இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 19, 2016

புதிய கல்வி கொள்கை: அக். 25ல் டில்லியில் கூட்டம்


புதிய கல்விக் கொள்கையை முடிவு செய்வது குறித்து, அக்., 25ல், டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. மத்திய அரசின் சார்பில், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில், கமிட்டி அமைத்து, புதிய வரைவு கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது.

இந்த கொள்கைக்கு, ஜூலை முதல் செப்., வரை, நாடு முழுவதும் கருத்துக்கள் பெறப்பட்டன. புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்வது குறித்து, வரும், 25ல், டில்லியில் மத்திய மனிதவள அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. மாநிலங்களில் இருந்து, அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கட்டாய கல்வி சட்டத்திருத்தம், எட்டாம் வகுப்பு வரையிலான, 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த கூட்டத்திற்கு, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

அதன் ஒருங்கிணைப்பாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு, மத்திய அரசுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'புதிய கல்விக் கொள்கைக்கு, பல மாநிலங்களும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் வரைவு கல்விக் கொள்கையை, இறுதி செய்யக் கூடாது' என, தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment