இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, October 05, 2017

நவோதயா பள்ளி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?


நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து, அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: கரூர் மாநாட்டில் எம்பி தம்பிதுரை பேசும்போது, தமிழகத்துக்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று பேசியுள்ளார்.

தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? வருமா வராதா? மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இதுதொடர்பாக ஒரு வழக்கு உள்ளது. இது கொள்கை முடிவாக இருப்பதால் முதல்வர் மற்றும் அமைச்சர்களை கலந்து பேசி அதன் முடிவின் அடிப்படையில் அதுபற்றி நீதிமன்றத்துக்கு கடிதங்கள் எழுதுவோம். தமிழ் மொழியை இணைத்துக் கொண்டால் நவோதயா பள்ளிகளை ஏற்றுக் கொள்வீர்களா? அது கொள்கை முடிவென்று ஒரே வரியில் கூறிவிட்டேன். தனித்தனியாக கேள்விகள் கேட்டால் எப்படி? முதல்வருடன் கலந்து பேசி பிறகு அறிவிப்போம். முதல்வர் முன்னிலையில்தான் தம்பிதுரை பேசியுள்ளாரே? தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவர் ஒரு கருத்து கூறினால் நான் பதில் கூறமுடியாது.

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 7 ஆண்டுகளாக ஆசிரியர் பணி நிரப்பப்படாமல் உள்ளதே? வட மாவட்டங்களில் ஏறத்தாழ 900க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தேவை உள்ளது. அந்தந்த பகுதியில் உள்ளவர்களை தற்காலிகமாக நியமித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு 7500 மாத சம்பளம் வழங்கலாம். அதற்கான நிதியை ஒதுக்க முடிவு செய்துள்ளோம். முதுநிலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வில் நிறைய பேர் தேர்ச்சி பெற்றிருந்தும், பலருக்கு ஆசிரியர் பணியாற்றிய அனுபவம் இருந்தும் அதற்கான மதிப்பெண் வழங்காத நிலை உள்ளதே? இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கின்றன. ஒன்று வெயிட்டேஜ். மற்றொன்று அவரின் கல்வித் தகுதி.

மூன்றாவதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது என்பது அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நியமித்துள்ளோம். அவர்கள் வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள்தான் பணியாற்ற வேண்டும். அதனால் மதிப்பெண் வழங்கும் போது ஏற்காமல் இருக்கலாம். ஐசிடி பற்றி கூறினீர்கள். அதற்கான பணி எப்போது தொடங்கும்? அடுத்த வாரம் அதற்கான டெண்டர் குளோபல் முறையில் நடக்கும். இனி பள்ளிக் கல்வித்துறையில் எதுவாக இருந்தாலும் குளோபல் டெண்டர் மூலம்தான் நடக்கும். 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டெண்டர்களை முடிவு செய்வார்கள். அதன்பிறகு அந்த பட்டியல் அமைச்சரின் கவனத்துக்கு வரும். நவம்பர் மாத இறுதிக்குள் இதற்கான பணிகள் முடியும்.

புத்தகம் வாங்குவதில் 10 சதவீதம் கமிஷன் கேட்பதாக பதிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறதே? என்னைப் பொறுத்தவரையில் பதிப்பாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப புத்தகங்களை தள்ளிவிடப் பார்க்கிறார்கள். கல்வி தொடர்பான புத்தகங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது என் நோக்கம். அதனால் நிதியை நிறுத்தி வைத்துள்ளோம். மாணவர்களுக்கு பயிற்சி எப்போது தொடங்கும்? இந்த மாத இறுதிக்குள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கேள்வி பதில் வெளியிடப்படும். அதை மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். செல்போன் மூலமும் வெளியிட உள்ளோம் என்றார்

No comments:

Post a Comment