இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, May 20, 2015

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை அரசு பள்ளிகளில் உடனடியாக சேர்க்க வேண்டும்

அரசுப் பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியரை உடனடியாக அதே பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவியரை உடனடியாக அவர்கள் படித்த பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அனைத்து மேனிலைப் பள்ளிகளிலும் ஜூன் 15ம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புகளை தொடங்க வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அந்த பள்ளியில் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அளவில் மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் பாடப் பிரிவை அந்த பள்ளியில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டில் ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் படித்த பாடப்பிரிவுக்கு  உடனடியாக இந்த கல்வி ஆண்டில் அதற்கான ஆசிரியர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடப் பிரிவு மாற்றம் செய்ய வேண்டிய நிலை அல்லது புதிய பாடப்பிரிவு ஏற்படுத்த வேண்டி நிலையே உள்ள பள்ளிகளில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தாலுகா அளவில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கை குறித்த முன்னேற்ற அறிக்கையை ஒவ்வொரு வாரமும்  பள்ளிக் கல்வி இயக்குரின் மின் அஞ்சல் முகவரியில் அனுப்ப வேண்டும். இவ்வாறு இயக்குநர் கண்ணப்பன் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment