இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, August 08, 2015

படிக்கட்டில் தொங்கும்மாணவர்களுக்கு 'அட்வைஸ்'

'பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில், அறிவுரை வழங்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அரசு வழங்கும் பஸ் பாஸ் பயன்படுத்தி, அரசு பஸ்களில், பள்ளிகளுக்கு செல்கின்றனர். அப்படி செல்லும் போது, பல மாணவர்கள், பஸ்சின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக, ஆங்காங்கே, வாகனங்களில் அடிபட்டு, மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு, ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், கூறியுள்ளதாவது: பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில், அறிவுரை வழங்க வேண்டும். பஸ் நிறுத்தங்களில், மாணவர்கள் முண்டியடித்துக் கொண்டு நிற்காமல், பஸ் வரும் போது ஒதுங்கி நிற்கும்படியும், ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment