இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, October 03, 2017

விரைவில் ஆதார் எண்ணுடன் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு! - செங்கோட்டையன் தகவல்


தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு ப்ளஸ் டூ பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அதற்கான முன்வரைவு வரும் நவம்பர் 15-க் தேதி வெளியிடப்பட உள்ளது. முன்வரைவுக்கு வைக்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து 15 நாள்கள் பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கப்படும். இந்தக் கருத்துகளின் அடிப்படையில் அடுத்தாண்டு பாடத்திட்டம் திருத்தப்படும்.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக அனைத்துப் போட்டித் தேர்வுகளை எதிர்க்கொள்ளும் வகையில் இந்தப் பாடத்திட்டங்கள் இருக்கும். மேலும், அடுத்த மாத இறுதிக்குள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதில் மாணவர்களின் ஆதார் எண், ரத்த வகை குறிப்பிடப்படும். பள்ளி மாணவர்கள், டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளியின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

No comments:

Post a Comment