இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, March 13, 2017

பொதுமக்கள் எதிர்ப்பை மீறி ஏப்ரல் 1முதல் அமல்-எஸ்.பி.ஐ


சேமிப்பு கணக்கில் குறைந்தது 5000 ரூபாய் இருக்க வேண்டும் என்ற ஸ்டேட் வங்கியின் திட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சில தினங்களுக்கு முன் வங்கி கணக்கில் குறைந்தபட்சம் 1000 முதல் 5000 ரூபாய் வரை இருக்க வேண்டும் ஸ்டேட் வங்கி தெரிவித்து இருந்தது. இதற்கு சமானிய பொதுமக்கள் பலர் பெரிதும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 5000 ரூபாய் குறைவான சம்பளம் பெரும் ஊழியர்களும் ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களால் இந்த தொகையை வங்கி கணக்கில் வைத்திருப்பது சிரமம் என்று தெரிவித்தனர். இதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.

மத்திய அரசின் தன் யோஜனா திட்டத்தின் மூலம் பல கணக்குகள் ஸ்டேட் வங்கியிடம் தொடங்கப்பட்டு அதனை கையாள நேரம் அதிகரித்து உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக ஸ்டேட் வங்கி தெரிவித்தது.

மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளவர்கள் கணக்குகளில் குறைந்தபட்சம் 5000 ரூபாயும், ஓரளவு குறிப்பிட்ட நகரங்களில் இருப்பவர்கள் 2000 ரூபாயும், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் வங்கி கணக்கில் 1000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும். அதற்கு குறைவாக வைத்திருப்பவர்களின் வங்கி கணக்கில் இருந்து பற்றாகுறைவுக்கு ஏற்ப சேவை வரியுடன் சேர்த்து கட்டணம் பிடித்து கொள்ளப்படும்.

இதேப்போன்று மாதம் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தாலோ, செலுத்தினாலோ பணம் பிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனார். இதற்கு வாடிக்கையாளர்க்ள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment