இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 18, 2017

நீட் தேர்வு: விலக்கு கோரி இன்று ஆர்ப்பாட்டம்


'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்த விலக்கு அளிக்கக் கோரி கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் புதன்கிழமை (ஏப்.19) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கல்வி உரிமைகளுக்காக போராடும் 40 அமைப்புகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், பிற மாவட்டங்களின் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, இந்தக் கூட்டமைப்பின் உறுப்பினர் பிரின்ஸ் கஜேந்திரபாபு செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியபோது, '

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ஏப்ரல் 25 -ஆம் தேதி அரசியல் கட்சிகளின் சார்பில் நடைபெறும் போராட்டத்திலும் இந்தக் கூட்டமைப்பு பங்கேற்கும்' என்றார். முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறியபோது, 'தமிழக அரசின் நீட் தேர்வு விலக்குக் கோரி சட்டப்பூர்வமாக நடைபெறும் போராட்டங்கள் முடிவடைய நீண்ட நாள்கள் ஆகும். எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே உடனடித் தீர்வாக அமையும்' என்றார்.

No comments:

Post a Comment