இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, June 19, 2016

டியூஷன் எடுத்தால் நல்லாசிரியர் விருது கிடையாது


ஆசிரியர் தினவிழா வரும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி 2015 - 16ம் ஆண்டுக்கு மாநில அளவில் ‘நல்லாசிரியர் விருது’ பெற தகுதி வாய்ந்த தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்திட மாவட்ட அளவில் குழு அமைத்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் விபரங்களை தேர்வு குழு தலைவர் மற்றும் உறுப்பினர் கையொப்பத்துடன் வரும் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் பள்ளி கல்வி இணை இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நல்லாசிரியர் விருதுக்கான விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அந்த உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது: தேர்வு செய்யப்படுபவர்கள் எவ்வித புகாருக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்டவராக இருத்தல் கூடாது. டியூஷன் எடுக்கும் ஆசிரியர், கல்வியை வணிக ரீதியாக கருதி செயல்படுவர், தனியார் பள்ளியில் நிர்வாகியாக இருப்பவர்கள் இந்த விருதுக்கு தகுதியற்றவர்களாக கருதப்பட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment