இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, May 12, 2015

நான் கு மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள்

ஜார்க்கண்ட், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், மேகாலயா ஆகிய 4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன் மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக ஒடிசாவை சேர்ந்த பாஜ தலைவர் திராபடி முர்மு (56) நியமிக்கப்பட்டார்.

ஏற்கனவே அங்கு ஆளுநராக இருந்த சயீத் அகமது மணிப்பூர் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2011ம் ஆண்டு ஆளுநராக நியமிக்கப்பட்ட சயீத் அகமதுவின் பதவிக்காலம் அடுத்தாண்டு செப்டம்பரில் முடிகிறது. இதே போல, காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அருணாச்சல பிரதே ஆளுநரான நிர்பாய் சர்மா, மிசோரமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 2018ல் முடிகிறது. இவருக்கு பதிலாக ஜே.பி.ரக்கோவா அருணாச்சல பிரததேசத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த திரிபுரா மாநிலத்துக்கு பாஜ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ததாகடா ராய் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா மாநில ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தலைவர் வி.சண்முகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment