பதிவேடு மற்றும் பாடங்களில், ஓரளவிற்கு மதிப்பெண் பெற்றிருந்தால், 'பாஸ்' போட்டு விடுகின்றனர். இந்த நிலை, அரசு பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும் மட்டுமே காணப்படுகின்றன. அரசு உதவிபெறும் பள்ளிகளில், பாடத்திற்கு, 40; 50; 60 மதிப்பெண் என, நிர்ணயித்து, மாணவர்களை, அதிகளவில், தோல்வி அடையச் செய்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலத்திற்கு வந்துள்ளது. பிளஸ் 1 வகுப்பில், மாணவர் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை, அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில், பள்ளி கல்வித்துறை, எந்த அளவுகோலையும் நிர்ணயிக்கவில்லை.

மாறாக, அந்தந்த பள்ளி ஆசிரியர் குழுவே, தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை நிர்ணயிக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சியில் குறை வந்துவிடக் கூடாது என்பதற்காக, சுமாராக படிக்கக் கூடிய மாணவர்களை, பிளஸ் 1 வகுப்பிலேயே, வடிகட்டுவது, தற்போது தெரிய வந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், முத்தரசன், தகவல் அறியும் உரிமை சட்டத் தின் மூலம், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் வெவ்வேறு வகையான மதிப்பெண் நிலவரத்தை அறிந்துள்ளார். அவர் கூறியதாவது:

சென்னை, ஷெனாய் நகரில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2012 13ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1 தேர்ச்சிக்கு, ஆங்கிலம், இயற்பியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கு, தலா , 10 மதிப்பெண் நிர்ணயித்துள்ளனர். கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களுக்கு, 15 மதிப்பெண் என, நிர்ணயித்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள, வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில், தலா, 40 மதிப்பெண் என்றும், வில்லிவாக்கம், சிங்காரம்பிள்ளை மேல்நிலைப்பள்ளியில், தலா, 60 மதிப்பெண் என்றும் நிர்ணயித்துள்ளனர். அரசு பள்ளிகளில், 10 மதிப்பெண் முதல், 15 மதிப்பெண் வரை தான் உள்ளது. உதவி பெறும் பள்ளிகளில் மட்டும், 40 மதிப்பெண், 60 மதிப்பெண் என, நிர்ணயிப்பது, எந்த வகையில் நியாயம். உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களை, அதிகளவில், 'பெயில்' ஆக்குகின்றனர்.

கல்வித்துறை, அனைத்து வகை பள்ளிகளுக்கும், ஒரே வகை மதிப்பெண்ணை, தேர்ச்சிக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு, முத்தரசன் கூறினார். கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'இந்த பிரச்னையை, செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் சரி செய்யப்படும். அனைத்து வகை பள்ளிகளுக்கும், பிளஸ் 1 தேர்ச்சிக்கு, சரிசமமான மதிப்பெண் நிர்ணயம் செய்யப்படும்' என, தெரிவித்தது.