இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, July 18, 2015

செப் 2 வேலை நிறுத்த போராட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கலந்து கொள்ளும்

தமிழகம் ஆசிரியர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு:1200 பள்ளிகளை மூட தமிழக அரசு முயற்சி பதிவு செய்த நேரம்:2015-07-19 02:23:55 திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில் மாநில பொதுச்செயலாளர் பாலசுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆக.1ல் தொடர் முழக்க போராட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆரம்பப்பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்வர். தேவையான பணியிடங்களை நிரப்பிய பின்னரே உபரி பணியிடங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

இடைக்கால மாறுதல் வழங்குவதில் அமைச்சர்கள் தலையீட்டை தவிர்க்க வேண்டும். ஒளிவு மறைவின்றி கலந்தாய்வு மாறுதல் நடத்த வேண்டும். சுயநிதி பள்ளிகளுக்கு வரைமுறையில்லாமல் அனுமதி வழங்கி வருகின்றனர். அதே நேரம் 1200க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை முட அதிமுக அரசு முயற்சித்து வருகிறது. தேர்தலின் போது ஆசிரியர் சங்கங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. செப்.2ல் நடைபெறவுள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment