இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, March 19, 2017

31ல் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி


எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31ம் தேதியும், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 5ம் தேதியும் தொடங்குகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி, வருகிற 31ம் தேதி வரையும், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி, 30ம் தேதி வரையும் நடைபெறுகிறது. பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கில மொழிப்பாட தேர்வுகள் முடிந்துள்ளன. விடைத்தாள்கள் கல்வி மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு முகப்புத் தாள்கள் நீக்கப்பட்ட பின்னர், பிற மாவட்டங்களில் உள்ள திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கல்வி மாவட்ட அளவில் 10ம் வகுப்பு தமிழ், ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31ம் தேதி தொடங்கும். மற்ற பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 4ல் தொடங்கும். பிளஸ் 2 தமிழ், ஆங்கிலம் விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 5ல் தொடங்கும். மற்ற பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 10ல் தொடங்கும். முதல்கட்டமாக தமிழ், ஆங்கிலம் விடைத்தாள்கள் திருத்தப்படும்.

No comments:

Post a Comment