இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, February 05, 2017

மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறி


அரசுப்பள்ளி துப்புரவு பணியாளர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப் படாததால் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய 2016 ஜன. முதல் பள்ளி மேலாண்மைக்குழுவால் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

துவக்கப்பள்ளிக்கு மாதம் 750 ரூபாய், நடுநிலைப்பள்ளி க்கு 1000 ரூபாய், உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளுக்கு 1,500 ரூபாய் என பணியாளர்களுக்கு மாத சம்பளமாக வழங்கப்பட்டது. அக்டோபர் முதல் நான்கு மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் இவர்களுக்கான சம்பளத்தொகை வழங்கப் படுவது வழக்கம். நான்கு மாதங்களாக இந்த தொகை நிறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி கழிப்பறைகள் மட்டுமின்றி, வளாகத்தையும் இந்த துப்புரவு பணியாளர்களே கவனிக்கின்றனர். இதனால், பணிக்கு வருவதை தவிர்க்கும் நிலையில் துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இதனால் மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

No comments:

Post a Comment