இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, August 09, 2015

தேசிய திறனறி தேர்வு அறிவிப்பு

'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனறித் தேர்வு நவ., 8ம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில் மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்த கல்வி ஆண்டுக்கான திறனறித் தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இதன்படி மாநில அளவிலான முதற்கட்ட தேசிய திறனறித் தேர்வு தமிழகத்தில் நவ., 8ம் தேதி நடக்கும்.

இதற்கான விண்ணப்ப அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வியின் தேர்வுத் துறை தனியே அறிவிக்கும். இதில் வெற்றி பெறும் அனைத்து மாநில மாணவர்களுக்கும் தேசிய அளவில் இறுதிகட்ட தேர்வு அடுத்த ஆண்டு மே 8ம் தேதி நடக்கும். இந்த தேர்வில் மனநிலை தாள், மொழித்தாள், கல்வித்திறன் அறிதல் என மூன்று தாள்கள் எழுத வேண்டும். தலித் மாணவர்களுக்கு, 15 சதவீதம், பழங்குடியினருக்கு, 7.5 சதவீதம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

No comments:

Post a Comment