இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, February 11, 2017

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் சுற்றறிக்கை


பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமீப காலங்களில்  சில பள்ளிகளில் அசாதாரண நிகழ்வுகளினால் மாணவர்கள் உயிர் இழக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது.  இதை முற்றிலும் தவிர்க்க ஆய்வு அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.

* பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் அவற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்து மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

* பள்ளிகளில் மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா, சுவிட்சுகள் சரியாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

* மாணவர்களை கொண்டு மின்சாதனங்களை இயக்கக்கூடாது.

* கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

* பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்ல தடைவிதிக்கவும், பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள்ளும் அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளித் தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும். மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை, முதன்மைக்கல்வி அலுவலர்கள்,  மாவட்டக்கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் பள்ளிப்பார்வை மற்றும் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டும் எனவும், தலைமை ஆசிரியர்கள் கூட்டத்திலும், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி  அலுவலர்கள்  தக்க அறிவுரைகள் வழங்கிட வேண்டும்.

No comments:

Post a Comment