இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, February 16, 2017

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்றுடன் நிறைவு


சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. இதர மாவட்டங்களில் 23ம் தேதி ஒட்டுமொத்தமாக முடிகிறது. பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவு மாணவர்களுக்கு எழுத்து தேர்வில் 150 மதிப்பெண்களும், செய்முறை தேர்வில் 50 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதனால், அறிவியல் பிரிவு மாணவர்கள் செய்முறை தேர்வு எழுத வேண்டும்.

இவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி 23ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்தது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் சூழ்நிலைக்கு ஏற்ப பிப்ரவரி 2ம் தேதி முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கிவிட்டன. சென்னை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்வு 6ம் தேதி தொடங்கி 10ம் தேதி முடிந்தன. இரண்டாம் கட்டத் தேர்வுகள் 13ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிகின்றன.

சென்னை மாவட்டத்தில் 39 ஆயிரத்து 900 மாணவ மாணவியர் செய்முறை தேர்வில் பங்கேற்றனர். சில மாவட்டங்களில் 18ம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் சில மாவட்டங்களில் 23ம் தேதியுடன் செய்முறை தேர்வு முடிகின்றன. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மொத்தமாக 4 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியருக்கு செய்முறை தேர்வு நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment