இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 18, 2017

32 மாவட்டங்களில் நாளை ஜாக்டோ - ஜியோ கூட்டம்


தமிழக அரசின் ஊதிய உயர்வு ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, ஜாக்டோ - ஜியோ சார்பில், நாளை தமிழகம் முழுவதும், ௩௨ மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் விளக்க கூட்டம் நடக்கிறது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு கேட்டு, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு நடத்திய காலவரையற்ற ஸ்டிரைக்கால், தமிழக பள்ளி - கல்லுாரிகளிலும், அரசு அலுவலகங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, உயர்நீதிமன்றம் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து, நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிப்படி, தமிழக அரசின் சார்பில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, ஆசிரியர், அரசு ஊழியர்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ௨௦௧௬ ஜன., முதல், அரசு வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான நிலுவை தொகை வழங்கப்படாது என, அறிவிக்கப்பட்டது. அதேபோல், ஆறாவது ஊதியக்குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகளையும், தமிழக அரசு நீக்கவில்லை என, ஜாக்டோ - ஜியோ குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழுவின் கூட்டம், சென்னையில் கடந்த வாரம் கூடி, ஆலோசனை நடத்தியது. இதன்படி, முதற்கட்டமாக, நாளை, 20ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன் விளக்க கூட்டம் நடத்தப்பட உள்ளது. 'ஊதிய உயர்வு ஏமாற்றம்' என்ற தலைப்பில், இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. ''இதையடுத்து, வரும் 23ம் தேதி நீதிமன்றத்தில் ஊதிய உயர்வின் குளறுபடிகள் மற்றும் ஜாக்டோ - ஜியோ கோரிக்கை குறித்து முறையிடப்படும். அதன் பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு உயர்மட்டக்குழு உறுப்பினர், பேட்ரிக் ரைமண்ட் தெரிவித்தார்.

No comments:

Post a Comment