இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, August 23, 2015

24-8-15 Dinamani news

Dinamani.news

பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க ஆசிரியர் கூட்டணி முடிவு

செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பது என ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருப்பூர் கே.ஆர்.சி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணசாமி, பொறுப்பாளர் அருள்ஜோதி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் மலர்விழி சிறப்புரையாற்றினார்.
ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக் குழு முரண்பாடுகளை முற்றிலும் நீக்க வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை பங்கு விற்பனை, தொழிலாளர் விரோதச் சட்டங்கள், கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளதற்கு எதிர்ப்பு, கல்வி உரிமைச் சட்டம், மானியம் ரத்து உள்ளிட்டவற்றால் சாமானிய ஏழை மக்களும், அரசு ஊழியர்களும் கடுமையாய் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பெரும் திரளாகக் கலந்துகொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment