இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, February 20, 2015

தொழிலாளர் வங்கி துவக்க பிஎப் நிறுவனம் திட்டம் : உறுப்பினர்களுக்கு கடன் வழங்க முன்னுரிமை

லாபத்தை அதிகரிக்கவும், தொழிலாளர்களுக்கு கடன் வழங்கும் வகையிலும் தொழிலாளர் வங்கி துவக்க பிஎப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சுமார் 6.5 லட்ம் கோடி தொழிலாளர் நிதியை நிர்வகித்து வருகிறது. இதில் சுமார் 5 கோடி தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தொழிலாளர்களின் நிதியை எந்த வகையில் முதலீடு செய்வது என்பது குறித்து தொழிலாளர் அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டங்களும் பல முறை நடத்தப்பட்டு வந்துள்ளன. தொழிலாளர் நிதியை பங்குகளில் முதலீடு செய்வது மற்றும் வீட்டுக்கடன் வழங்குவதற்கான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்து கடந்த ஆண்டு இறுதியில் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆராய நிபுணர் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. வருங்கால வைப்பு நிதி நிறுவன சந்தாதாரர்களுக்கு குறைந்த விலை பிரிவிலான வீடுகள் வாங்குவதற்கு உதவுவது குறித்தும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பிஎப் நிதியின் ஒரு பகுதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய லாம் அல்லது வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து, அதன் சந்தாதாரர்கள் வீடு வாங்குவதற்கு உதவ முடியும் என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தொழிலாளர்களுக்கு குறைந்த விலை வீடு வழங்கும் திட்டம் மாநில அரசின் வீட்டு வசதி வாரியத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட திட்டம் உள்ளது. இந்த திட்டத்துக்கு வரவேற்பு உள்ள அதேநேரத்தில், பங்கு சந்தை முதலீட்டுக்கு எதிர்ப்பு உள்ளது. பங்கு வர்த்தகம் நிலையானதாக இல்லை என்பதோடு, திடீர் இழப்பு ஏற்பட்டால் சமாளிப்பது எப்படி என்ற குழப்பமும் உள்ளது. தொழிலாளர் தொடர்புடைய விஷயம் என்பதால் இதில் கவனமாக கையாளப்பட வேண்டும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக் காது என்று பல உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் வைப்பு நிதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என்று சிலர் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி தொழிலாளர்களின் நிதியை கொண்டு, அவர்களுக்கென நிதிச்சேவைகள் அளிப்பது குறித்தும் சமீபத்தில் விவாதம் செய்யப்பட்டது. தொழிலாளர் துறை செயலாளர் கவுரி குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தொழிலாளர் வங்கி அமைப்பது பற்றி  ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொழிலாளர்களுக்கு வங்கி சேவை அளிக்கும் நோக்கில் தொழிலாளர் வங்கி அமைப்பது பற்றி மத்திய வாரிய குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்த வங்கி பிஎப் நிறுவனத்துக்கு போட்டியாக இருக்காது.

அதேநேரத்தில் தொழிலாளர்களுக்கு நிதிச்சேவை அளிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கும். தொழிலாளர்களுக்கு நிரந்தர பிஎப் எண் வழங்கப்பட்டது போல, முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட வங்கியாக இது இருக்கும். இதுபற்றி நிதிச்சேவைகள் துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார். தொழிலாளர் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தொழிலாளர் வங்கி துவக்குவது குறித்த பரிந்துரை பரிசீலனையில் உள்ளது. விரைவில் முடிவு செய்யப்படும். இந்த வங்கி வருவாயை அதிகரிப்பதையும், கடன் வழங்குவதையும் நோக்கமாக கொண்டிருக்கும். பிஎப் உறுப்பினர்களுக்கு கடன் வழங்க முன்னுரிமை அளிக்கும் திட்டமும் உள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment