இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, June 29, 2016

பிஎப் நிலுவையை தனியார் வங்கிகள் வசூலிக்க எதிர்ப்பு


பிஎப் நிறுவனம் சார்பாக தொழிலாளர்களின் நிதியை தனியார் வங்கிகள் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பிஎப் தொகையின் பெரும்பகுதியை பிஎப் நிறுவனம் சார்பாக பாரத ஸ்டேட் வங்கி வசூலித்து வருகிறது. இந்நிலையில், இந்த வசூல் பணியை தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஆக்சிஸ் மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் வசூலிக்க அனுமதிக்கக்கூடாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஎப் டிரஸ்டி மற்றும் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மகாராஷ்டிரா பொது செயலாளர் பி.ஜே.பனசூர் கூறுகையில், ‘‘தொழிலாளர்களின் பிஎப் நிதியை நிறுவனங்களிடம் இருந்து தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஆக்சிஸ், எச்டிஎப்சி வங்கிகள் வசூலிக்க அனுமதிக்க கூடாது என்று நிதி தணிக்கை மற்றும் முதலீட்டு குழு பரிந்துரை செய்துள்ளது’’ என்றார். பொதுவாக நிதி தணிக்கை மற்றும் முதலீட்டுக்குழு பரிந்துரை ஏற்கப்படுவது வழக்கம்.

தற்போது தனியார் வங்கிகள் வசூலிப்பதற்கு அனுமதிக்க கூடாது என்று இந்த குழு சமர்ப்பித்த பரிந்துரை அடுத்த மாதம் 7ம் தேதி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையில் நடக்கும் மத்திய அறக்கட்டளை குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். தற்போது பிஎப் நிதியில் சுமார் 25 சதவீதம் மேற்கண்ட மூன்று வங்கிகள் மூலம் வசூலிக்கப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment