இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, January 31, 2017

2017-18 budjet

2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

வறட்சியை சமாளிக்க ஐந்து லட்சம் குளங்கள்

* வறட்சியை சமாளிக்க நாடு முழுவதும் ஐந்து லட்சம் குளங்கள் ஏற்படுத்தப்படும்.

* 1.50 லட்சம் கிராமங்களில் இணையதள சேவை

* 2019க்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ- டாய்லெட் வசதி ஏற்படுத்தப்படும்.

தலைமை தபால் அலுவலகத்தி்ல் பாஸ்போர்ட்

* தலைமை தபால் அலுவலகத்தி்ல் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சிறுதொழில் கடன் வழங்க ரூ.2.44 லட்சம் கோடி ஒதுக்கப்படும்

* ராணுவத்திற்கான நிதி ரூ.2,74,11 கோடி ஒதுக்கீடு

* நாடு முழுவதும் ஒரு கோடி குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* 50 ஆயிரம் கிராம ஊராட்சிகள் வறுமை இல்லாதவையாக மேம்படுத்தப்படும்.

வங்கிக்கடன் செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல்

* வங்கிக்கடன் திருப்பித் தராதவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய சட்டம் கொண்டு வரப்படும்.

* இளைஞர்கள் அறிவியலில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* நிதி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பினாலும் சொத்து பறிமுதல் செய்யப்படும்.

* நிதிப்பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தியில் 3.2 சதவீதமாக இருக்கும்.

* புதிதாக இரண்டு கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

* தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்

ரயில் பாதுகாப்புக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி

* ரயில் பாதுகாப்புக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

* இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய மெட்ரோ ரயில் கொள்கை உருவாக்கப்படும்.

* போக்குவரத்து துறைக்கு ரூ.2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

* அந்திய முதலீட்டு அனுமதி வாரியம் கலைக்கப்படும்

* ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் எண்ணிக்கை 200லிருந்து 500 ஆக அதிகரிக்கப்படும்

* வங்கிகளில் சட்டவிரோத டெபாசிட்டுகளை தடுத்திடும் வகையில் சட்டம் இயற்றப்படும்.

ஆதார் பணப் பரிவர்த்தனை அறிமுகம்

* ஆதார் அடிப்படையிலான பணப் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்படும்.

* ரயில் பயணிகளின் பாதுகாப்பு, தூய்மைக்கு முக்கியத்தும் தரப்படும்.

* 3,500 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.

* அகல ரயில் பாதை தடத்தில் 2020க்குள் ஆளில்லா ரயில்வே கேட் இல்லாத நிலை எட்டப்படும்.

* மூத்த குடிமக்களுக்கு 8 சதவீதம் உறுதியான வருவாயுடன் எல்ஐசியில் திட்டம்

* 7000 ரயில்களில் சூரிய ஒளி மின்திட்டம் செயல்படுத்தப்படும்.

உயிர்காக்கும் மருந்து விலை குறைப்பு

* உயிர்காக்கும் மருந்துகள், கருவிகளுக்கான விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நுண் சொட்டு நீர் பாசனத்துக்கு தொடக்க மூலதனம் ரூ.5,000 கோடி நிதி.

* அனைத்து உயர்கல்வி தேர்வுகளையும் சிபிஎஸ்இ உள்ளிட்ட அமைப்புகள் நடத்தாது.

* உயர்கல்வி தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை ஏற்படுத்தப்படும்.

* உயர்கல்வித்துறையின் பல்கலைக்கழக மானிய குழுவில் சீர்திருத்தம் செய்யப்படும்.

* கல்லூரிகள், கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

* பயணிகளுக்கு உதவ ரயில் பெட்டிகளில் உதவியாளர்கள் நியமிக்கப்படுவர்.

* நகர்புற வளர்ச்சியில் மெட்ரோ ரயில் கட்டமைப்பின் பங்கு இன்றியமையாததாகிறது.

* கட்டமைப்பு துறைக்கு ரூ.3.96 லட்சம் கோடி ஒதுக்கீடு

* 2019க்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பசுமை கழிப்பறைகள் அமைக்கப்படும்.

ஐஆர்சிடிசியில் சேவை வரி ரத்து

* ஐஆர்சிடிசி தளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை வரி கிடையாது.

குஜராத், ஜார்க்கண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை

* வெளிநாட்டு மொழிக்கல்வி கற்றுத்தர  நடவடிக்கை எடுக்கப்படும்.

* மூன்று கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

* பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு ரூ.1,84,000 கோடி ஒதுக்கீடு (கடந்த ஆண்டு ரூ.1,56,000 கோடி)

* மருத்துவ சாதனங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* குஜராத், ஜார்க்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள் அமைக்கப்படும்.

* கிராமப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கடன் வட்டி குறைக்கப்படும்.

* எஸ்.சி பிரிவு மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.52,393 கோடி ஒதுக்கீடு (கடந்த அண்டு ரூ.38,833 கோடி)

* இளைஞர்களின் வருடாந்திர கற்றலை அளவிட புதிய முறை உருவாக்கப்படும்.

* நாட்டில் 2019-ம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்.

* 2017-18 நிதியாண்டில் விவசாய வளர்ச்சி 4.

சதவீதமாக இருக்கும்.

* கச்சா எண்ணெய் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவது சவாலாக உள்ளது.

* கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,17,000 கோடி (கடந்த ஆண்டு ரூ.87,765 கோடி)

* பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்

* மாணவர்கள் புதுமை படைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் மகளிர் பங்களிப்பு 55 சதவீதம் உயர்வு.

* அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 2019ம் ஆண்டிற்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.

* பெணிகளின் வளர்ச்சிக்காக கிராமங்களில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

* 100 நாள் வேலை திட்டத்துக்காக முன்பை விட அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ஊரக, வேளாண் சார்ந்த துறைகளுக்கு 2017-18ல் ரூ.1,87,223 கோடி ஒதுக்கீடு

அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி

* வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்.

* இந்தியாவை தொழில்நுட்ப பலமிக்க நாடாக மாற்றுவதே அரசின் இலக்கு.

* விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டில் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்புக்காக நபார்டு மூலம் ரூ.8000 கோடி வழங்கப்படும்.

* கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ தூரத்துக்கு புதிய சாலை அமைக்கப்படும்.

* சிறுகுறு விவசாயிகள் தடையின்றி எளிதாக கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* 2018, மே ஒன்றாம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தப்படும்.

விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி

* நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 361 பில்லியன் டாலராக உள்ளது.

* ரயில்வேத்துறை சுதந்திரமாக இயங்கும்

* வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க வழி ஏற்படும்.

* விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்கு இலக்கு (கடந்த ஆண்டு சுமார் 9 லட்சம் கோடி)

* உலக பொருளாதார வளர்ச்சி 2017ல் 3.4 ஆக இருக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது.

* உலக பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும் இந்திய பொருளாதாரம் நிலையாக உள்ளது.

* பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13,000 கோடி இலக்கு.(கடந்த ஆண்டு ரூ.5,500 கோடி)

* கச்சா எண்ணெய் விலையில் நிச்சயமற்ற நிலை நிலவுவது சவாலாக உள்ளது.

* பல்லாண்டு வரி ஏய்ப்பை தடுக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கை உதவியுள்ளது.

* பணமதிப்பு நீக்க பாதிப்பை நீக்க புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.

* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 7.7 சதவீதம் அதிகரிக்கும்.

அமெரிக்காவால் பாதிப்பு

* அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

* இரண்டரை ஆண்டுகளில் பாஜக அரசு நிர்வாக சீர்திருத்தங்களை எடுத்துள்ளது.

* நாட்டின் முக்கியமான பொருளாதார காரணிகள் திருப்திகரமான உள்ளன.

* பணமதிப்பு நீக்கத்தின் விளைவு அடுத்த ஆண்டு தெரியவரும்.

* ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்தது.

* கறுப்புப் பணத்திற்கு எதிரான பணமதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது.

* வேலைவாய்ப்பை உருவாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம்.

* பணமதிப்பு நீக்கம் என்ற முக்கியமான முடிவை அரசு செயல்படுத்தியுள்ளது.

* ஜிஎஸ்டியில் ஒருமித்த கருத்தை எட்ட உதவிய அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி.

* பண  மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டிற்கு நீண்ட கால பலனளிக்கும்.

* கடந்த ஓராண்டில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

* அரசின் கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

* வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் 2016ல் 36 சதவீதம் உயர்ந்துள்ளது.

* இளைஞர் நலன், வேலைவாய்ப்புக்கு அரசு முக்கியவத்தும் கொடுத்து வருகிறது.

* மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.

* உலகப் பொருளாதாரம் நிலையாக இல்லாத நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

* நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது

2016-17 ஒரு பார்வை

2016-2017-ஆம் ஆண்டின் வருமான வரி விகிதங்கள் விவரம்..!

நடப்பு நிதியாண்டில், அதாவது 2016-17ஆம் ‌ஆண்டில் தனிநபர் வருமான வரி விகிதங்களை தெரிந்து கொள்வோம். இதில் இன்று மாற்றம் செய்யப்பட்டால், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், அதாவது அடுத்த நிதியாண்டில் அமலுக்கு வரும். தற்போதைய நிதியாண்டில்,

*ஆண், பெண் இருபாலருக்கும் ஆண்டு வருமானம் இரண்டரை லட்ச ரூபாய் வரை வரி இல்லை.

*இரண்டரை லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை வருமானத்துக்கு 10 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. 5 லட்சத்தில் இருந்து 10 லட்ச ரூபாய் வரை வருமானத்துக்கு 20 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.

*10 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள வருமானம் முழுவதற்கும் 30 சதவிகித வரி செலுத்த வேண்டும்.

*இந்த 3 பிரிவுகளில் செலுத்தப்படும் வரித் தொகை மீது 2 சதவிகித கல்வி வரி, 1 சதவிகித கல்விக் கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது.

*60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை வரி இல்லை.

*3 லட்சத்துக்கு மேல் 5 லட்ச ரூபாய் வரை 10 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.

*5 லட்சத்துக்கு மேல் 10 லட்ச ரூபாய் வரை 20 சதவிகிதமும், 10 லட்ச ரூபாய்க்கு மேல் 30 சதவிகிதமும் வருமான வரி செலுத்த வேண்டும். வரித் தொகை மீது 2 சதவிகித கல்வி வரி, 1 சதவிகித கூடுதல் உயர்கல்வி வரி ஆகியவை மூத்த குடிமக்களுக்கும் பொருந்தும்

*80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கு 5 லட்ச ரூபாய் ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது

*5 லட்சம் முதல் 10 ‌லட்ச ரூபாய் வரை 20 சதவிகித வரியும், 10 லட்ச ரூபாய்க்கு மேல் 30 சதவிகிதமும் வரி செலுத்த வேண்டும். கல்விக்கான வரிவிதிப்புகள் இவர்களுக்கும் பொருந்தும்

வருமான வரி விகிதங்கள் இவ்வாறு இருப்பிலும், மொத்த வரித் தொகையில் 5 ஆயிரம் ரூபாய் வரை வரிக்கழிவு அனுமதிக்கப்படுகிறது. அதன் பிறகும் வரி செலுத்த வேண்டியிருப்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் ஒன்றரை லட்ச ரூபாய் வரை பல்வேறு சேமிப்பு மற்றும் செலவுக்கான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. காப்பீடு பிரீமியம், குழந்தைகளின் கல்விக் கட்டணம், மியூச்சுவல் ஃபண்ட், வருங்கால சேமிப்பு நிதி, பொது வருங்கால வைப்பு, அஞ்சலக பத்திரங்கள் மற்றும் வீட்டுக் கடனில் திருப்பிச் செலுத்தும் அசல் தொகை ஆகியவை இதில் அடங்கும்.

தவிர, மருத்துவக் காப்பீடு பிரீமியம், தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றுக்கும் முறையே 30,000 மற்றும் 50,000 வரை வரிவிலக்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும், வீட்டு வாடகையை கழித்துக் கொள்ளவும், வீட்டுக் கடன் வட்டிக்கு 2 லட்ச ரூபாய் வரையும் வரிவிலக்கு அனுமதிக்கப்படுகிறது.

இந்த வரிவிலக்குகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வோருக்கு 6 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டிய தேவையில்லாத நிலை உள்ளது.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு இனி பொதுத்தேர்வு கட்டாயம்


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு உண்டு' என, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டு வரை, இரண்டு வகை இறுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அதாவது, 10ம் வகுப்புக்கு பின், வேறு பாடத்திட்டத்துக்கு மாறுவோருக்கு, சி.சி.இ., என்ற தொடர் மதிப்பீட்டு முறை தேர்வும், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்திலேயே, பிளஸ் 1 படிப்போருக்கு, கட்டாய பொதுத் தேர்வும் அமலில் உள்ளது. இந்நிலையில், வெறும் சி.சி.இ., அடிப்படையிலான, பள்ளி அளவிலான தேர்வு முறையால், மாணவர்களின் கற்றல் தரம் குறைந்துள்ளதாக, நிபுணர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, பள்ளி அளவிலான சி.சி.இ., இறுதி தேர்வை ரத்து செய்து, பொதுத் தேர்வை கட்டாயமாக்க, மத்திய அரசின் கல்வி ஆலோசனை குழு பரிந்துரை செய்தது.

இது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதற்கு, கடந்த மாதம், சட்ட அமைச்சகம் அனுமதி அளித்தது. தொடர்ந்து, கட்டாய பொதுத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை, நேற்று இரவு, சி.பி.எஸ்.இ., வெளியிட்டது. புதிய அறிவிப்பின்படி, 2017 - 18ம் கல்வி ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் படிக்கும், அனைத்து, 10ம் வகுப்பு மாணவர்களும், பொதுத் தேர்வு எழுத வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஏற்கனவே இருக்கும் இரட்டை தேர்வு முறையே நீடிக்கும் என, அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

முற்றுகை போராட்டம் : ஆசிரியர்கள் அறிவிப்பு


கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை மறுநாள், முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக, ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் பாலசந்தர் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து; இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு சம்பளம்; எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' திட்டம் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளுக்காக, போராட்டம் நடக்கிறது. பிப்., 3ல் தொடக்க கல்வி இயக்குனரகம் முன், முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவப்படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மே 7ந்தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவிப்பு...

Grade pay அறிமுகம் அடிப்படை விதிகளில் திருத்தம் அரசாணை


Monday, January 30, 2017

பள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: அமைச்சர் பாண்டியராஜன்


வரும் கல்வியாண்டில் இருந்து அரசின் பள்ளிப் பாடத் திட்டத்தில் காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபூபக்கர் பேசியது:

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அரசின் பள்ளி பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருந்த காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாறு எடுக்கப்பட்டுவிட்டது. எனவே, அரசு மீண்டும் அவரது வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் குறுக்கிட்டுக் கூறியது: வரும் கல்வியாண்டில் இருந்து அரசின் பாடத்திட்டத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்றார்.

ஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை:தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு


உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை ஜூன் 30-ந் தேதி வரை நீட்டித்து சட்டசபையில் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல்

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 794 பதவி இடங்கள் உள்ளன.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதியுடன் முடிவடைந்தது. அதே மாதத்தில் 17 மற்றும் 19-ந் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

தேர்தல் ரத்து

ஆனால் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தது. மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டு டிசம்பர் 31-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதுவரை உள்ளாட்சி நிர்வாகிகளை நிர்வாகிக்க தனி அதிகாரிகளை நியமிக்கவும் உத்தரவிட்டது.

தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசர சட்டத்தை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அக்டோபர் 17-ந் தேதி பிறப்பித்தார். டிசம்பர் 31-ந் தேதி வரை தனி அதிகாரிகள் அந்த பொறுப்பில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பதவிக்காலம் நீட்டிப்பு

இந்தநிலையில், டிசம்பர் 31-ந் தேதி உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவி காலத்தை 6 மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்தது. இதற்கான உத்தரவை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்தார்.

அந்த உத்தரவில், தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதத்திற்கு (ஜூன் 30-ந் தேதி வரை) நீட்டிக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்று கூறப்பட்டு இருந்தது. இந்த புதிய அரசாணை கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.

சட்ட முன்வடிவு

அந்த சட்ட திருத்தத்திற்கான சட்ட முன்வடிவு சட்டசபையில் நேற்று கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், மாநகராட்சிகள், நகராட்சிகள் தொடர்பான சட்ட திருத்த சட்ட முன்வடிவுகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொண்டு வந்தார். சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றின் வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சிகளின் தலைவர்களின் பதவிகளில் உள்ள சாதாரணமான காலியிடங்களை நிரப்பும் நோக்கத்திற்காக அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கிடையில் அரசின் அறிவிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு உத்தரவில் 2016 டிசம்பருக்கு முன்னதாக தேர்தலை நடத்தவும், தேர்தல் பணிகளை முடிக்கவும் புதிய அறிவிக்கை வெளியிடுமாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தி இருந்தது. மேலும் தேர்தல் நடத்தும் வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை அமர்த்தவும் அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது.

ஐகோர்ட்டின் உத்தரவின்படி, உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று முதல் கூட்டம் நடைபெறும் நாள் வரை அல்லது டிசம்பர் 31-ந் தேதி வரை இதில் எது முந்தியதோ அதுவரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். அதன்படி தனி அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டனர். இதற்கான அவசரச்சட்டத்தை கவர்னர் பிறப்பித்தார்.

விடைத்தாள் திருத்தும் பணி

தமிழ்நாடு ஊராட்சிகள் தேர்தல் விதிகளின்படி, ஊராட்சி வாக்காளர் பட்டியலுக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் வாக்காளர் பட்டியல் அடிப்படையாக இருக்கிறது. வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க சீராய்வு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறக்கூடியதாக இருக்கும். சட்டமன்ற பேரவையின் வாக்காளர் பட்டியல்கள் பெறப்பட்டதன் பேரில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சாதாரணமான தேர்தல்களை நடத்தும் நோக்கத்திற்காக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட இயலும்.

2017-ம் ஆண்டு மார்ச் 2-ந் தேதி மற்றும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு இடையில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு உள்ளடங்கலாக நடைபெறும் என்றும் பெரும்பாலான வாக்குப்பதிவு அலுவலர்கள் பள்ளிக்கல்வி துறையின் தேர்வு பணியினை பார்த்து கொண்டிருப்பர் என்றும் அதன் காரணமாக அவர்களை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக தேர்தல் பணிக்காக அமர்த்த முடியாது மற்றும் மிக பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் பணிகளுக்காக அமர்த்த முடியாது.

மிக பெரும்பாலான பள்ளிகட்டிடங்கள் வாக்குசாவடியாக பயன்படுத்தப்படுகின்றன என்பதாலும் அவைகள் ஆண்டுத்தேர்வுக்கு பிறகு, 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்