இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, August 07, 2015

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நாளை கடைசி நாள்!

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட நான்கு பதவிகளில் 74 காலி இடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் - 1 தேர்வுக்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். இதுவரை, 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். தமிழகத்தில் துணை கலெக்டர் -19, டி.எஸ்.பி., - 26, வணிகவரி உதவி கமிஷனர் - 21, மாவட்டப் பதிவாளர் - 8 என, மொத்தம் 74 காலியிடங்கள் இருக்கின்றன, இந்த இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நவம்பர், 8ம் தேதி தேர்வு நடத்துகிறது.

இதற்கு ஜூலை 10ம் தேதி முதல் 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கும் பணி துவங்கியது. டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது. நாளை நள்ளிரவு, 11:59 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை வரும் 11ம் தேதி வரை வங்கி மூலம் செலுத்தலாம்.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் கூறும்போது, ''நேற்று மாலை, 6:00 மணி வரை 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் இருந்தாலும், கடைசி நேர அவசரத்தை தவிர்க்க, தேர்வர்கள் முன்கூட்டியே பதிவுசெய்வது நல்லது,''என்றார்

No comments:

Post a Comment