இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 12, 2016

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி: 16-இல் தொடக்கம்


பத்தாம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி சனிக்கிழமை தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 11-ஆம் தேதி நிறைவு பெற்றது. 10,72,000 பேர் எழுதினர். இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி சனிக்கிழமை தொடங்க உள்ளது.

இதற்காக, மாவட்டந்தோறும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைத்தல், ஆசிரியர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட முதல் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். முதல் நாளில், தலைமை திருத்துநர்கள், கூர்ந்தாய்வாளர்களும், அதைத் தொடர்ந்து, 18-ஆம் தேதி முதல் உதவி விடை திருத்துனர்கள், முழு அளவில் திருத்தும் பணியில் ஈடுபடுவர்.

மே 16-க்கு முன்பே பிளஸ் 2 தேர்வு முடிவு: இதற்கிடையே, 64 மையங்களில் நடைபெறும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மே 16-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், அதற்கு முன்னதாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment