இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909
Showing posts with label tnpsc. Show all posts
Showing posts with label tnpsc. Show all posts

Thursday, December 15, 2016

THE POST OF VAO - 2014-2015 | TNPSC VAO பணிக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC COUNSELLING FOR THE POST OF VAO - 2014-2015 | TNPSC  VAO பணிக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் 2014-2015 பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.19/2015, நாள் 12.11.2015 வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 28.02.2016 முற்பகல் அன்று நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 01.07.2016 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 01.08.2016 முதல் 08.08.2016 வரை நடைபெற்றது. இத்தெரிவிற்கான கலந்தாய்வு சென்னை–600003, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 19.12.2016 முதல் 23.12.2016 நடைபெறுகிறது. கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் மற்றும் தரவரிசையின்படி கால அட்டவணைப் பட்டியல் தேர்வாணைய இணையத் தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையத் தளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, November 09, 2016

TNPSC group IV tentative answer key

Click below

http://www.tnpsc.gov.in/answerkeys_06_11_2016.html

TNPSC GROUP I க்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் காலியாகவுள்ள 85 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர்கள் என 85 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இன்று அறிவித்துள்ளது.

இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்கவுள்ள தகுதியான நபர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் , டிசம்பர் 8-ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய முறைகளில் தேர்வு நடைபெறவுள்ளது.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. துணை ஆட்சியர் - 29
2. துணை காவல் கண்காணிப்பாளர் - 34
3. உதவி ஆணையர் - 08
4. மாவட்ட பதிவாளர் - 01
5. மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி - 05
6. மாவட்ட அதிகாரி (தீயணைப்புத்துறை)
தேர்வுக் கட்டணம் விவரம்:
பதிவுக் கட்டணம் ரூ.50
முதல்நிலை எழுத்துத் தேர்வு கட்டணம் ரூ.75
முதன்மை எழுத்துத் தேர்வு கட்டணம் ரூ.125. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 19.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_19_not_eng_ccs1(grp1)_services.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Monday, November 07, 2016

திருத்திய அறிவுரை இணையதளத்தில் வெளியீடு தேர்வு கூடத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் தேர்வு எழுத நிரந்தர தடை


டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கான திருத்திய அறிவுரைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) விண்ணப்பதாரர்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட அறிவுரைகளை தேர்வாணைய இணையதளத்தில்(www.tnpsc.gov.in,www.tnpscexams.net, www.tnpscexams.in) வெளியிட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலத்தில் அறிவுரைகள் உள்ளன. மொத்தம் 27 அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவுரைகள் வருமாறு:

* அரசு பணிகள் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் தேர்வாணைய இணையதளத்திலும், செய்தித்தாள்களிலும் வெளியிடப்படுகிறது. அவ்வாறு வெளியிடப்படும் காலிப்பணியிடங்களுக்கான எண்ணிக்கை தோராயமானதாகும். தேர்வு பணிகள் இறுதியாகும் வரை அவை எந்த நேரத்திலும் மாறுதலுக்கு உட்பட்டதாகும்.

* தேர்வுக்கு www.tnpsc.gov.in,www.tnpscexams.net, www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

* எந்த ஒரு பதவிக்கும் விண்ணப்பிக்கும் முன்பு ஒருமுறைப்பதிவு எனப்படும் நிரந்தரப்பதிவு மற்றும் தன் விவரப்பக்கம் ஆகியன கட்டாயமாகும். ஒருமுறைப்பதிவு, பதிவு செய்த நாள் முதல் 5 ஆண்டுகள் நடை முறையில் இருக்கும். ஒரு முறைப்பதிவு செய்வதற்கு பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண் ஆகியவை கட்டாயமாகும். மின்னஞ்சல், செல்போன் எண் ஆகியவற்றை தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தேர்வு தொடர்பான செய்திகள் அனைத்தும் விண்ணப்பதாரர் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண்ணுக்கு மட்டுமே அனுப்பப்படும்.

* கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தாமதமோ அல்லது தொழில்நுட்ப சிக்கலோ எழ வாய்ப்புள்ளது. இது போன்ற காரணங்களால் கடைசி கட்ட நாளில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது. 18 வயதை நிறைவு செய்யாதவர், கருணை அடிப்படையிலான நியமனம் உள்ளிட்ட யாதொரு பணி தொகுதிக்கும் நேரடி நியமனம் மூலமாக நியமனம் செய்ய தகுதியற்றவராவார்கள்.

* தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்களிடம் ஆதரவை பெற கடிதத்தின் மூலமாகவோ அல்லது ஏவரேனும் உறவினர், நண்பர், காப்பாளர், அலுவலர் அல்லது வேறொருவர் மூலமாக செல்வாக்கை செலுத்த முயற்சித்தால் விண்ணப்பதாரர்கள் அத்தேர்வுக்கு தகுதியற்றவராக ஆக்கப்படுவர்.

* விண்ணப்பதாரர்கள் தேர்வு கூடத்தில் ஏதாவது ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுதல், அதாவது மற்ற விண்ணப்பதாரர்களுடன் கலந்தாலோசிப்பது, மற்றவர்களின் விடைத்தாள்களை பார்த்து எழுதுவது, குறிப்புகள் கொண்டுவருவது, தேர்வுக்கூட கண்காணிப்பாளர் அல்லது மற்றவர்கள் உதவியை நாடுவது போன்றவை தடை செய்யப்படுகிறது. இதனை மீறுபவர்கள் தேர்வு கூடத்தை விட்டு வெளியேற்றப்படுவர். அது மட்டுமல்லாமல் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும். அந்த தேர்வு மற்றும் எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்ளவும் தகுதியற்றவராக்கப்படுவர்.

* தேர்வு கூடத்துக்கு ஹால் டிக்கெட்டை எடுத்து செல்ல தவறுவது இரண்டு மதிப்பெண் குறைத்தல் அல்லது விடைத்தாளை செல்லாததாக்குதல் போன்றவற்றிற்கு வழிகோலும். அவ்வாறான ஒவ்வொரு நேர்விலும் தேர்வாணையம் தகுதியின் அடிப்படையில் எது சரியெனப்படுகிறதோ அவ்வாறு முடிவு எடுக்கும் உள்ளிட்ட அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன.

Tuesday, November 01, 2016

TNPSC குரூப் 1 தேர்வு விரைவில் அறிவிப்பு

TNPSC குரூப் 1 தேர்வு விரைவில்

85 பணியிடங்களை நிரப்ப குரூப்–1 தேர்வு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது.

குரூப்–4 தேர்வு

தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்து தேர்வு நடத்தி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது.

வருகிற 6–ந்தேதி குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. 5 ஆயிரத்து 451 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வை அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்த தேர்வுக்கு 12 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்து இருந்தாலே போதும். ஆனால் விண்ணப்பித்தவர்களில் ஏராளமானவர்கள் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப்–1

இந்த நிலையில் 85 பணியிடங்களை நிரப்ப குரூப்–1 தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த 85 பணியிடங்களில் 30 பணியிடங்கள் துணை கலெக்டர்கள், 33 பணியிடங்கள் துணை சூப்பிரண்டு ஆகும். மீதம் உள்ள 22 பணியிடங்கள் வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆவார்கள்.

இந்த குரூப்–1 பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய முதல் நிலை தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வை எழுதுவார்கள். அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வார்கள். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதியாக பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

பிப்ரவரியில் தேர்தல்

85 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வருகிற 9–ந்தேதி வெளியிடும் என்று கூறப்படுகிறது.