இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, May 12, 2016

ஓட்டுச்சாவடிகளில்சாமியானா பந்தல்


வெயில் அதிகமாக இருப்பதால், தேவைப்படும் ஓட்டுச்சாவடிகளின் முன், சாமியானா பந்தல் அமைத்துக் கொள்ள, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது. பொது மக்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக, 66,001 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொகுதிக்கு, ஒரு ஓட்டுச்சாவடி, பெண்களுக்கானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பர். அதேபோல், மாநிலம் முழுவதும், 968 மாதிரி ஓட்டுச் சாவடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த ஓட்டுச் சாவடிகளில், வாக்காளர்கள் அமர சோபா போடப்படும். முன்புறம் பந்தல் போடப்பட்டு, வாழை மரம் நடப்படும். தமிழகம் முழுவதும், வெயில் அதிகமாக உள்ளது. பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில், அருகிலேயே காலி வகுப்பறைகள் இருக்கும். எனவே, அங்கு வாக்காளர்கள் அமர வைக்கப்படுவர்.

அந்த வசதி இல்லாத ஓட்டுச் சாவடிகளில், சாமியானா பந்தல் அமைக்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், குடிநீர் வசதி செய்யவும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment