இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, March 11, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு 5 நாளில் 3 லட்சம் விண்ணப்பம் விற்பனை


ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு 5 நாட்களில் 3 லட்சம் பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர். தமிழக அரசு சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு வருகிற ஏப். 29, 30ம் தேதிகளில் நடைபெறுகிறது. முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வை சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் பேர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 6ம்தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்ப கட்டணம் ரூ.50. அனைத்து மையங்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வந்து விண்ணப்பங்களைப் பெற்றுச் செல்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை முதல் தாளுக்கு 11 ஆயிரம் பேரும், இரண்டாவது தாளுக்கு 20 ஆயிரத்து 398 பேரும் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 5 நாட்களில் சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். மேலும் 10 நாட்கள் தொடர்ந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதால் இந்த எண்ணிக்கை 8 லட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பால் பாயிண்ட் பேனாவால் விண்ணப்பம் நிரப்ப வேண்டும்: விண்ணப்பம் ‘ஓஎம்ஆர்’ வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பத்தில் கேட்ட விவரங்களை கருப்பு நிற அல்லது நீல நிற பால்பாயின்ட் பேனாவால் நிரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment