இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, September 25, 2014

புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை இன்றே பணியில் சேர கல்வித்துறை உத்தரவு

புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு, நேற்று முன்தினம் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்களுக்கு, நேற்று, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 12,700 புதிய ஆசிரியரைநியமனம் செய்வதற்கானகலந்தாய்வு, ஆகஸ்ட் இறுதி யில் துவங்கி, செப்., முதல் வாரம் வரை நடந்தது. '

வெயிட்டேஜ்' மதிப்பெண் தொடர்பான வழக்கில், புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, உயர் நீதிமன்ற மதுரை கிளை, இடைக்கால தடை விதித்தது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்கள் அனைத்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டன.இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடை உத்தரவும், நேற்று முன்தினம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான ஆசிரியர் களுக்கு, நேற்று பிற்பகல்,திடீரென, பணி நியமனஉத்தரவுகள் வழங்கப்பட்டன.இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட

அறிவிப்பு:செப்., 1ம் தேதி முதல், 5ம் தேதி வரை நடந்த கலந்தாய்வில் பங்கேற்று, பணியிடத்தை தேர்வு செய்தவர்களுக்கு, இன்று (நேற்று), பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், உடனடியாக, சம்பந்தபட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும்.இவ்வாறு, கல்வித்துறை அறிவித்துள்ளது.இதேபோல், தொடக்கக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில், 'இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு, உரிய சான்றிதழ்களுடன் சென்று, பணி நியமன உத்தரவை பெற்று, உடனடியாக, பணியில் சேர வேண்டும்' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.'புதிய ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும்' என, பணி நியமன உத்தரவை வழங்கிய அதிகாரி கள், அறிவுறுத்தி உள்ளன

ஆசிரியர் தகுதி தேர்வு : சலுகை மதிப்பெண் வழங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து

ஆசிரியர் தகுதி தேர்வில் 5 மதிப்பெண் சலுகை வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. மதிப்பெண் சலுகை வழங்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது. மேலும் நடைமுறைக்கு மாறாக 5 மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 2012ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசாணையை ரத்து செய்ய கோரி இவ்வழக்கு தொடரப்பட்டது

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 80 இடங்களை காலியாக வைக்க கோர்ட் உத்தரவு

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்குச் சேர ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் மார்க் எடுத்தால் வெற்றி என்ற நிலைமை இருந்தது. இதற்குப் பதிலாக வெயிட்டேஜ் என்ற முறையை பயன்படுத்தி ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனமும் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழரசன் உள்பட 73 பேர் வெயிட்டேஜ் முறையை 73 பேர் ஆசிரியர் நியமத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் 80 பணியிடங்களை காலியாக வைத்து விட்டு மற்ற பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு. மேலும் வழக்கு வரும் அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு. இதனால் பணிநியமத்திற்கு இருந்த அனைத்து தடைகளும் விலகியது.

ePayroll Online ECS User Manual

அனைத்து வகுப்பறையிலும் சுவர் வரைபடம் கட்டாயம் ’


வரலாறு, புவியியல் பாடங்களை, பள்ளிக் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு வகுப்பறையிலும், சுவர் வரைபடங்கள் (வால் மேப்) கட்டாயம் தொங்கவிடப்பட வேண்டும்’ என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிப் பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு வரை, சமூக அறிவியல் பாடம் முக்கிய இடத்தை வகிக்கிறது. மேல்நிலை கல்வியிலும், பிளஸ் -1, பிளஸ்- 2 வகுப்பில், குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டும் வரலாறு, புவியியல் பாடங்கள் உண்டு. இதில், மன்னர்களின் ஆட்சி எல்லைப் பகுதி, முக்கிய அமைவிடங்கள், அரசியல், நிலப்பரப்பு, கடல்கள், ஆறுகள், தட்பவெப்ப நிலை, விவசாயம், பயிர்கள் போன்றவை குறித்து, எளிதாக அறிந்துகொள்ள வரைபடங்கள் பெரிதும் உதவும்.

அதுமட்டுமல்லாமல், வரைபடங்கள் தொடர்பான வினாக்களும், தேர்வில் கேட்கப்படுகின்றன. குறிப்பாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வரைபடம் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே, நூறு மதிப்பெண்கள் எடுக்க முடியும். தேர்வுக்கு மட்டுமின்றி, பொது அறிவை வளர்ப்பதிலும், வரைபடங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இதற்காக, ’இந்தியா’, ’தமிழ்நாடு’, ’மாவட்டம்’ என, மூன்று வகையான வரைபடங்கள், வகுப்பறை சுவர்களில் தொங்கவிட வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி கூறுகையில், “பள்ளி வகுப்பறைகளில், தேர்வு நாட்களை தவிர, எல்லா நாட்களிலும், புவியியல் சுவர் வரைப்படங்கள், கட்டாயம் இடம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் எளிதில் உள்வாங்கிக் கொள்ள, சிறு குழுக்களாக பிரித்து, வாரந்தோறும் போட்டிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் போது, வரைபட நிகழ்வுகளுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும்,” என்றார்.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில், பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்களுக்கு சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் நியமன ஆணை வழங்கப்படும் :

பள்ளிக்கல்வித்துறை தகவல் - நாளை பணியில் சேர உத்தரவு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில், பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்களுக்கு இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையால், கடந்த ஒன்றாம் தேதி முதல் 5-ம் தேதி வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இக்கலந்தாய்வில் பங்கேற்று உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்கள் அனைவருக்கும் இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் பணிநியமன ஆணை வழங்கப்படவுள்ளது. அனைத்து பணிநாடுநர்களும் சம்பந்தப்பட்ட மையத்திற்குச் சென்று பணிநியமன ஆணையை பெற்று, உடனடியாக பள்ளிகளில் பணியேற்குமாறு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு, அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் சென்று ஒதுக்கீட்டு மற்றும் நியமன ஆணைகளை பெற்றுக்கொள்ளலாம் என தொடக்க கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 24, 2014

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோருபவர்கள் அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டாம்: உயர் நீதிமன்றம்


   தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், எந்த நோக்கத்துக்காகத் தகவல் கோரப்படுகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த பாரதி என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களைக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் கேட்கும் தகவல்களை வழங்க வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், எதிர் மனுதாரர் கோரிய அனைத்துக் கேள்விகளுக்கும் ஏற்கெனவே பதில் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தகவலறியும் உரிமைச் சட்ட விதிகளைத் தவறாகப் பயன்படுத்தும் வகையிலும், நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 53 மனுக்களை பாரதி தாக்கல் செய்துள்ளார். அவருக்குத் தேவையான தகவல்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டதால், மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி என். பால்வசந்தகுமார், நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தகவலறியும் சட்டத்தின் கீழ் தகவலைக் கோரும் நபர் அந்தத் தகவல் தன்னுடைய சொந்த நலனுக்காகவா அல்லது பொது நலனுக்காகவா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

இந்த இரண்டு காரணங்களுக்காகவும் தகவல் கோரும் ஒருவர், அந்தக் காரணம் தொடர்பான குறைந்தபட்ச விவரங்களையாவது அளிக்க வேண்டும். எந்த நோக்கத்துக்காகத் தகவல் கோரப்படுகிறது என்பதைத் தெரிவிக்காமல் தகவல் கோருவதை ஒரு வழக்கமான நடைமுறையாக மாற்ற முடியாது. எனவே, மத்திய தகவல் ஆணையத்தின் தவறான இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என கடந்த 17-ஆம் தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யத் திட்டமிட்டு, நீதிபதிகள் தாமாக முன்வந்து மீண்டும் பரிசீலனை செய்வதற்காகப் பட்டியலிட உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்து நீதிபதிகள் மீண்டும் பிறப்பித்த உத்தரவு: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோருபவர்கள் எதற்காகத் தகவல் கோரப்படுகிறது என்ற காரணத்தைத் தெரிவிக்கத் தேவையில்லை என்று தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 6(2)-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டப் பிரிவை கவனத்தில் கொள்ளாமல், தகவல் கோருபவர்கள் எதற்காக அந்தத் தகவல் கோரப்படுகிறது என்ற குறைந்தபட்ச காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என கடந்த 17-ஆம் தேதி இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது. அந்தக் கருத்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்துக்கு எதிராக உள்ளது. எனவே, இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தகவல் பெறுபவர்கள், எதற்காகத் தகவல் கோரப்படுகிறது என்ற காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்ற வரிகளை நீக்கி உத்தரவிடுகிறோம். எனவே, இந்த வரிகள் நீக்கப்பட்ட புதிய உத்தரவு நகலை வெளியிடுமாறு உயர் நீதிமன்றப் பதிவுத் துறைக்கு உத்தரவிடுகிறோம் என உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு, தனி நீதிபதி பிறப்பித்த இடைக்காலத் தடையை உயர் நீதிமன்ற அமர்வு புதன்கிழமை நீக்கியது.

   
     தமிழகத்தில் இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் முறையில் மதிப்பெண்கள் வழங்குவதை எதிர்த்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 14 பேர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தகுதிகாண் முறைக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த செப்.4-இல் உத்தரவிட்டார். இந்தத் தடையை நீக்கக் கோரி அரசு சார்பில் பள்ளிக் கல்வித் துறை செயலர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போது அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி, தகுதிகாண் முறை சரியானதல்ல என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தகுதிகாண் முறை சரியானதுதான் என உத்தரவிட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகும் தன்மை குறித்த கேள்வி எழுவதால், தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு


2014-15 ஆம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்து திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் 8 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை விவரம்:

அரியலூர் -3, கோவை-2, கடலூர்-2, தருமபுரி -3, திண்டுக்கல்-2, ஈரோடு-2, காஞ்சிபுரம் - 6, கன்னியாகுமரி-1, கரூர்-2, கிருஷ்ணகிரி -4, மதுரை -3, நாகப்பட்டினம்-2, நாமக்கல்-2, பெரம்பலூர்-2, புதுக்கோட்டை -5, ராமநாதபுரம்-3, சேலம்-4, சிவகங்கை-3, தஞ்சாவூர்-2, தேனி-2, திருவண்ணாமலை-6, திருநெல்வேலி-2, திருப்பூர்-1, திருவள்ளூர்-8, திருவாரூ-1, திருச்சி-2, தூத்துக்குடி-2, வேலூர்-11, விழுப்புரம்- 8, விருதுநகர் -4.

வரவேற்பு: உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தும் அறிவிப்பை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் வரவேற்றுள்ளது. அதேநேரத்தில், ஏற்கெனவே அறிவித்தவாறு 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளின் பட்டியல் வெளியீடு- tnkalvi


100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 29 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
*அரியலூரில் 3,
*கோவையில் 2, 
*கடலூரில் 2, 

*தருமபுரியில் 3, 
*திண்டுக்கல்லில் 2,
*விருதுநகர் மாவட்டத்தில் முத்தூர், விஸ்வனத்தம், உள்ளுர்பட்டி, பிள்ளையார்நத்தம், 
*மதுரை மாவட்டத்தில் அய்யங்கோட்டை, எம்.சுபலப்புரம், மேலக்கோட்டை,
*சிவகங்கை மாவட்டத்தில் பெரியகரை, முசுண்டம்பட்டி, சாத்தனூர்   உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற மாவட்ட பள்ளிகள் பட்டியல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் அவர்கள் விடுத்த பேட்டியில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள வழக்கு எண். W.P.NO.28785/2012 . உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் (ஆசிரியர்களை) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களை பல்வேறு பணிகள் செய்ய பயன்படுத்துகிறார்கள். அதில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணிகளில்  (ECS) ஈடுப்படுத்துவதால் ஆசிரியர் கற்பித்தல் பணி பாதித்து மாணவர்கள் தேர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது

. தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை வட்டாரத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டது. இதற்கு சென்னை உயர் நீதிமன்ரத்தின் நீதியரசர் திருமதி. உஷா பரந்தாமன் வழங்கிய தீர்ப்பில் ஆசிரியர்களை பல்வேறுபட்ட பணிகளுக்கு ஈடுப்படுத்தக்கூடாது "குறிப்பாக சம்பளம் பட்டியல் தயாரிக்கும் பணியில் (ECS) ஈடுபடுத்திடகூடாது, என்றும் அப்படி ஈடுபடுத்தினால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது பாதிப்படையும் என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

FLASH NEWS : ஆசிரியர் பணி நியமனத்துக்கு விலகியது தடை

 
ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை  மதுரை உயர்நீதிமன்றம் நீக்கியது .... இன்று வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது.... ஆசிரியர் பணி நியமனதிர்க்கான அணைத்து தடையினையும் விலக்கிகொள்வதாக நீதிபதி அறிவித்தார்... இதன் மூலம் ஆசிரியர் பணி நியமனம் விரைவில் நடைபெறும் ...   ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையயை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்த தனிநீதிபதி, ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்தார். தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், தமிழக அரசு சார்பி்ல், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலத்தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார் ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையயை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்ததனிநீதிபதி, ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்தார்.

தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், தமிழக அரசு சார்பி்ல், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலத்தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால் தேர்வான ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கான தடை விலகியது.மேலும் ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு பணிநியமனம ஆணை பற்றிய அறிவிப்பையும்,பணியில் எப்போது சேரவேண்டும் என்ற அறிவிப்பையும் அரசு விரைந்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, September 23, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை அமல்  

''மத்திய ஊழியர்களுக்கு, இந்த மாத இறுதிக்குள், 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை, முழு அளவில் அமலாகும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ராம் சேவக் சர்மா கூறினார். டில்லியில் நேற்று அவர் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஆதார் அடிப்படையிலான, பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையானது, இந்த மாத இறுதிக்குள் முழு அளவில் செயல்பாட்டிற்கு வரும். அதனால், இனி, தங்களின் வருகைப் பதிவு விபரங்களை, attendence.gov.in என்ற இணையதளம் மூலமாக, மத்திய அரசு ஊழியர்கள் பார்க்கலாம். மையப்படுத்தப்பட்ட மேலாண்மை முறை மூலம், இந்த வருகைப்பதிவு கையாளப்படும். மத்திய அரசு ஊழியர்கள், தங்களின் அலுவலகங்களில் உள்ள, பயோமெட்ரிக் கருவியில், தங்களின் விரல் ரேகையை பதிவு செய்து, தங்களின் அலுவலக வருகையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதன்மூலம், ஊழியர்கள் சரியான நேரத்திற்கும், ஒழுங்காகவும் பணிக்கு வருகின்றனரா என்பதை அறிந்து கொள்ளலாம்.தற்போது, பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில், 1,816 பயோ மெட்ரிக் கருவிகள் செயல் பாட்டில் உள்ளன. இவற்றின் மூலம், 43 ஆயிரம் பேர், தங்களின் வருகையை பதிவு செய்கின்றனர்.இவ்வாறு, ராம்சேவக் வர்மா கூறினார்.

மின் கட்டணத்தை 15% உயர்த்த ஆணையம் தன்னிச்சையாக முடிவு

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வருவாய்க்கும், செலவுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக நிகழாண்டுக்கான (2014-15) உத்தேச மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

இதன்படி, வீடுகளுக்கு, தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் முன்பைவிட 15 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், மின் பயன்பாட்டு கட்டணத்துடன் வசூலிக்கப்படும் நிரந்தர கட்டணமும் முன்பைவிட ரூ. 10 முதல் 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு குறித்து கருத்துக்கள், ஆலோசனைகளை நுகர்வோர், தொழில் நிறுவனங்களிடமிருந்து ஒழுங்குமுறை ஆணையம் வரவேற்றுள்ளது.

உத்தேச மின் கட்டண உயர்வு விவரம் (யுனிட் ஒன்றுக்கு இரண்டு மாத பயன்பாட்டுக்கான கட்டணம்):

தாழ்வழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் வீடுகள், கோயில்கள், குறு நிறுவனங்களுக்கான கட்டண உயர்வு விவரம்:

வீடுகளுக்கு யூனிட் உத்தேச உயர்வுக் கட்டணம் (தற்போதையக் கட்டணம்): 0-100 வரையில் ஒரு யூனிட்டுக்கு ரூ. 3 (ரூ.2.60); 0-200 ரூ. 3.25 (ரூ. 2.80); , 201-500 யூனிட்டுகளில் 0 முதல் 200 வரை தனியாகவும், 201 முதல் 500 வரை தனியாகவும் கணக்கிட்டு வசூலிக்கப்படும்.

0-200 ரூ. 3.50 (ரூ.3); 201-500 ரூ. 4.60 (ரூ. 4); , 501 யூனிட்டுக்கு மேல் 0-200, 201-500, 501-க்கு மேல் என்ற அடிப்படையில் தனித்தனியாக கணக்கிடப்படும். 0-200 ரூ.3.50 (ரூ.30); 201-500 ரூ. 4.60 (ரூ. 4); 501-க்கு மேல் ரூ. 6.60 (ரூ.5.75).

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்- ஒரு யூனிட் ரூ.5.75 (ரூ. 5). தனியார் கல்வி நிறுவனங்கள் ஒரு யூனிட் ரூ. 7.50 (ரூ. 6.50). கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள்-ஒரு யூனிட் ரூ. 5.75 (ரூ. 5 ).

காட்டேஜ்கள், குறு நிறுவனங்கள்: 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட் ரூ. 4 (ரூ. 3.50); 500 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட் ரூ. 4.60 (ரூ. 4). விசைத்தறி நிறுவனங்கள்- 2 மாதங்களுக்கு 0-500 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட் ரூ. 5.20 (ரூ. 4); 501-1000 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட் ரூ. 5.75 (ரூ. 5).

தொழில் நிறுவனங்கள்- ஒரு யூனிட் ரூ. 7.22 (ரூ. 5.50).

வர்த்தக ரீதியிலான மின் பயன்பாடு-2 மாதங்களுக்கு 100 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ. 4.95 (ரூ. 4.30); 100 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட் ரூ. 8.05 (ரூ. 7).

கட்டுமானம் போன்ற தாற்காலிக மின் இணைப்புகள்: ஒரு யூனிட் ரூ. 12.10 (ரூ. 10.50).

குடிசை வீடுகள், விவசாய பயன்பாட்டுக்கான மின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ள போதிலும், அவற்றுக்கான மின் பயன்பாட்டு கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொண்டு, மானியமாக மின் வாரியத்துக்கு அளித்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் அழுத்த பயன்பாட்டு உத்தேச உயர்வுக் கட்டணம் (தற்போதையக் கட்டணம்): தொழில் நிறுவனங்கள்: ரூ. 7.22 (ரூ. 5.50); ரயில்வே- ரூ. 7.22 (ரூ. 5.50); அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்- ரூ. 7.22 (ரூ. 4.50); தனியார் கல்வி நிறுவனங்கள் ரூ. 7.22 (ரூ. 5.50); வர்த்தக பயன்பாடு- ரூ. 8.05 (ரூ. 7); தாற்காலிக பயன்பாடு ரூ.11 (ரூ. 9).

மின் வாரியத்துக்கு ரூ. 6,854 கோடி இழப்பு

தமிழ்நாடு மின் வாரியத்துக்கு 2014-15 ஆம் ஆண்டுக்கான வருவாய் தேவை ரூ. 39,818 கோடியாகும்.

ஆனால், மின் வாரியத்தின் வருவாய் ரூ. 32,964 கோடி அளவிலேயே உள்ளது. இதனால் ரூ. 6,854 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச உயர்வுக் கட்டணம் மூலம், மின் வாரியத்துக்கு ரூ. 6,805 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

எனினும், மின் வாரியத்துக்கு நிகழாண்டில் ரூ. 49 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.