இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, May 12, 2015

மாத இறுதியில் சிபிஎஸ்சி தேர்வு முடிவு

சி.பி.எஸ்.சியின் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்வுகள் நடைபெற்றது. பத்தாம் வகுப்பில் மொத்தம் 13 லட்சத்து 73 ஆயிரத்து 853 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
இதில் 8 லட்சத்து 17 ஆயிரத்து 941 பேர் மாணவர்கள், 5 லட்சத்து 55 ஆயிரத்து 912 பேர் மாணவிகள். இது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 3.37 சதவீதம் அதிகரிப்பாகும்.
அதே போன்று பிளஸ் 2 தேர்வை 10 லட்சத்து 40 ஆயிரத்து 368 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 6 லட்சத்து 7 ஆயிரத்து 383 மாணவர்களும் 4 லட்சத்து 32 ஆயிரத்து 985 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்கள் தங்களுது பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து முடிவுகளை மதிப்பெண்களுடன் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை www. cbseresults.nic.in என்ற இணையத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment