இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 18, 2017

சி.பி.எஸ்.இ. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி கட்டாயம்!


சி.பி.எஸ்.இ பள்ளிகளில், 10-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படுவதற்கான பரிந்துரைக்கு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 10-ம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்க, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைசெய்திருந்தது. இதையடுத்து, இந்தப் பரிந்துரைக்கு தற்போது, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்தக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து, மாநில அரசுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு, குடியரசுத்தலைவரின் ஆணையில் கூறப்பட்டுள்ளது. "இந்தியை கட்டாயமாக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும்.

முதல்கட்டமாக சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 10-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும்" என்று குடியரசுத் தலைவர் ஆணையில் கூறப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ பள்ளிகளில், கடந்த ஆண்டு மும்மொழிப் பாடத்திட்டத்தை 10-ம் வகுப்பு வரை கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment