இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, April 18, 2016

ஏப்.30 வரை வகுப்புகள் : அரசு தொடக்க பள்ளி மாணவர்கள் கொளுத்தும் வெயிலால் அவதி


அரசு தொடக்க பள்ளிகளுக்கு ஏப்ரல் 30 வரை வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ெகாளுத்தும் வெயிலால் மாணவ மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் 2015-16ம் கல்வி ஆண்டில் ஏப்ரல் 21 வரை செயல்பட்டு பள்ளி வேலை நாட்கள் முடிவடைந்து ஏப்ரல் 22 முதல் பள்ளிளுக்கு கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. அதே போன்று தொடக்க, நடுநிலை பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை செயல்பட்டு பள்ளி வேலை நாட்கள் முடிந்து மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது.

2016-17ம் கல்வியாண்டில் ஜூன் 1ம் புதன் கிழமை அன்று அனைத்து அரசு தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இதனை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் தொடக்க பள்ளிகளில் கொளுத்தும் வெயிலிலும் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மாணவ மாணவியரை அவதிப்பட வைத்துள்ளது.

No comments:

Post a Comment