இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, March 01, 2017

விர்ச்சுவல்' வகுப்புகள் திட்டம் தமிழகத்தை பின்பற்றும் குஜராத்


அரசு பள்ளிகளில், மெய்நிகர் வகுப்பறைகள் என்ற, 'விர்ச்சுவல்' வகுப்புகளுக்கான திட்டத்தை, குஜராத் மாநிலமும் பின்பற்ற துவங்கி உள்ளது. அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும், சமச்சீர் கல்வி கிடைக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகின்றன. அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் போன்ற திட்டங்கள் மூலமும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமும், ஸ்மார்ட் வகுப்பு, கணினி வகுப்பறை, மெய்நிகர் வகுப்பறைகள் போன்ற திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதில், மெய்நிகர் வகுப்பறைகள் என்ற, 'விர்ச்சுவல்' வகுப்பு திட்டத்தின் மூலம், தமிழகத்தில், 770 பள்ளிகளில், கணினி திரை கொண்ட வகுப்பறைகள், கணினி உபகரணங்கள், 'பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்' வசதி, வீடியோ கான்பரன்ஸ் வசதி போன்றவை ஏற்படுத்தப்படுகின்றன. இதில், 485 பள்ளிகளுக்கு தற்போது பணிகள் முடிந்துள்ளன.இந்த திட்டத்தின் செயல்பாடுகளை, மத்திய அரசு ஆய்வு செய்தது. இதில், விர்ச்சுவல் வகுப்புகள் செயல்பாட்டில், தமிழகத்தின் நடைமுறைகள் சிறப்பாக உள்ளதை கண்டறிந்துள்ளனர்.

அதனால், குஜராத், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு, தமிழக நடைமுறையை பரிந்துரை செய்துள்ளனர். இதேபோல், மற்ற மாநிலங்களின் சிறப்பான நடவடிக்கைகளை, தமிழகமும் பின்பற்றலாம் என, கல்வியாளர்கள் தெரிவித்துஉள்ளனர்.

No comments:

Post a Comment