இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, February 02, 2017

TNPTF

நன்றி:டேவிட்

*"சங்கமா நமக்கு சோறு போடுது ! "*

வீதியில இறங்கி போராடுறவன் ஒரு சில பேராவது இருப்பதால மட்டும் தான் நம்மில் பல பேர் வீட்டுக்குள்ள இருந்து நிம்மதியா சாப்பிட முடியுது

"நாம உழைச்சாத்தான் நமக்குச் சோறு "

"நமக்கு ஏம்ப்பா சங்கம்,  போராட்டமெல்லாம் ?"

இது  வெகுளித்தனமான பேச்சா இல்ல! வெவகாரமான பேச்சா என்பது நபரை பொறுத்தது . எப்படி இருந்தாலும் இது ஒரு வெளங்காத பேச்சு ...

  உழைச்சா சோறு உண்டுன்னு உனக்கு உத்திரவாத படுத்தினது எது ?

உழைச்சா கூலி கொடுக்கனும்னு நிர்ணயம் பன்னினது எது ? 

நீ செய்யிற வேலைக்கு கட்டாயமா இவ்வளவு ஊதியம் வாங்கணும்னு உனக்கு சொல்லி கொடுத்தது யாரு ?

மூனு வேள கஞ்சிக்கு மட்டும் இருபத்தினாலு மணி நேரமும் வேலை பாத்த அடிமை சமூகம் தான இது!

இத மாத்தினது சங்கங்கள் இல்லையா ? அந்த சங்கங்களில் தீர்மாணிக்கிற போராட்டம் இல்லையா ?

சங்கங்களை ஒதுக்கி வச்சிட்டு இங்க எதுவுமே கிடையாது.

*"சங்கங்களில்  நீங்கள் தலையிடாவிட்டாலும்
அது உங்கள் பிரச்சனைக்காக தலையிடும் "*

தன்னுடைய சுகத்தையும் இழந்து இந்த சமூகத்திற்காக வீதியில் இறங்கி போராடுபவனை பாராட்டாவிட்டாலும் தயவு செய்து கொச்சை படுத்தாதீர்கள் !

உலகை இயங்குவது இரண்டு... ஒன்று மனிதன்... மற்றொன்று ...மனிதனுக்கான மனிதன்...

No comments:

Post a Comment