இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, November 15, 2015

'தூய்மை இந்தியா' வரி அமலால் செலவுகள் அதிகரிப்பு: ரயில், மொபைல் போன் கட்டணங்கள் உயர்வு


மத்திய அரசின், 'சுவச் பாரத்' எனப்படும், 'துாய்மை இந்தியா' திட்டத்திற்காக, சேவை வரியில், 0.5 சதவீத கூடுதல் வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், செலவுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ரயில், மொபைல் போன் உள்ளிட்ட சேவைகளுக்கு, கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, அருண் ஜெட்லி, நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையில், 'அனைத்து சேவைகள் அல்லது குறிப்பிட்ட சேவைகளுக்கு, துாய்மை இந்தியா திட்டத்திற்காக, வரை கூடுதல் வரி வசூலிக்க, அரசு திட்டமிட்டுள்ளது' என, தெரிவித்திருந்தார். அதன் படி, நேற்று முதல், அனைத்து சேவைகளுக்கும், துாய்மை இந்தியா திட்டத்திற்காக, 0.5 சதவீதம் அல்லது அரை சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள, 14 சதவீத சேவை வரியுடன், 0.5 சதவீதம் கூடுதல் வரியை சேர்த்து, தற்போது, 14.5 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. இந்த கூடுதல் வரி மூலம் கிடைக்கும் நிதி, துாய்மை இந்தியா திட்டத்திற்காக செலவிடப்படும்.

ரயில் கட்டணம்: புதிய வரி விதிப்பால், நேற்று முதல் ரயிலில், முதல் வகுப்பு மற்றும், 'ஏசி' வகுப்பு கட்டணங்கள் உயர்ந்துள்ளன. 'ரயில் பயணக் கட்டணத்தில், 30 சதவீதத்திற்கு மட்டுமே, சேவை வரி விதிக்கப்படுகிறது. அதனால், 'முதல் வகுப்பு மற்றும் அனைத்து, 'ஏசி' வகுப்பு கட்டணங்களில், 4.35 சதவீதம் மட்டுமே வரி உயர்வு இருக்கும்' என, ரயில்வே அமைச்சகம்தெரிவித்துள்ளது. இதன் படி, சென்னை - டில்லி இடையே, இரண்டாம் வகுப்பு, 'ஏசி' பெட்டி கட்டணம், 140 ரூபாய் அதிகரித்துள்ளது. டில்லி - மும்பை இடையே, மெயில் மற்றும் விரைவு ரயில்களில், 'ஏசி' வகுப்புகளுக்கான கட்டணம், 206 ரூபாய் உயர்ந்துள்ளது. டில்லி - ஹவுரா இடையே, மூன்றாம் வகுப்பு, 'ஏசி' கட்டணம், 102 ரூபாய் அதிகரித்துள்ளது.

உணவகம்: 'ஏசி' உணவகங்களில், மொத்த கட்டணத்தில், 40 சதவீதத்திற்கு மட்டுமே சேவை வரி விதிக்கப்படுகிறது. உதாரணமாக, 100 ரூபாய் உணவுக்கு, 40 ரூபாய்க்கு மட்டுமே, 14 சதவீத சேவை வரி வசூலிக்கப்படுகிறது. இதன் படி, மொத்த உணவு கட்டணத்தில், சேவை வரி, 5.6 சதவீதமாக உள்ளது. தற்போது, கூடுதலாக, 0.5 சதவீத வரி விதிக்கப் பட்டுள்ளதால், இது, 0.2 சதவீதம் உயர்ந்து, 5.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.அது போல், மொபைல் போன் சேவைக் கட்டணமும் உயர்ந்துள்ளது. நடப்பு, 2015 - 16ம் நிதியாண்டில், சேவை வரி வசூல், 2.09 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
சேவை வரி மற்றும் துாய்மை இந்தியா வரி மூலம், 2016, மார்ச் வரையிலான, நான்கரை மாதங்களில், 3,800 கோடி ரூபாய் கிடைக்கும் என, மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.

'பான்' கார்டு கட்டணமும் உயர்வு: மொத்த கட்டணத்தில், கழிவு போக, எஞ்சிய தொகைக்கோ அல்லது, 2006ம் ஆண்டு, சேவை வரி மதிப்பீட்டு சட்ட விதிகளின் படியோ, சேவை வரி விதிக்கப்படுகிறது''சுவச் பாரத் திட்டத்திற்கான கூடுதல் வரி மூலம், ஓராண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,'' என, மத்திய நிதித்துறை செயலர், ஹஸ்முக் அதியாதெரிவித்துள்ளார் சேவைகளுக்கு, 0.5 சதவீதம் கூடுதல் வரி யால், 100 ரூபாய்க்கு, 50 பைசா வீதம்கூடுதலாக செலவாகும்வருமான வரி துறை, நிரந்தர கணக்கு எண் எனப்படும், 'பான் கார்டு' வழங்க, 93 ரூபாயும், அதற்கு, 14 சதவீத சேவை வரியும் சேர்த்து, 106 ரூபாய் வசூலிக்கிறது. சேவைவரி அதிகரிப்பால், இது, 107 ரூபாயாக அதிகரித்துள்ளதுவெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு, பான் கார்டு வழங்க, 93 ரூபாயுடன், சேவை வரியாக, 125 ரூபாயும், தபால் செலவிற்காக, 771 ரூபாயும் வசூலிக்கப்படுகிறதுசேவைவரி அதிகரிப்பால், ரயில்வேக்கு, பயணிகள் போக்குவரத்து மூலம், 35 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

'சுவச் பாரத்' வரியை, மற்றுமொரு வரியாக கருதக்கூடாது. இதை, துாய்மை இந்தியா திட்டத் தில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பாக கருத வேண்டும். இந்த வரியின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும், நாட்டை துாய்மையாக வைத்திருப்பதற்கான திட்டங்களுக்கு செலவிடப்படும்.

No comments:

Post a Comment