இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, March 14, 2015

1000 அரசு பள்ளிகள் மூடும் அபாயம்

மாணவர்கள் சேர்க்கை குறைகிறது: 1000 அரசு பள்ளிகள் மூடும் அபாயம்?

தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில்  உள்ள அரசு  பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அரசு துவக்கப்பள்ளிகளில் 25 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற  விகிதம் கடைப்பிடிக்க வேண்டும்.  தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் உள்ள 10,000 அரசு துவக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.  இவர்கள் தான் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களு க்கு பாடங்களை எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை உள்ளது.  2 ஆசிரியர்களில் ஒருவர் விடுமுறையில்  சென்றுவிட்டால், ஒருவர் மட்டுமே பள்ளியை கவனித்து கொள்ள வேண்டிய  நிலை உள்ளது. கல்வித்துறை, தேர்தல், சமூக நலம் என பல்வேறு பணிகளும்  ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன.

துவக்கப்பள்ளிகளில் பெரும்பாலும் ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் மாணவர்களின் கல்வித்தரம் குறையும் வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு  பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாகவே அரசு  துவக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்த பள்ளிகளில் உள்ள 1,000 ஆசிரியர் பணியிடங்களை மீண்டும் திரும்ப ஒப்படைக்க தொடக்க கல்வி இயக்ககம் முடிவு செய்து உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் தற்போது 1,000 ஆசிரியர் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டதால் வரும்  கல்வியாண்டில் 1,000  துவக்கப்பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு துவக்கப்பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்தவும், கூடுதலாக ஆசிரியர் பணியிடங்களை நியமிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் தனியார்  பள்ளிகளை ஊக்குவிக்கும் விதம £க அரசு துவக்கப்பள்ளிகளை மூட மறைமுக முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

No comments:

Post a Comment