இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, February 29, 2016

இ-சேவை மையங்களில் பாடப்புத்தகம் வினியோகம்


பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அனைத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலம் பணம் செலுத்தி பெற தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் இணையதளம் மூலம் விற்பனை செய்து வருகிறது. பணம் செலுத்த முடியாத பகுதியை சேர்ந்தவர்கள் எளிதாக பாடநூல் வாங்கிக் கொள்ள வசதியாக, வட்ட அளவில் செயல்படும் அரசு பொது இ-சேவை மையங்கள் மூலம் பணம் செலுத்தி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடநூல்களின் விவரம் மற்றும் விலை ஆகியவை அரசு இ-சேவை மையங்களில் உள்ள இணைய தளத்தில் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பாடநூல்கள் வாங்க விரும்பும் மாணவ, மாணவியர் இ-சேவை மையங்களில் பணம் செலுத்தி புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. இ-சேவை மையங்களில் பணம் செலுத்தி பதிவு செய்தவர்களுக்கு வீட்டு முகவரிக்கே புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

2016 பட்ஜெட் விலை உயரும்/குறையும் பொருட்கள்

மத்திய பட்ஜெட்

விலை அதிகரிக்கும் பொருட்கள்:
* கார்கள்
* சிகரெட்கள், புகையிலை, பேப்பர் சுற்றிய பீடி, குட்கா, சுருட்டு
* அனைத்து வகை பணம் கட்டுதல், ஓட்டல்களில் சாப்பிடுதல், விமான பயணம்
* ரெடிமேட் ஆடைகள், ரூ.1000க்கு மேற்பட்ட நிறுவனங்களின் ஆடைகள்
* தங்கம் மற்றும் வெள்ளி. வெள்ளி அல்லாத நகைகள்
* மினரல் வாட்டர்,
* ரூ. 2 லட்சத்துக்கு மேற்பட்ட பொருட்கள் வாங்கும் போது
* அலுமினிய சுருள்/தகடு
* பிளாஸ்டிக் பைகள்
* ரோப் வே, கேபிள் கார் பயணம்
* இறக்குமதி செய்யப்படும் கவரிங் நகைகள்
* தொழில் முறை சோலார் வாட்டர் ஹூட்டர்
* சட்டம் தொடர்பான சேவைகள்
* லாட்டரி டிக்கெட்கள்
* வாடகையில் செல்லும் அடுக்குமாடி சொகுசு பஸ்கள்
* மின்னணு வாசிக்கும் சாதனங்கள்
* விஓடுபி(வாயிஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால்) சாதனங்கள்
* இறக்குமதி செய்யப்படும் கோல்ப் கார்கள்
* தங்கக்கட்டிகள்
*வீட்டு பொருட்களை ஒரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு எடுத்துச்செல்லும் பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ் சேவை

விலை குறையும் பொருட்கள்
* காலணிகள்
* சோலார் விளக்குகள்
* ரவுட்டர்கள், பிராட்பேண்ட் மோடம்கள், செட்டாப் பாக்ஸ்கள், டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் மற்றும் ரகசிய கண்காணிப்பு கேமரா
*மின்சாரத்தில் இயங்கும் கார்கள்
*ஸ்டெர்லைஸ்ட் டையாலிசர்
* 60 சதுர மீட்டர் குறைவாக, குறைந்த விலையில் வாங்கப்படும் வீடுகள்
* மேடை நிகழ்ச்சிகளுக்கு கிராமப்புற கலைஞர்களின் சேவை
* குளிர்ப்பதன பெட்டிகளின் பயன்படுத்தப்படும் பொருட்கள்
* மைக்ரோவேவ் ஓவன்ஸ்
*சானிடரி பேட்ஸ்
* பார்வையற்றோர் நடத்தும் பிரைலி பேப்பர்

2016 பட்ஜெட் துளிகள்

மத்திய பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்

வரும் 2016-17-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தா‌க்கல் செய்தார்.

முக்கிய அம்சங்கள்

* 5 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5000 ரூபாய் வரை சலுகை

* வீட்டு வாடகைக்கான சலுகை ஆண்டுக்கு 24,000த்திலிருந்து 60,000த்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.

* இந்த நிதி ஆன்டில் திட்டமிடப்படாத செலவுகள் 14.3 லட்சம் கோடியாக கணிக்கப்பட்டிருக்கிறது.

* வருவாய் பற்றாகுறை 2015 - 16ல் 2.8 லிருந்து 2.5 சதவிகிதமாக குறைந்தது.

* சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ஆதார் எண் இணைக்கப்படும்.

* பருப்பு விலையை கட்டுப்படுத்த 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* வங்கியின் செயல்பாடுகளில் அரசு தலையிடாது.

* ஐடிபிஐ வங்கியில் அரசின் பங்கை குறைத்துக்கொள்ளும் அறிவிப்பால் அந்த பங்கு 8%
விலை உயர்ந்தது.

* இந்தியாவின் நிதி பற்றாக்குறை 3.9 சதவிகிதமாக இருந்தது. அதை 2016 - 17ல் 3.5 சதவிகிதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

* 2016 - 17ல் இந்தியாவின் மொத்த செலவு 17.78 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்ககிடப்பட்டிருக்கிறது.

* ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க ஒரு நாளில் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட இருக்கிறது.

* பொதுத்துறை வங்கிகளில் 25000 கோடி ரூபாய் கூடுதல் முதலீடு செய்யப்படும்

* சிறு தொழில்களுக்கு கடன் வழங்கும் முத்ரா திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ. 1,80,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

* 3000 புதிய ஜெனிரிக் மருத்தகம் அமைக்கப்படும்.

* விவசாயிகளுக்கு உர மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

* திட்டமிட்ட செலவுகள் 15% கடந்த ஆண்டைவிட உயர்வு.

* பொதுத்துறை வங்கிகளுக்கு மறு முதலீடு 25,000 கோடி ஒதுக்கீடு

* மாநில அரசுகளுடன் இணைந்து 160 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.

* புட் புராக்கெட், பார்மா துறைகளிலில் எஃப்டிஐ முதலீட்டு அளவு 100% அதிகரிக்கப்படும். மேலும் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.

* அணு சக்தி துறைக்கு 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* இன்ஃப்ரா துறையை மேம்பாடுத்த புதிய கிரெடிட் ரேட்டிங் உருவாக்கப்படும்.

* அனைத்து மாவட்டங்களுக்கு டயாலிசிஸ் மையங்கள் அமைக்க திட்டம்.

* அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு ஸ்கில் இந்தியா திட்டம் முலம் பயிற்சி

* நாடு முழுவதும் 1500 பன்முக திறன் வளர்ப்புப் பயிற்சி மையங்கள்

* 2016 - 17 நிதி ஆன்டில் 10,000 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டம்.

* இந்தியாவின் உள்கட்டுமானத்திற்கு 2,21,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* சாலை போக்குவரத்துகளை அதிகரிக்கும் விதத்தில் மோட்டார் வாகன சட்டங்களில் சில திருத்தங்கலை கொண்டு வரத் திட்டம்.

* பேங்க்ரப்ட்ஸி மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்!

* புதிதாக இபிஎஃப் திட்டத்தில் இணையும் தொழிலாளர்களுக்கு 8.3 சதவிகித வட்டி வழங்கப்படும்

* ஆழ்கடலில் எரிவாயு எடுக்க திட்டங்கள் சலுகை அளிக்கப்படும்!

* மூத்த குடிமக்களுக்கு ஒரு லட்சம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

* 75 லட்சம் நடுத்தர குடும்பத்தினர் தங்கள் எரிவாயு இணைப்பு மானியத்தை விட்டுக் கொடுத்திறுகின்றனர்.

* 10 பொதுத்துறை மற்றும் 10 தனியார் துறை கல்வி நிறுவனங்கள் தேர்தெடுக்கப்பட்டு அதில் பயிலும் மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி பயிற்றுவிக்கப்படும்

* மோட்டார் வண்டிகள் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்!

* தலித் மக்கள் தொழில்முனைவோராக தங்கள் வாழ்கையை மேம்படுத்திக் கொள்ள திட்டம்

* 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தலித் மக்களுக்கு எம்.எஸ்.எம்.இ யில் தனி ஹப் அமைக்கப்பட இருக்கிறது

* ஒட்டு மொத்த கிராம புறங்கள் வளர்ச்சிக்கு 87,765 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்

* எல்பிஜி கேஸ் இணைப்பை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு வழங்க 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* நெடுஞ்சாலைகளை அமைக்க ரூ.55,000 கோடி ஒதுக்கீடு!

* உயர் படிக்காக நிதி உதவி செய்ய ரூ.1000 கோடி செலவில் தனி அமைப்பு அமைக்கப்படும்!

* அடுத்த 3 ஆண்டுகளில் 6 கோடி நபர்களுக்கு டிஜிட்டல் கல்வி அறிவை பயிற்றுவிக்க திட்டம்.

* டயாலிசிஸ் செய்யும் கருவிக்கு கலால் வரி கிடையாது!

* மே 1, 2018க்கு முன் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.

* 2.87 லட்சம் கோடி கிராம பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

* 19000 கோடி ரூபாய் கிராமபுற சாலை மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

* 15000 கோடி ரூபாய் வட்டி சுமை குறைக்கப்பட திட்டம் திட்டப்பட்டுள்ளது.

* ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும்!

* சுவாச் பாரத் திட்டத்துக்கு 9,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

Sunday, February 28, 2016

தேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு


பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும், தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டுக்கான திறனறித் தேர்வில், மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு, நவம்பரில் நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியாயின.தேர்வு முடிவுகளை, www.tndge.in என்ற இணையதளத்தில், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். இரண்டாம் கட்ட தேசிய தேர்வு, மே, 8ம் தேதி நடக்கிறது. '

Friday, February 26, 2016

வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம்


முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நாளை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, 4 விதமாக அச்சடிக்கப்பட்டு வழக்கப்பட்டன.ஒரு தேர்வு அறையில் 20 பேர் அமரும் போது ஒரே விதமான வினாத்தாள் 5 பேருக்கு செல்ல வாய்ப்பு இருந்தது. இதனால் வினாத்தாள்களில் விடைகளை குறித்து, மற்றவர்களுக்கு வழங்குவதாகவும், சைகை மூலம் விடைகளை தெரிவிப்பதாகவும் புகார் எழுந்தது. இதை தடுக்க வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, பழைய முறையில் தயாரிக்கப்படவில்லை.

உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வு போன்று சீரியல் எண் மட்டும் உள்ள வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. இதில் ஒரு அறையில் உள்ள அனைவருக்கும் வெவ்வேறான விதமான வினாத்தாள் வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் கேள்வி எண் மாறுபடுவதால் முறைகேடு செய்ய முடியாது.மேலும் தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு மையத்திலும் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

10 ஆண்டு சம்பளம் குடுத்தாச்சு: சான்றிதழை பற்றி தெரியாதாம்


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகளாக சம்பளம் அளித்த பிறகும், அவர்களின் சான்றிதழ் உண்மையானதா என, கண்டுபிடிக்க முடியாமல் பள்ளிக்கல்வி துறை திணறுகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில், 2006க்கு பின், 10 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 10 ஆண்டுகளாக ஊதியம் வழங்கிய பிறகும், அவர்களின் சான்றிதழ் உண்மையானதா என, பள்ளிக் கல்வி துறை மற்றும் தேர்வுத்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டில், உயர்நிலை தலைமை ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதற்கு தகுதியான ஆசிரியர்கள், தங்கள் பெயர் விவரங்களுடன், சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த சான்று, இரண்டு ஆண்டு பயிற்சி முடித்தது தொடர்பான, தகுதி காண் பருவ சான்றிதழ் போன்றவற்றை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏனென்றால், பெரும்பாலான ஆசிரியர்களுக்கு, இன்னும் சான்றிதழின் உண்மை தன்மை கண்டறியப்படவில்லை. அத்துடன், ஆசிரியர்கள் தகுதி காண் பருவம் முடிந்து, எட்டு ஆண்டு ஆன பிறகும், பயிற்சி முடித்த சான்றிதழும் கிடைக்கவில்லை.

16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: அரசு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்


அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'டி.இ.டி.,' ஆசிரியர் தகுதி தேர்வின்றி 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளி மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணி புரிகின்றனர்.

மத்திய அரசின் கல்வி உரிமை சட்டம் 2009ல் அமலானது. அப்போது அனைவருக்கும் கல்வி இயக்கம், இடைநிலை கல்வித்திட்டம் போன்றவற்றில் மத்திய அரசின் 75 சதவீத நிதி, மாநில அரசின் 25 சதவீத நிதியுடன் ஆசிரியர்களுக்கான சலுகைகள், 700 தலைமை ஆசிரியர்கள் நியமனம், பள்ளிக் கட்டடங்களை அமைப்பது போன்ற பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டது.இந்நிலையில் மாநில அரசு கடந்த 2011 ஜன., 15ல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் குறித்து அரசாணை வெளியிட்டது. அதில் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் தேர்வாகியிருக்க வேண்டும். அல்லது அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 'டி.இ.டி.,' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் 2016 நவ., 15ல் இந்த அரசாணை வெளியிடப்பட்டு ஐந்தாண்டு நிறைவடைகிறது. இதனால், தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் கூறியதாவது: இன்னும் 9 மாதங்களில் அரசு அறிவித்த 5 ஆண்டு காலம் முடிவடையும் நிலையில் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் பணி கேள்விக்குறியாக உள்ளது. அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் நலன் காக்க வேண்டும், என்றார்.

தொழிலாளர்கள் வைப்பு நிதியில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்


தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் 12 சதவீதம் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டது. இதே அளவு தொகையை ஊழியர்களின் கணக்கில் முதலாளிகளின் பங்காக நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.

இதில் 8.3 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எஞ்சிய தொகை தொழிலாளர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு ஆண்டுதோறும் வட்டி சேர்க்கப்பட்டு வருகிறது. தற்போது 8.8 சதவீதம் அளவுக்கு வட்டி தரப்படுகிறது. 58 வயது பூர்த்தியானவுடன் வைப்பு நிதியில் சேர்ந்த தொகை மொத்தமாக ஊழியர்களுக்கு தரப்படும்.

வேலை செய்த காலத்தை பொறுத்து பென்ஷன் தரப்படுகிறது. பணிக்காலத்தில் இந்த வைப்பு நிதியிலிருந்து குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவு, திருமண செலவுகளுக்கு பணம் திருப்பிக் கொள்ளலாம். 54 வயதை கடக்கும் போது வைப்பு நிதியில் இருந்து 90 சதவீத தொகையை எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறை இருந்தது. தற்போது இந்த விதிமுறை திருத்தப்பட்டுள்ளது.

இனிமேல் 57 வயது எட்டினால் மட்டுமே 90 சதவீத நிதியை திரும்ப பெற முடியும். 58 வயது பூர்த்தியானவுடன் எஞ்சிய தொகை ெசட்டில் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பல நிறுவனங்கள் தொழிலாளர்களை 55 வயதில் ஓய்வு கொடுத்து அனுப்பி வந்தன. தற்போது அனைத்து நிறுவனங்களும் 58 வயதை ஓய்வு வயதாக வைத்துள்ளன. இதனால் ஓய்வு ஆண்டுக்கு ஒரு ஆண்டு முன்னர் அதாவது 57 வயதில் பிஎப் பணத்தை திருப்பிக் கொள்ள புதிய விதிமுறை வகுக்கப்பட்டிருப்பதாக இபிஎப்ஒ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதே போல் தொழிலாளர்களின் வைப்பு நிதியை 57 வயது கடந்த பின்னரே எல்ஐசியில் முதலீடு செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறையையும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வகுத்துள்ளது.

தொழிலாளர்கள் வைப்பு நிதியில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்


தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் 12 சதவீதம் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டது. இதே அளவு தொகையை ஊழியர்களின் கணக்கில் முதலாளிகளின் பங்காக நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.

இதில் 8.3 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எஞ்சிய தொகை தொழிலாளர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு ஆண்டுதோறும் வட்டி சேர்க்கப்பட்டு வருகிறது. தற்போது 8.8 சதவீதம் அளவுக்கு வட்டி தரப்படுகிறது. 58 வயது பூர்த்தியானவுடன் வைப்பு நிதியில் சேர்ந்த தொகை மொத்தமாக ஊழியர்களுக்கு தரப்படும்.

வேலை செய்த காலத்தை பொறுத்து பென்ஷன் தரப்படுகிறது. பணிக்காலத்தில் இந்த வைப்பு நிதியிலிருந்து குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவு, திருமண செலவுகளுக்கு பணம் திருப்பிக் கொள்ளலாம். 54 வயதை கடக்கும் போது வைப்பு நிதியில் இருந்து 90 சதவீத தொகையை எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறை இருந்தது. தற்போது இந்த விதிமுறை திருத்தப்பட்டுள்ளது.

இனிமேல் 57 வயது எட்டினால் மட்டுமே 90 சதவீத நிதியை திரும்ப பெற முடியும். 58 வயது பூர்த்தியானவுடன் எஞ்சிய தொகை ெசட்டில் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பல நிறுவனங்கள் தொழிலாளர்களை 55 வயதில் ஓய்வு கொடுத்து அனுப்பி வந்தன. தற்போது அனைத்து நிறுவனங்களும் 58 வயதை ஓய்வு வயதாக வைத்துள்ளன. இதனால் ஓய்வு ஆண்டுக்கு ஒரு ஆண்டு முன்னர் அதாவது 57 வயதில் பிஎப் பணத்தை திருப்பிக் கொள்ள புதிய விதிமுறை வகுக்கப்பட்டிருப்பதாக இபிஎப்ஒ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதே போல் தொழிலாளர்களின் வைப்பு நிதியை 57 வயது கடந்த பின்னரே எல்ஐசியில் முதலீடு செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறையையும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வகுத்துள்ளது.

Thursday, February 25, 2016

புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு

  புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க, அரசாணை வெளியிட்டுள்ளதால் நீண்டகால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு அறிமுகப் படுத்தியது. அதற்காக ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது. திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆனபின்பும் இதில் சேர்ந்த யாராலும் ஓய்வூதியம் பெற முடியவில்லை.

ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆசிரியர், அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்.,19அன்று, தமிழக முதல்வர், சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து, ஓய்வு பெற்ற மற்றும்ராஜினாமா செய்த, மரணம் அடைந்த, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு தொகை உடனடியாக வழங்கப்படும் என அறிவித்தார். இதனை தொடர்ந்து, பிப்.,22ல் அன்று தமிழக அரசின் நிதித்துறை சார்பில், அரசாணை எண்-59 வெளியிடப்பட்டுள்ளது.

இத்தொகையை பெற, கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குநர் அலுவலகத்தில், விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் கிடைத்த ஒரு மாத காலத்திற்குள் தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான கணக்கு தலைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தொகை அனைத்தும் மின் பரிவர்த்தனை மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் கடந்த பல ஆண்டுகளாக நீடித்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த திண்டுக்கல் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது இந்த அரசாணையால், ஓய்வூதியம் குறித்த சர்ச்சைக்கு தற்காலிக தீர்வு மட்டுமே கிடைத்துள்ளது. நிரந்தர தீர்வு வேண்டுமெனில் தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்தவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், என்றார்.

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு... 15 நிமிடம் தாமதமானால் தேர்வு எழுத முடியாது


பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது' என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. இதற்கான விதிமுறைகளை, சுற்றறிக்கையாக ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது.

அதில், மாணவர்கள் குறித்த நேரத்திற்கு தேர்வு அறைக்கு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.காலணிக்கு தடை

*பிளஸ் 2 தேர்வு அறைக்குள், மாணவர்கள் தங்கள் உடைமை களை கொண்டு செல்லக் கூடாது; தேர்வு அறை முன்பும் வைத்திருக்க கூடாது. தேர்வு மைய வளாகத்தில் ஒதுக்கப்பட்ட அறைகளில் உடைமைகளை வைக்கலாம்

* தேர்வு அறைக்கு அலைபேசி மற்றும் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வரக் கூடாது*பிட் அடித்தல், காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்

*தேர்வு அறைக்குள் காலணிகள் அணிந்து வரக்கூடாது. காலணிகளை வெளியே கழற்றி வைத்த பிறகே, தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்

*தேர்வு அறைக்கு, 15 நிமிடம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கிடையாது. இவ்வாறு தேர்வுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Wednesday, February 24, 2016

முன் பதிவில்லா ரெயில் டிக்கெட்டுகளுக்கு புதிய விதிமுறை: மார்ச் 1-ந் தேதி முதல் அமல்


ரெயிலில் சாதாரண வகுப்பில் (முன் பதிவு இல்லாத டிக்கெட்டில்) பயணம் செய்கிறவர்களுக்கு இதுவரை எந்த விதிமுறையும் இல்லாமல் இருந்து வந்தது. இப்போது அதில் ரெயில்வே கடிவாளம் போடுகிறது. 199 கி.மீ. வரையிலான இடங்களுக்கு ரெயிலில் முன்பதிவில்லா டிக்கெட்டுகள் வாங்கி பயணம் செய்கிறவர்களுக்கு புதிய விதிமுறையை ரெயில்வே அறிமுகம் செய்கிறது. அதன்படி, எந்த இடத்தில் இருந்து பயணத்தை தொடங்க வேண்டுமோ அந்த இடத்தில் இருந்து டிக்கெட் வாங்கிய 3 மணி நேரத்தில் பயணத்தை தொடங்கி விட வேண்டும் அல்லது நீங்கள் போக வேண்டிய இடத்துக்கான முதல் ரெயிலில் பயணத்தை தொடங்கி விட வேண்டும்.

இவ்விரண்டில் எது தாமதமாக நேருகிறதோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 199 கி.மீ., தொலைவிலான இடத்துக்கு சென்று விட்டு, அங்கிருந்து திரும்பி வருவதற்கு முன்கூட்டியே டிக்கெட் பெறும் முறை வாபஸ் ஆகிறது. இந்த விதிமுறைகள் மார்ச் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது.