இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 01, 2015

தமிழகம் முழிவதும் மூன்றாண்டுகளில் 400 ஆசிரியர்பயிற்சி நிறுவனம் மூடல்

தமிழகத்தில் 30 அரசு ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள், 40 அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனங்கள், 746 தனியார் ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் என மொத்தம் 816 ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு ஆரம்பப்பள்ளிகளில் சிறுவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவகளை நியமனம் செய்தது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அவர்கள் பாடம் நடத்தநியமிக்கப்பட்டனர். இதனால் ஏராளமான ஆசிரியர்கள் தேவைப்பட்டனர்.

குறிப்பாக பெண் ஆசிரியர்கள் அதிகம் நியமிக்கப்பட்டதால் பெண்கள் அதிகளவில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து படித்தனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பயிற்சி பள்ளியை துவக்க அனுமதியளிக்கப்பட்டது. தற்போது நிலைமை தலை கீழாக மாறியுள்ளது. அரசு ஆரம்பப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை 3 வயது முடிவதற்கு முன்பே தனியார் “பிளே’ ஸ்கூலில் சேர்க்கின்றனர். இதைத் தொடர்ந்து மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.சி என தனியார் ஆங்கில வழிப்பள்ளிகளில் கல்வியை தொடரும் நிலை உள்ளது. இதனால் குழந்தைகள் அரசு ஆரம்பப்பள்ளிகளுக்கு வருவது வெகுவாக குறைந்துவிட்டது. மேலும் தமிழக அரசு இதற்கு முன்பு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்தவர்கள் 5ம் வகுப்புக்கு மேல் பாடம் நடத்தக்கூடாது என உத்தரவை போட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் அரசு பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களும் கணிசமாக குறைந்து விட்டது. வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தாலும், தனியார் கல்வி நிறுவனங்கள் ஏராளமாக வந்து விட்டதாலும் போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லை. இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவ- மாணவிகள் சேர்க்கை இன்றி 400 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. கடந்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கு, இதுவரை ஆசிரியர் பணி கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் பெரும்பாலானோருக்கு ஆசிரியர் பயிற்சி படித்தால், இந்த ஜென்மத்திற்கும் வேலை கிடைக்காது என்ற எண்ணம் வந்துள்ளது. எனவே பெரும்பாலான மாணவர்கள் பிளஸ்2 முடித்ததும் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளை படிக்க விருப்பப்படுகின்றனர். சிலர் ஆராய்ச்சி படிப்புகளில் சேருகின்றனர். இன்றைய காலக் கட்டத்தில் ஆசிரியர் பயிற்சி படிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய் விட்டது. அனைத்து அரசு துறைகளிலும், தனியார் துறைகளிலும் லஞ்சம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் சிலர் தங்களது பிள்ளைகளை ஆசிரியர் பயிற்சியை படிக்க வைத்து, மேல் அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து, ஆசிரியர் பணிக்கு சேர்த்து விடுகின்றனர்.

ஆனால் ஏழை, எளிய மக்கள் தங்களது பிள்ளைகளுக்கு எப்போது அரசு வேலை கிடைக்குமோ, அப்பொழுது கிடைக் கட்டும். அது வரை தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லட்டும் என்று நினைத்து, காலத்தை போக்கி வருகின்றனர். இதனால் ஆண்டு தோறும் ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைய தொடங்கியது. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே முடியாமல் மூடும் அபாயத் தில் உள்ளனர்.

கட லூர் மாவட்டத்தில் அதே போன்று 10 பள்ளிகளில் முதலாமாண்டு சேர்க்கையே இல்லாமல் உள்ளது. இரண்டாமாண்டு மாணவர்கள் மட்டுமே படித்தனர். இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. நடப்பு ஆண்டிற்கான கவுன்சிலிங் வரும் ஜூலை 1ம் தேதி துவங்குகிறது. விண்ணப்பம் செய்த அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கவுன்சிலிங் முடிந்த பின்னர் தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை குறித்து தெரியவரும். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மேலும் பல ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களின் மூடு விழா நடத்த தயாராக உள்ளன.

No comments:

Post a Comment