இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, June 25, 2016

காரைக்குடியில் நடக்கிறது பி.இ. 2ம் ஆண்டில் நேரடி சேர்க்கை ஜூன் 29ல் கவுன்சலிங் தொடக்கம்


தமிழகத்தில் உள்ள 536 பொறியியல் கல்லூரிகளில் பி.இ நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கான கவுன்சலிங் வரும் 29ம் தேதி துவங்கி ஜூலை 9 வரை காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வரும், சேர்க்கை செயலாளருமான ராஜ்குமார் கூறியதாவது: பி.இ நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு 14 ஆயிரத்து 785 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதால், தகுதியான அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. கவுன்சலிங் வரும் மாணவர்களுக்கு, காரைக்குடி பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளின் காலியிடங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பெரிய ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் இணையதளம் ஷ்ஷ்ஷ்.ணீநீநீமீtறீமீணீ.நீஷீனீ-ல் கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ்கள், புரவிசனல் அல்லது டிப்ளமோ சான்று, பி.எஸ்.சி பட்டதாரிகள் தங்களது டிகிரி சான்று, சாதி சான்று, முதல் தலைமுறை பட்டதாரி சான்று ஆகியவற்றின் அசல் சான்றுகளை கொண்டு வர வேண்டும். படிவங்களோடு டி.டி அனுப்பாதவர்கள் கவுன்சலிங் வரும்போது கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment