இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, May 17, 2015

சிவில் சர்வீஸ் தேர்வு

மத்திய அரசுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி.,யின் செயலர் ஆசிம் குரானா எழுதியுள்ள கடிதம்: கடந்த ஆண்டு, 9.45 லட்சம் பேர், சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு எழுதினர். இந்தாண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு, ஆக., 23ம் தேதி நடக்கிறது; இதில், 13 லட்சம் பேர் பங்கேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும், 71 இடங்களில், 3,000த்திற் கும் அதிகமான மையங்களில், தேர்வு நடைபெற உள்ளது. அந்தந்த கல்வி மையங்களின் தலைவர்கள், தேர்வை மேற்பார்வைஇடுவர். எனினும், தேர்வுக்கு தேவைப்படும் அதிகாரிகளில், குறிப்பாக, உதவி மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோரில், 50 சதவீதத்தை, அதாவது, 5,000 பேரை, யு.பி.எஸ்.சி., வழங்க வேண்டியுள்ளது. அதனால், இப்பணிக்கு தேவையான, 'குரூப் ஏ' மற்றும் 'குரூப் பி' பணியாளர்களை அனுப்புமாறு, அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளை அறிவுறுத்தக் கோரி, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை செயலருக்கு, யு.பி.எஸ்.சி., கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment