இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, April 30, 2017

இன்றைய பட்டம் இதழில் வந்துள்ள எம்பள்ளி மாணவியின் கேள்வி

பி.இ. மாணவர் சேர்க்கை: இன்று முதல் ஆன்-லைன் பதிவு தொடக்கம்


இந்தக் கல்வியாண்டு (2017-18) பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (மே 1) முதல் ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆன்லைன் முகவரி www.annauniv.edu ஆகும். அவ்வாறு ஆன்-லைன் மூலம் பதிவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க ஜூன் 3 கடைசித் தேதியாகும் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு (பி.இ.) சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

2017-18 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வு ஜூன் 27-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதலில் விளையாட்டுப் பிரிவினர், ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கும் பின்னர் பொதுப் பிரிவினருக்கும் சேர்க்கை நடைபெறும்.

முக்கியத் தேதிகள் குறித்த விவரம் ஆன்-லைன் பதிவு தொடக்கம் மே 1 ஆன்-லைன் பதிவுக்கு கடைசி நாள் மே 31 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 3 சமவாய்ப்பு எண் வெளியீடு ஜூன் 20 தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஜூன் 22 கலந்தாய்வு தொடங்கும் நாள் ஜூன் 27.

டிஇடி தேர்வில் கணக்கு, அறிவியல் கேள்விகள் கடினம் : பட்டதாரிகள் அதிர்ச்சி


டிஇடி இரண்டாம் தாள் தேர்வில் கணக்கு, அறிவியல் பகுதியில் இடம் பெற்ற பல கேள்விகள் கடினமாக இருந்ததால் பட்டதாரிகள் விடை எழுத திணறினர். ஆசிரியர் தகுதித் தேர்வில் நேற்று முன்தினம் முதல்தாள் தேர்வு நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான அந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்தது.

நேற்று தாள் 2க்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 2 ஆயிரம் பட்டதாரிகள் பங்கேற்றனர். இவர்களுக்காக 1263 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில், மொத்தம் 31 ஆயிரத்து 235 பேர் தேர்வு எழுத 88 ேதர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் 29 ஆயிரத்து 507 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். 1728 பேர் வரவில்லை. சென்னையில் 94 சதவீத வருகை இருந்தது. தேர்வு காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. முன்னதாக 9 மணி முதல் மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் 150 கேள்விகள் இடம் பெற்றன. அதில் உளவியல், தமிழ், ஆங்கிலம், மற்றும் முக்கிய பாடங்களுக்கான கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

கேள்வித்தாள்கள் ஏ,பி, சி,டி என நான்கு வரிசைகளில் தயாரிக்கப்பட்டு இருந்தது. நேற்றைய தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில் தமிழ், ஆங்கிலம், உளவியல் பாடப் பகுதிகளில் இடம் பெற்ற கேள்விகள் எளிதாக இருந்தன. கணக்கு பாடத்தில் இடம் பெற்ற கேள்விகளில் 15 கேள்விகளுக்கான விடையை கண்டு எழுதுவது கடினமாக இருந்ததாக பட்டதாரிகள் தெரிவித்தனர். அதாவது, 3 அல்லது 5 மதிப்பெண் கேள்விகளை போல கேட்கப்பட்டுள்ளன. ஒரு கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவே 3 நிமிடங்கள் செலவிட வேண்டியிருந்ததாக பட்டதாரிகள் தெரிவித்தனர். அதேபோல இயற்பியல் பாடப் பகுதியில் இடம் பெற்ற பெரும்பாலான கேள்விகள் சிக்கலான கேள்விகளாக இருந்தன.

குறிப்பாக எளிதில் விடை காண முடியாத அளவில் இருந்தன. இதனாலும் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்ததாகவும் பட்டதாரிகள் வருத்தம் தெரிவித்தனர். இதனால் இந்த டிஇடி தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தலைமை இன்றி தத்தளிக்கும் எஸ்.எஸ்.ஏ., திட்டம்! தட... தடக்குது தொடக்க கல்வித்தரம்


தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) 32 சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாக காலியாக இருப்பதால், தொடக்க கல்வி மாணவர்கள் கல்வித் தரத்தை கண்காணிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பணியிட மாற்றம் அல்லது ஓய்வு பெற்ற பின் இரண்டு ஆண்டுகளாக இத்திட்ட சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

மாறாக, அந்தந்த மாவட்ட ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் இத்திட்டத்தையும் கூடுதலாக கவனிக்கின்றனர். தவிர, அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் என மூன்று பெரும் பொறுப்பையும் ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் கண்காணிப்பதால் கடும் பணிச்சுமையில் தவிக்கின்றனர். 'கவலை' கல்வித்தரம்: தொடக்கக் கல்வி மாணவர்களின் கல்வித்தரத்தை கண்காணிப்பது, மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பது போன்ற முக்கிய பணிகள் இத்திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது 'தலைமை' இல்லாததால் கல்வித் தரத்தை கண்காணிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.சி., பயிற்சி கூட்டங்கள், பல கோடி ரூபாய் திட்டங்களில் நடக்கும் வகுப்பறை கட்டடப் பணிகளை ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் நேரடியாக களஆய்வு செய்வதில்லை. பணிகள் குறித்து அத்திட்ட அலுவலர் காட்டும் ஆவணங்களில் மட்டும் கையெழுத்திடும் பணியை மட்டுமே மேற்கொள்ள முடிகிறது. மறுக்கப்படும் சி.இ.ஓ., வாய்ப்பு: இப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிமூப்பு பட்டியலில் இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு கனவில் காத்திருக்கும் மாவட்ட மற்றும் தொடக்க கல்வி அலுவலர், பதவி உயர்வு பெறாமலேயே 40 சதவீதம் பேர் ஓய்வு பெற்று விட்டனர். மீதமுள்ளவர்கள் பெரும்பாலும் மே யில் ஓய்வுபெற உள்ளனர்.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்ட சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டவை. அவை தொடர்ந்து காலியாக இருக்கக்கூடாது. சி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டு ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் பொறுப்புக்களையும் அவர்களிடம் ஒப்படைத்தால் வழக்கமான கல்வி பணிகளில் 'ரெகுலர்' சி.இ.ஓ.,க்கள் கூடுதல் கவனம் செலுத்த முடியும். ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் துவங்குவதற்கு முன் இப்பணியிடங்களை நிரப்ப அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயச்சந்திரன் தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆன்லைனில்' மட்டுமே வாக்காளர் சேர்ப்பு


ஓட்டுச்சாவடிகளில் 'ஆன்லைன்' மூலம் வாக்காளர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான பயிற்சி மே 5 ல் தேர்தல் அதிகாரிகளுக்கு அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணி நடக்கிறது. இதில் ஓட்டுச்சாவடிகளில் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்படும்.

அந்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.ஐந்து சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கின்றனர். காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தத்திற்கான விண்ணப்பங்களை 'ஆன்லைனில்' பெற தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு இதுகுறித்த பயிற்சி மே 5ல் அளிக்கப்படுகிறது. அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இத்திட்டம் முதற்கட்டமாக குறிப்பிட்ட ஓட்டுச்சாவடிகளில் மட்டும் செயல்படுத்தப்படும். தொடர்ந்து அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் கொண்டு வரப்படும். உடனுக்குடன் 'ஆன்லைனில்' ஏற்றும்போது விண்ணப்பதாரர் முன்னிலையிலேயே சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும். இதனால் பிழைகள் குறையும்.இவ்வாறு கூறினார்.

சி-டெட் தேர்வு இனி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே


ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் சி.டெட் தேர்வை, இனி ஆண்டுக்கு ஒருமுறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய ஆசிரியர் நியமன தகுதிக்கான தேர்வை(சி-டெட்) சி.பி.எஸ்.இ., அமைப்பு ஆண்டுக்கு இருமுறை நடத்தி வந்தது. இந்நிலையில், ஜே.இ.இ.,மெயின் தேர்வு, நீட் தேர்வு, மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்த வேண்டியுள்ளதால், அதிக பணிச்சுமை ஏற்பட்டிருப்பதாகவும், எனவே சி-டெட் தேர்வினை இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தவும் சி.பி.எஸ்.இ., அமைப்பு முடிவு செய்துள்ளது. இதனை மத்திய மேம்பாட்டு அமைச்சகத்திடமும் சி.பி.எஸ்.இ., அமைப்பு தெரிவித்துள்ளது.

TET paper II tentative answer key

Click below

https://app.box.com/s/qt4rn1dh4o3rtdxf2j395ymv1l0e9aan

NMMS news

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


தமிழ்நாட்டில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் தோராயமாக 2 லட்சம் பிஇ, பிடெக் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியாகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 1 முதல் 31 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இதுபற்றிய அறிவிக்கை நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படுகிறது. இந்த அறிவிக்கை அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்திலும் (www.annauniv.edu) வெளியாகும்.

பிளஸ் 2 தேர்வு முடிவு வருவதற்கு இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில், அடிப்படை விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து விட்டால் தேர்வு முடிவு வந்த பிறகு மதிப்பெண் உள்ளிட்ட எஞ்சிய விவரங்களை பதிவு செய்து விரைந்து விண்ணப்பிக்க வசதியாக இருக்கும். மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங் களையும் குறிப்பிட்டு ஆன்லைன் பதிவை முழுமை செய்த பின்னர் ஆன்லைன் விண்ணப் பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான ஆவணங் களை இணைத்து ஜுன் 3-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Saturday, April 29, 2017

தேர்வு முறையில் மாற்றம் மத்திய அரசு அறிவுரை


பொது தேர்வு முறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக் கல்வியில், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தேர்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன. சில மாநிலங்களில், பிளஸ் 1, பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளுக்கும், பொது தேர்வு முறை உள்ளது.

மற்ற மாநிலங்களில், பத்தாம் வகுப்புக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல, மதிப்பெண் வழங்குதல், வினாத்தாள் தயாரித்தல், திருத்தம் போன்றவற்றில், தனித்தனி திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திலோ, வேறு திட்டம் பின்பற்றப்படுகிறது. இதனால், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், உயர் கல்வியில் சேர்ப்பதில், கல்வி நிறுவனங்களில் குழப்பம் ஏற்படுகிறது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய மனிதவள அமைச்சகம் சார்பில், மாநில கல்வி அதிகாரிகள் கூட்டம், டில்லியில் நடத்தப்பட்டது. அப்போது, தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரும்படி அறிவுறுத்தியுள்ளனர். மாணவர்களின் கற்றல், சிந்தனை திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், வினாத்தாள் தயாரித்தல் விஷயத்தில், கூடுதல் அக்கறை காட்டவும் வலியுறுத்தப்பட்டது. சி.பி.எஸ்.இ., போன்று, நாடு முழுவதும் ஒரே தேர்வு முறை, விடைத்தாள் திருத்த முறையை கொண்டு வருவது குறித்தும், அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது

38 தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு


பள்ளி கல்வித்துறையில், 38 தலைமை ஆசிரியர்களுக்கு, டி.இ.ஓ., எனப்படும், மாவட்ட கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. பள்ளி கல்வித்துறையில், வருவாய் மாவட்ட வாரியாக, முதன்மை கல்வி அதிகாரிகளும், ஒன்றியம் வாரியாக, மாவட்ட கல்வி அதிகாரிகளும் பணியாற்றுகின்றனர். இதில், ௩௮ மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்கள், காலியாக உள்ளன. உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்கி, இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான உத்தரவு, சில தினங்களில் வெளியாக உள்ளது. அப்போது, மாவட்ட கல்வி அதிகாரிகள் பலர், மாற்றம் செய்யப்பட உள்ளனர்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் விதிகள் இன்று வெளியீடு


இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான விதிமுறைகள் இடம் பெற்ற, அதிகாரப்பூர்வ அறிக்கையை, அண்ணா பல்கலை இன்று வெளியிடுகிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்குகிறது.

கவுன்சிலிங்கில் பங்கேற்க, மே, 1 முதல், 31 வரை, ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்கான, அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் விதிகள், இன்று வெளியாகின்றன. தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையின், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கமிட்டி அறிவிக்கும் விதிகளின்படி, மாணவர் சேர்க்கை நடக்கும்.

2017-18 ல் உயர்/மேல் நிலைப்பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு முறைகள்


AEEO post vacant list :RTI:as on 31-5-17

TET PAPER :1Answer key



தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விலங்கியல் பாடத்தில் தவறான கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டுள்ளது. விலங்கியல் பாடத்தில் 16-வது வினாவுக்கு பதில் அளித்த அனைவருக்கும் ஒருமதிப்பெண் வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2-5-17 கல்வியமைச்சரை சந்திக்க அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கான அழைப்பு

Friday, April 28, 2017

முந்தைய தகுதி தேர்வு மூலம் 1,114 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்

முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்

தமிழ்-133

ஆங்கிலம்-99

கணிதம்-80

இயற்பியல்-40

வேதியியல்-39

தாவரவியல்-60

விலங்கியல்-22

வரலாறு-213

புவியியல்-428

# பட்டியல் www.trb.tn.nic.in ல் உள்ளது

# முன்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வேலையில் சேராதோர் மே-10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு


பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் செயல்படும் மனிதநேயம் பயிற்சி மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட மத்திய–மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இலவச வகுப்பு நடத்தி வருகிறது.

அந்த வகையில், 2018–ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்காக இப்போது முதல் 2018–ம் ஆண்டு மே மாதம் வரை இலவச பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளது. இந்த இலவச பயிற்சி பெறும் மாணவர்களை தேர்ந்தெடுக்க தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் வருகிற 30–ந்தேதி நுழைவு தேர்வு நடப்பதாக இருந்தது. 7–ந்தேதி நுழைவுத்தேர்வு நுழைவு தேர்வு நடைபெறும் அதே நாளில் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் பாரத ஸ்டேட் வங்கி தேர்வு நடைபெற உள்ளதால் பல மாணவர்கள் நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். பலர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்தும் வேண்டுகோள் விடுத்தனர்.

மாணவ–மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று சைதை துரைசாமி சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவுத்தேர்வை மே 7–ந்தேதிக்கு தள்ளிவைத்து இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் இந்த பயிற்சி வகுப்பில் மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.saidais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே மாதம் 5–ந்தேதி. அனுமதி சீட்டு ஏற்கனவே நுழைவுத்தேர்வுக்கு தங்களுடைய அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்தவர்கள் அதே அனுமதி சீட்டுடன் அதற்குரிய தேர்வு மையத்திலேயே தேர்வு எழுதலாம். புதியதாக விண்ணப்பிப்பவர்கள் நுழைவுத்தேர்வுக்கான அனுமதி சீட்டை www.saidais.com என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து தங்களுடைய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து பெறவேண்டும்.

அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து பெறமுடியாதவர்கள் தங்களுடைய புகைப்படம் உள்ள அடையாள அட்டையை அனுமதி சீட்டுடன் கொண்டுவர வேண்டும். இதுவே அனுமதி சீட்டு ஆகும். மேற்கண்ட தகவல் சைதை துரைசாமியின் மனிதநேயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தவிகடன் நொடிக்கதையில் எனது கதை 4-5-17

நாளையும், நாளை மறுநாளும் ஆசிரியர் தகுதி தேர்வு : தேர்வர்கள் காலை 8.30க்கு தேர்வு மையத்திற்கு வரவேண்டும்


தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் காலை 8.30க்கு தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 நாளையும், தாள் 2 நாளை மறுநாளும் நடைபெற இருக்கிறது.

தேர்வு மைய நடவடிக்கைகள் காலை 8.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை நீடிக்கும். காலை 8.30: தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படுவர். காலை 9.30: தேர்வர்கள் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டு வருகையை பதிவு செய்தல். காலை 9.40: ஓஎம்ஆர் விடைத்தாள் விநியோகம் மற்றும் பெயர், பதிவு எண், வினாத்தாள் வரிசை எண் ஆகியவற்றை எழுதுதல். காலை 9.50: வினாத்தாள் கட்டுகள் தேர்வர் முன்னிலையில் திறக்கப்படுதல்.
காலை 9.55: வினாத்தாள் விநியோகம்; வினாத்தாள் வரிசை எழுத்து (ஏ,பி,சி,டி) ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிவு செய்தல்.

காலை 10: நீண்ட மணி அடித்ததும் தேர்வு தொடங்கும். தேர்வர் வினாத்தாள் மீதுள்ள சீல் உடைத்து தேர்வு எழுத தொடங்கலாம். காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் என ஐந்துமுறை மணிகள் ஒலிக்கும். பகல் 12.55: முன்னெச்சரிக்கை மணி ஒலிக்கப்படும்; அதன் பிறகு 5 நிமிடங்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதி. பகல் 1: நீண்ட மணி ஒலிக்கும். தேர்வு முடிவுக்கு வந்து ஓஎம்ஆர் ஷீட் கார்பன் நகல் தேர்வரிடம் வழங்கப்படும். தொடர்ந்து மதியம் 1 மணி முதல் 2.30 மணி வரை தேர்வு கூட அதிகாரிகள் நடவடிக்கைகள் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Thursday, April 27, 2017

மருத்துவ சிகிச்சைக்காக பி.எப்.பில் இருந்து பணம் எடுக்க டாக்டர் சர்டிபிகேட் தேவையில்லை


மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும், உடல் ஊனமுற்றோர் கருவிகள் வாங்குவதற்கும் டாக்டர் சர்டிபிகேட் இல்லாமல் பிஎப்பில் இருந்து பணம் எடுக்க விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தில் பிஎப் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

இதில் இருந்து வீடு வாங்க, மருத்துவ சிகிச்சை, திருமண செலவுகளுக்கு பணம் எடுத்துக்கொள்ளலாம். மருத்துவ சிகிச்சை பெறுவோர், இதற்கான பிஎப் திட்டம் பத்தி 68ஜெ-யின் படி ஒரு மாதம் அல்லது மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது, பெரிய அறுவை சிகிச்சைகள், டி.பி, பக்கவாதம், புற்றுநோய், இதய சிகிச்சை போன்றவற்றுக்கு மருத்துவர் சான்று சமர்ப்பித்து பணம் பெறலாம்.

இதுபோல் உடல் ஊனம் அடைந்தவர்கள் பத்தி 68என் விதியின்படி சான்று சமர்ப்பித்து அதற்கான கருவிகள் வாங்க பிஎப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். தற்போது பிஎப் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது எனவே, மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்கு பிஎப் நிதியில் இருந்து பணம் பெற விரும்பும் ஊழியர்கள் சான்று சமர்ப்பிக்க தேவையில்லை. இதற்கான திருத்தங்கள் பிஎப் விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொழிலாளர் அமைச்சகம் இந்த மாதம் 25ம் தேதியிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது என பிஎப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருத்துவ சிகிச்சை மற்றும் உடல் ஊனத்துக்கான உபகரணம் வாங்க ஊழியர்கள் 6 மாத அடிப்படை சம்பளம் மற்றும் டி.ஏவுக்கு மிகாமல் பெற்றுக்கொள்ள முடியும்.

1,953 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி.


குரூப் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள 1,953 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 26 ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6 ஆம் தேதி தேர்வு நடைபெறும். விண்ணப்பங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளங்களின் வழியே பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

கல்வி அதிகாரிகளுக்கு கோடை கொண்டாட்டம்


மாணவர்களை தயார்படுத்த, சி.இ.ஓ., - டி.இ.ஓ., போன்ற கல்வித் துறை அதிகாரிகளுக்கு, கோடை கொண்டாட்ட பயிற்சி அளிக்கப் படுகிறது. புதிய கல்வி ஆண்டில், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் தயாராக வேண்டும்.

அதனால், அவர்களுக்கு பயிற்சி அளித்து, பின், மாணவர்களுக்கு கற்பித்தல் முறைகளை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, சி.இ.ஓ., எனப்படும், முதன்மை கல்வி அதிகாரி மற்றும் டி.இ.ஓ., எனப்படும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, கோடை கொண்டாட்ட ஆளுமை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மே, 3 முதல், 6 வரை, மதுரையில் சிறப்பு புத்தாக்க பயிற்சி நடக்கிறது. இதில், பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன், எழுத்தாளர், எஸ்.ராமகிருஷ்ணன், டாக்டர் அமுதா ஹரி, ஒடிசா அரசின் கூடுதல் தலைமை செயலர், ஆர்.பாலகிருஷ்ணன், பேராசிரியர், ச.மாடசாமி, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

இந்த மூன்று நாள் பயிற்சியில் அதிகாரிகளுக்கு, அறுசுவை விருந்து, கலந்துரையாடல், விவாதம், நகைச்சுவை சொற்பொழிவு, சிலம்பம், கராத்தே, புத்தாக்க விளையாட்டுகள் போன்றவை இடம் பெற உள்ளன. பயிற்சி நிறைவு விழாவில், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இது குறித்து, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது: ஜூனில், புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, மாணவர்களை நெறிப்படுத்த, ஆசிரியர்களும், அதிகாரிகளும் புத்துணர்ச்சியுடன் தயாராக வேண்டும். 'நீட்' போன்ற பல போட்டி தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். அதற்கேற்ப, ஆசிரியர்களுக்கு ஆளுமை திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.