இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, August 08, 2017

ஆசிரியர் பயிற்சிக்கு மவுசு குறைந்ததால் 30 நாள் நடக்க வேண்டியது 3 நாளில் முடிந்தது


ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் இன்றுடன் முடிகிறது. அதிக அளவில் யாரும் விண்ணப்பிக்காமல் போனதால் 3 நாளில் முடிகிறது. தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு டிஇடி தேர்வு கட்டாயமானதால் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்வதற்கு மாணவ மாணவியர் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் பல தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

அதேபோல ஆண்டு தோறும் அந்த படிப்பில் சேரும் மாணவர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 32, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 9, ஒன்றிய அளவில் 6, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 34, சுயநிதி தனியார் பள்ளிகள் 321 இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 26500 இடங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியானது.

ஆனால், சுமார் 2000 மாணவ மாணவியர் மட்டுமே ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டுகளில் இதற்கான கவுன்சலிங் சுமார் 1 மாதம் நடக்கும். ஆனால் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று முடிகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு இந்த கவுன்சலிங் மூன்றே நாளில் முடிவடைவது மாணவர்கள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment