இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, April 24, 2017

ஊக்க ஊதியம்: அமலாகுமா அரசாணை?


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள, அரசின் சார்பில், ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, 2005க்கு முன், ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. அதற்குப்பின் சேர்ந்தவர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், சம்பளத்தில், 6 சதவீதம் வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த முரண்பாட்டால், 2005க்கு முன் சேர்ந்த சீனியர் ஆசிரியர்கள், 2005க்கு பின் பணியில் சேர்ந்தவர்களை விட, குறைந்த ஊக்க ஊதியம் பெறுகின்றனர். இந்த முரண்பாட்டைப் போக்க, 2009 ஜூன், 1ல், தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியத்தின் முரண்பாடுகளை, தலைமை ஆசிரியர்களே சரிசெய்து, அதற்கு கல்வித் துறையில் அனுமதி பெறலாம் என, கூறப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு செயலுக்கு வரவில்லை.

இதனால், அரசாணை பிறப்பித்து, எட்டு ஆண்டுகள் தாண்டிய பின்னும், ஊக்க ஊதியக் குறைபாடு தீரவில்லை. மாநிலம் முழுவதும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment