இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, October 17, 2017

பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி


குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டியை அஞ்சல் துறை நடத்துகிறது. வடிவமைக்கும் அஞ்சல் தலை மாதிரிகளை அனுப்ப அக்.20ம் தேதி கடைசி நாள். இதுகுறித்து, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ‘கூடு’ (NEST) என்ற பெயரில் அகில இந்திய அளவில் அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டி நடக்க உள்ளது. இந்தப் போட்டி 5 வகுப்பு மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், 5 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இன்னொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர்.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு ஏற்ப அஞ்சல் தலையின் மாதிரியை ஏ4 தாளில் வரைந்து உதவி தலைமை இயக்குநர் (ஏடிஜி-அஞ்சல்தலை சேகரிப்பு), அறை எண்:108, டாக் பவன், புதுடெல்லி - 110001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாதிரிகள் அஞ்சல் தலைகளாகவும், சிறப்பு அஞ்சல் உறைகளும் வெளியிட பயன்படுத்திக் கொள்ளப்படும். அஞ்சல்தலை மாதிரிகளை அக்.20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment