இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 24, 2015

ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்களின் அவஸ்த்தை

தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் ஏறக்குறைய 2000 உள்ளன. அதேபோல, இரு ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள் 9000 உள்ளன. அதில் ஒரு ஆசிரியர் அலுவலக வேலையாக வெளியில் சென்றால், மற்றொரு ஆசிரியர் தான் 1 முதல் 5ம் வகுப்பு வரை பார்த்துக் கொள்ள வேண்டும். ஐந்து வகுப்புகளுக்கும் அவர்தான் பாடம் நடத்த வேண்டும். இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் பலர் விருப்பத்துடனும் சமூகநோக்குடனே பணியாற்ற வருகின்றனர்.

ஆனால், அவர்களின் திறமையை மாணவர்களுக்கு பயன்படுத்தாமல், அவர்களை அலுவலக பணி, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக பணிகளுக்கும் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. இதனால் ஓராசிரியர் மற்றும் இரு ஆசிரியர் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், கல்வி கற்பிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

No comments:

Post a Comment